Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே வடக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம்! - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே வடக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம்! - சம்பந்தன்

'அரசின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசு வர்த்தமானி அறிவித்தல் விடுத்த பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளும் கலந்துரையாடி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்க்கமான முடிவெடுப்போம். இதுவரைக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை.'

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டக் கிளையின் உறுப்பினர்களுக்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (26.05.13)பகல் திருகோணமலை நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உரையாற்றும்போது தெரிவித்தவை வருமாறு:

 

தமிழர் தாயகத்தில் இன்று இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தமிழ் மக்களின் சொந்தக் காணிகள் அரசால் திட்டமிட்டு சுவீகரிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. கூட்டமைப்பின் ஆதாரவாளர்கள், முன்னாள் போராளிகள், போராளிகளின் உறவினர்கள் இராணுவப் புலனாய்வாளர்களினால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பரில் நடத்துவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு அறிவித்துள்ளார்.

 

ஆனால், மஹிந்த அரசின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

வடக்குத் தேர்தல் நடந்தாலும் அது வன்முறை எதுவுமின்றி நீதியாக நடக்குமா என்பதும் கேள்விக்குறியே.

 

அதேவேளை, வடக்குத் தேர்தலுக்கு முன்னர் 13வது அரசமைப்பு திருத்தத்தில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் அரசு பிடுங்கி எடுத்துவிடும் போலத் தென்படுகின்றது.

 

எனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அரசு வர்த்தமானி அறிவித்தல் வந்த பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளும் கலந்துரையாடி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்க்கமான முடிவெடுப்போம். இதுவரைக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை.

 

இதேவேளை, அரசின் கருத்து இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, கோத்தபாய ராஜபக்ஷ போன்றோர் கூட்டமைப்பைப் பற்றியும், 13வது அரசமைப்புத் திருத்தம் மற்றும் வடக்குத் தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்களின் இனவாதக் கருத்துக்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

 

இதேவேளை, தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அரசின் மிரட்டல்களுக்கு அடிபணியக்கூடாது.

 

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்களில் இன்னும் மூன்று ஆசான்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தால் இன்று கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கும். கிழக்குத் தமிழ் மக்கள் அனைவரும் அன்று அணிதிரண்டுபோய் வாக்களித்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கும். இனிவரும் தேர்தல்களில் இந்தத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது. வாக்குரிமை ஒன்றுதான் இன்று நம்மிடம் மிஞ்சியிருக்கின்றது.

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=a00e1a3a-141a-4cbf-b0d9-1285f35b4498

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே வடக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம்! - சம்பந்தன்

 

இதேவேளை, தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அரசின் மிரட்டல்களுக்கு அடிபணியக்கூடாது.

 

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்களில் இன்னும் மூன்று ஆசான்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தால் இன்று கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கும். கிழக்குத் தமிழ் மக்கள் அனைவரும் அன்று அணிதிரண்டுபோய் வாக்களித்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கும். இனிவரும் தேர்தல்களில் இந்தத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது. வாக்குரிமை ஒன்றுதான் இன்று நம்மிடம் மிஞ்சியிருக்கின்றது.

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=a00e1a3a-141a-4cbf-b0d9-1285f35b4498

நீங்கள் கூறும் இந்தக் கருத்தினைச் செயல்வடிவமாக்க நீங்கள் எடுத்த

முயற்சிகள் என்ன என்பதையும் மக்களுக்கு கூறுங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.