Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்காத ஒரே நாடு இலங்கை என்கிறார்; பசில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின்  மின்சார தேவைகளில் 90 சதவீதமானவை தற்சமயம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ஜப்பானிய பூலோகவியல் எரிசக்தி கொள்கைகள் தொடர்பான நிறுவனப்பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாட்டில் மின்சார தேவைகளில் 90 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனினும் மிகுதியாக இருக்கின்ற வீதமும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு நாடெங்கிலும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும்.
 
அத்துடன் தற்போது 24 மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்காத ஒரே நாடாக இலங்கை உள்ளது.
 
எனினும் இலங்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு நடவடிக்கைகளுக்குத் தேவையான மின்சக்தி உற்பத்தியை சூழலுக்குக்குகந்ததாகவே மேற்கொள்ள வேண்டும் 
 
இந்த கலந்துரையாடலின் போது, ஜப்பானிய பூலோகவியல் எரிசக்தி கொள்கைகள் தொடர்பான நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டொசிக்கோ பூசி, புதிய மின்சக்தி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் கசுவா யூறுசாவா உட்பட பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.
 
இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் இலங்கையின் மின்உற்பத்தி மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்காத ஒரே நாடு இலங்கை என்கிறார்; பசில்

 

இவர் தன்னுடைய  வீடு தான் உலகம் என்கிறாரா???

24 மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்காத ஒரே நாடு இலங்கை என்கிறார்; பசில்

 

இவர் தன்னுடைய  வீடு தான் உலகம் என்கிறாரா???

 

 

இந்தத் தலைப்பைப் பார்க்கும் போது இதே எண்ணம் முதலில் என் மனதில் வந்தது.

மேலும், அந்தாள் தப்பித் தவறி ஒரு பெரிய உண்மையையும் சொல்லிவிட்டுதோ என்றும் நினைச்சன் - அதாவது வடக்கு, கிழக்கு, மலையகம் எல்லாம் சிறிலங்காவின் ஆட்சி எல்லைக்குள் இல்லை.  இதன் மூலம் இந்தாள் மகிந்தவை கவிழ்க்க திட்டம் போட்டிருக்கலாம் தானே.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பைப் பார்க்கும் போது இதே எண்ணம் முதலில் என் மனதில் வந்தது.

மேலும், அந்தாள் தப்பித் தவறி ஒரு பெரிய உண்மையையும் சொல்லிவிட்டுதோ என்றும் நினைச்சன் - அதாவது வடக்கு, கிழக்கு, மலையகம் எல்லாம் சிறிலங்காவின் ஆட்சி எல்லைக்குள் இல்லை.  இதன் மூலம் இந்தாள் மகிந்தவை கவிழ்க்க திட்டம் போட்டிருக்கலாம் தானே.

 

 

உண்மைதான்

மனதளவில் அவர்களும் அதை மறந்துவிட்டார்கள்.

அவை வேறு வேறு தேசங்கள்தான். (மகிந்தவுக்கு பின்னால திரிந்தாலும் பள்ளிக்கூடம்போன மனுசனாச்சே :lol: )

நன்றி

http://www.adaderana.lk/tamil/news.php?nid=40611

 

1834259503index.jpg

இருளில் தவிக்கும் தமிழர் பகுதிகளுக்கு மின்சாரம் பெற்றுதர நடவடிக்கை

June 20, 2013  03:48 pm

lg-share-en.gif

மின்சார வசதியின்றி தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் அடையாளங்காணப்பட்டு அவற்றிற்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வருடம் பல மலையக தோட்டப்புறங்களுக்கு மின்சார வசதியைப் பெற்றுக் கொடுத்திருந்தோம். இவ்வருடம் களுத்துறை, கேகாலை, வவுனியா மாவட்டத்திலுள்ள பல பெருந்தோட்டங்களும், கிராமங்களும் அடையாளங்காணப்பட்டு அவற்றிற்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மின்வலு சக்தி அமைச்சர் திருமதி பவித்ரா தேவி வண்ணியாராய்ச்சி அவரது அமைச்சில் சந்தித்து ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பின் போது மேலும் பல பெருந்தோட்டப் புறங்களையும் கிராமங்களையும் அடையாளங்கண்டு எதிர்காலத்தில் அவற்றிற்கும் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கேகாலை, களுத்துறை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டங்களில் மின்சார வசதியின்றி இருக்கும் தோட்டங்களை அடையாளங் காணப்படுவதற்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்க பொறுப்பாளரும் தேசிய அமைப்பாளருமான ஆர்.மேகநாதனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சருடனான இச்சந்திப்பின் போது பிரபா கணேசன் எம்.பியுடன் கலந்து கொண்ட ஸ்ரீரெலோ செயலாளர் நாயகம் ப. உதயராசா வன்னி மாவட்டத்தில் பல கிராமங்கள் மின்சார வசதியின்றி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அது மட்டுமின்றி வவுனியா மாவட்டத்திலுள்ள சில கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான ஒப்புதலையும் பெற்றுக் கொண்டார்.

இக்கிராமங்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் என்.ரவிகுமாரும் கலந்து கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.