Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 இல் கை வைத்தால் கச்சதீவு கைமாறும்; இடதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"13'ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்காமல் மாகாணசபை முறைமையை மேலும் பலப்படுத்தி  தமிழர்களின் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதைவிடுத்து "13' இல் கைவைத்து இந்தியாவை எதிர்த்தால் கச்சதீவு பறிபோய்விடும்.''

இவ்வாறு நேற்று அபாயச் சங்கு ஊதியுள்ளனர் "13' ஐ பாதுகாப்பதற்காக அணிதிரண்ட ஆளுந்தரப்பிலுள்ள இடதுசாரி அமைச்சர்கள்.

"13' ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆளுந்தரப்பின் இடதுசாரி அமைச்சர்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள லங்கா சம சமாஜக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, ராஜித சேனாரட்ண, ரெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் திஸ்ஸ விதாரண

இதன்போது அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்ததாவது:

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வென்று தேசிய நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அதற்கான தகுந்த சந்தரப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், கடந்த 26 வருட காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாகாணசபை முறைமைய இல்லாதொழிக்குமாறு சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர்.

"13'ஆவது திருத்துக்கமைய மாகாணசபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கியிருந்தால் நாட்டில் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. ஒரு தேசிய பொலிஸ் திணைக்களத்தின் கீழ், மாகாண பொலிஸ் திணைக்களங்கள் இருந்தால் பிரச்சினை இல்லை.

13ஆவது திருத்தத்தினூடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து மாகாணசபை முறைமையை சக்திப்படுத்த வேண்டும்.

இதனூடாக சிறுபான்மையினருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்களுடன், இணைந்து நாம் செயற்படுகின்றோம் என்பதை நாம் சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எமக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். என்றார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ண

இதன்போது அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்ததாவது,

டொனமூர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது தமக்குத் தனி இராச்சியம் வேண்டுமென உடரட்ட சிங்கள மக்கள் கோரினர். ஆனால் தமிழர்களோ நாட்டைப் பிரிக்க வேண்டாம் என்று கூறினர். 13ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டுமென்று பலர் கூறுகின்றனர்.

அத்துடன் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். உலகில் எந்த நாட்டில் ஒரு அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு 26 வருடங்களின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது?

அன்று மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்டபோது அது தமிழீழத்திற்கு வித்திடும் என்றனர். ஆனால் அவர்கள்தான் இன்று மாகாணசபையில் அமர்ந்து சிறப்புரிமைகளை அனுபவிக்கின்றனர்.

வடக்கு மக்களுக்காக வழங்கிய உணவுக்கோப்பையைப் பறித்து எடுத்துவிட்டு, இப்போது அவர்களுக்கு கோப்பை அல்ல ஒரு பிடி சோறுகூட கொடுக்க முடியாது என்பது புதுமையான அரசியல். இது அரசியல் தார்மீகம் அல்ல.

சிங்கள இனவாதிகள்தான் தமிழ் இனவாதிகளைப் போஷித்தனர். புலிகள் இருந்தபோது அதிகாரங்களைத் தரமுடியாது என்றனர். இப்போது புலிகள் இல்லை அதிகாரங்ளும் இல்லை என்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, 13ஆவது திருத்தத்தினூடாக வடக்கு மக்ளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, மறுபுறத்தில் தேசிய பொலிஸ் திணைக்களத்தினூடாக அதைப் பறித்தெடுத்தார். அத்துடன், காணி அதிகாரத்தை வழங்கினார், ஆனால்  தேசிய காணி திணைக்களத்தினூடாக அதையும் பறித்தெடுத்தார்.

இப்படியாக ஒரு கையில் கொடுத்து மறுகையில் பறித்தெடுத்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் இவரும் மாறுபட்ட நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். என்றார்.

அமைச்சர் டியூ குணசேகர

இதன்போது அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்ததாவது,

13ஆவது திருத்தச் சட்டம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கமைய கொண்டுவரப்பட்டதொன்றல்ல எனக் கூறுகின்றனர். 1978ஆம் ஆண்டு முதல் 18 அரசமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் மக்கள் விருப்பத்திற்கமைய நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறிருக்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு மட்டுமேன் எனக் கேள்விஎழுப்புவது நல்லதல்ல.

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதற்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டின் பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக தமது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இனப்பிரச்சினை தொடர்பில் அவர்களால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது. என்றார் - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=693162125325873499#sthash.uXyLG488.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
13 இல் கை வைத்தால் கச்சதீவு கைமாறும்; இடதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை
மகிந்தா அய்யே நீ துணிந்து கை வை......இந்தியாவால் ஒரு ம.......இரும் புடுங்க ஏலாது.....

காங்கிரஸ் இந்தியாவின் கதை முடியும் காலம் வருகிறது. 13ம் திருத்தம் திருத்த  பொதுநலவாய மகா நாடு, இந்திய தேர்தல் போன்றவை கழிய வேண்டும். மகிந்தா அதன் பின்னர்தான் கை வைப்பர். அப்போது பா.ஜ.க. பழைய படி தனக்கும் இலங்கைக்கும் தொடர்பு இல்லை என்றுவிடும். பொதுநலவாய நாடுகளின் மகாநாடு முடிந்துவிடும் என்பதால் அவர்களாலும் பெரிதாக இலங்கையுடன் வாய் அடிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.