Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் படையதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பது நியாயமானது - காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு  நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக்கல்லூரியில் இரு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சியளித்து வந்தது நாம் அறிந்ததே. இவர்கள் அங்கே பயிற்சிக்கு வரவிருக்கிறார்கள் என்கிற செய்தி பரவியதிலிருந்து நீலகிரி மவட்டத்தில் பரவலான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரு நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியினால் அழைக்கப்பட்ட பூரண கடையடைப்பு மற்றும் தொழில் நிறுத்தம் முழுமையான வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பல கட்சிகளும் தமது ஆதரவை வெளியிட்டிருக்கின்றன. 

 

அதிகரித்துவரும் எதிர்ப்பை அடுத்து அவ்விரு அதிகாரிகளையும் பத்திரமாக ஆந்திராவில் உள்ள உயரதிகாரிகள் பயிற்சி கலூரிக்கு மாற்ற இந்தியா முடிவெடுத்தது. அதற்கிடையில் தமிழ்நாட்டில் பயிற்சியென்றால் மட்டுமே தாம் தமது வீரர்களை அனுப்புவதென்றும், அப்படி இடம் மாற்றம் செய்யப்பட்டு நடக்கும் எந்தப் யிற்சிக்கும் நாம் தயாரில்லை என்றும் கூறி சிங்கள அரசு தனது வீரர்களை திருப்பி அழைத்துக்கொண்டது.  அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் நிபந்தனையூடான பயிற்சிகளுக்கு தாம் தயாரில்லை என்றும், பாக்கிஸ்த்தான், சீனா, ரஸ்ஸியா போன்ற நாடுகளுக்கு இனி வரும் காலங்களில் தனது வீரர்களை அனுப்புவதுபற்றி இலங்கை யோசித்து வருவதாகவும் காட்டமாக அறிவித்திருக்கிறது. 

 

இலங்கையின் இந்த திடீர் அறிவிப்பால் ஆடிப்போயிருக்கும் காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டில்; அதிகரித்துவரும் எதிர்ப்பினைக் கட்டுப்படுத்த சுதர்சன நாச்சியப்பனை பிரச்சாரப் பணிகளுக்கு அனுப்பியிருக்கிறது. அதன்படி இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பது இந்திய ஸ்த்திரத் தன்மைக்கு பாதுகாப்பனதென்றும், அப்படியில்லாமல் இலங்கை இந்தியாவின் எதிரி நாடுகளிடம் இராணுவப் பயிற்சிக்கு போகுமிடத்து அது இந்தியாவின் இறையாண்மைக்கும், பிராந்தியப் பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக முடியுமென்றும், இதனைத் தடுப்பதற்கு இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பது மிகவும் அவசியமானதும், நியாயமானதும் என்று வாதிட்டு வருகிறார். ஈழத் தமிழரின் மீதான இனவழிப்பு மற்றும் தமிழக மீனவர்கள் மீதான படுகொலைத் தாக்குதல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மறுக்கும் நாச்சியப்பன், இலங்கையை ஆதரித்துப் போவதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை என்றும் கூறியிருக்கிறார்.

 

 இவர் மூலமாக அண்மையில் கூட இந்திய அரசு இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் மற்றும் ஆயுதக் குழுக்கள் என்பவற்றினை ஒன்றுதிரட்டி 13 ஆம் திருத்தச் சட்டத்தினைப் பற்றி ஆராய முனைந்ததும் நினைவிருக்கலாம்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதும் நியாயமானது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமிழ்நாட்டில் ஆதரவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால் மத்தியில் அதிகாரத்தில் உள்ளவரை இந்தமாதிரியான சண்டித்தனங்கள் இருக்கத்தான் செய்யும். அதேவேளை பாரதீய ஜனதாக் கட்சி வந்தாலும் நிலமை மாறும் என்று சொல்வதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமிழ்நாட்டில் ஆதரவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால் மத்தியில் அதிகாரத்தில் உள்ளவரை இந்தமாதிரியான சண்டித்தனங்கள் இருக்கத்தான் செய்யும். அதேவேளை பாரதீய ஜனதாக் கட்சி வந்தாலும் நிலமை மாறும் என்று சொல்வதற்கில்லை.

 

ஆனால் சென்ற தேர்தல் தோல்வியுடன் மணிசங்கர் அய்யர், கசன் அலி, தங்கபாலு போன்றோர் அமைதியாகிவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் மத்தியில் எவர் வந்தாலும் எமது நிலமை மாறப்போவதில்லை. சுஷ்மா சுவராஜ் மற்றும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் பலரின் அண்மையக் கருத்துக்கள் எமக்குச் சாதகமாக இல்லை. தமிழ்நாட்டில் ஏற்படும் அதிரடி மாற்றம்தான் எமது விடிவிற்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரதீயா ஜனதா கட்சிக்கு தமிழ் நாட்டில் காங்கிரசு அளவில் செல்வாக்கு இல்லை. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதன் மூலம் ஒரு, இரு இடங்களைப் பிடிக்கலாம். காங்கிரஸ்+ திமுக+ விஜயகாந்தின் தேதிமுக கூட்டணி அமைத்தால் சிலவேளை காங்கிரசு கட்சியில் இருந்து வேட்பாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்படலாம். காங்கிரசுக்கு 5 வீதமான மக்களும் தேதிமுகவுக்கு 10 வீதமான மக்களும்( தற்பொழுது 7 வீதம் என்று சொல்கிறார்கள்) திமுகவுக்கு 30வீதமான மக்களும் தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள். அத்துடன் விடுதலைச்சிறுத்தைகளின் தலித் வாக்களார்கள் 1, 2 வீதமான வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். பாட்டாளி மக்கள் கட்சியினரும் திமுகாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறது. அதிமுக அரசினால் அண்மையில் இராமதாஸ், அண்புமணி, காடுவெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வேல் முருகன் தனிக்கட்சியைத் தொடங்கிவிட்டார். வன்னியர்களின் வாக்குகள் பாட்டாளி மக்களுக்கு செல்வதுண்டு. ஆனால் அண்மையில் நடந்த வன்னியர் தலித் மோதல்களினால் விடுதலைச்சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இடையே பிளவு ஏற்பட்டிருப்பதினால் இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் போட்டியிடுமா என்று ஒரு சந்தேகம்.

இதுக்கை இந்தியா நினைச்சால் தமிழர் பிரச்சினையை தீர்க்கலாம் இந்தியாவை நாங்கள் கோவப்பட வைக்க கூடாது என்கிறார்கள்...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.