Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மேர்வினுக்காக பத்திரகாளியிடம் மன்றாட்டம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவருடைய மகன் மாலக்க சில்வாவிக்காக அவர்களுடைய ஆதரவாளர்கள் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவிலில் விசேட பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அமைச்சருக்கும் அவருடைய மகனுக்கும் எதிராக சூழ்ச்சிகளை செய்ததாக கூறப்படுகின்றவர்களை தண்டிக்குமாறு அவர்களுடைய ஆதரவாளர்கள் மன்றாடியதுடதுடன் சிதறுதேங்காயும் உடைத்துள்ளனர்.

களனி பெண்கள் அமைப்பைச்சேர்ந்தவர்களே இன்று வெள்ளிக்கிழமை இந்த பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னேஸ்வரம் காலி கோவிலில் நடத்தப்படவிருந்த பலிப்பூஜைக்காக கொண்டுசெல்லப்பட்ட கோழிகள் மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அபகரித்துச்சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/72785-2013-06-28-10-36-03.html

மேர்வின் காளியைச் சூக்காட முடியாது. இந்த பிறவியில் மேர்வின் தப்பலாம். ஆனால் காளி பொல்லாதவ. ஏழேழு பிறவிலும் மேர்வினை கவனிக்க கூடியவ.

 

ராஜராஜன் ஏன் பெரிய கோவிலைக்காட்டினான் என்பதை பற்றி ஆராச்சியாளர்களின் விளக்கம்(தமது விளக்கத்திற்கு தடயங்கள் கண்டு இருப்பதாக கூறுகிறார்கள்), மறு பிறப்பில் நம்பிக்கை கொண்ட சைவ மதத்தினனான அவன், போர் என்ற பெயரில், தான் செய்த பாவங்களை தனது உயிருடன் கொண்டு அலையாமல் இந்த பூமியிலேயே கழுவிவிடத்தான் என்கிறார்கள்.

 

மேர்வின் பெரிய கோவில் ஒன்று கட்டி, வழிபட்டு பாவங்களை கழுவாவிடில் அதன் பலனை அனுபவிப்பார். மேலும் மகனுக்கு இன்னும் பல ஆண்டுகள் பூமில் வாழ வயது இருக்கு.

 

எதிரி மீதும் மனத்தால் வக்கிரம் எதையும் எடுக்கக் கூடாது என்பதால் மட்டுமே இதை சொல்கிறோம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் மேர்வின் குறித்த செய்திகள் பார்க்கவில்லை போலுள்ளது.
 
மேர்வினும் களனி பகுதியில் ஒரு விஸ்ணு கோவில் நிர்மாணித்துள்ளார்.
 
அந்தாளுக்கும் இந்த தெய்வ பயம் இருக்குது.
 
ஆனால் அவரது பெயர் அவர் ஒரு கிறிஸ்தவர் என்று தானேசொல்கின்றது.

 

நீங்கள் மேர்வின் குறித்த செய்திகள் பார்க்கவில்லை போலுள்ளது.
 
மேர்வினும் களனி பகுதியில் ஒரு விஸ்ணு கோவில் நிர்மாணித்துள்ளார்.
 
அந்தாளுக்கும் இந்த தெய்வ பயம் இருக்குது.
 
ஆனால் அவரது பெயர் அவர் ஒரு கிறிஸ்தவர் என்று தானேசொல்கின்றது.

 

 

நன்றி.  ஆனால் அவர் காளி கோவில் ஒன்று கட்டி வேள்வியும் செய்ய வேணும்.  கட்டும் கோவில் வைரவர், காளி கோவில்களாக இருக்க வேண்டும். பெருமாள் கோவிலில் வேள்வி செய்ய முடியாது.

 
"ஆனால் அவரது பெயர் அவர் ஒரு கிறிஸ்தவர் என்று தானேசொல்கின்றது." மகனின் பெயர் மலக்கா சில்வா. இப்போது முழுவத்தாக மாறிவிட்டார்கள் போலிருக்கு. அவர்கள் எல்லோருமே போத்துக்கீசர் ஒல்லாந்தர் காலத்தில் மதம் மாறியவர்கள். அதனால்த்தான் அவர்களுக்கு அநாகரீக தர்மபால தேவைப்பட்டது. அதனால் காற்று இந்த வளம்  திரும்பிய பின்னர்  மாறிவிட்டர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.