Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான போர்க்குற்றங்கள் பற்றி நாமும் பேசுவதில்லை.. ஐநாவும் மெளனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவுகளைக் கிளறிய போது.. புலிகளின் குரல் மீதான சிறீலங்கா விமானப்படை தாக்குதலை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டித்துள்ளதைக் காண நேரிட்டது. இப்படி எத்தனையோ போர்க்குற்றங்களை எல்லாம் நாம் ஏன் புறக்கணித்துக் கொண்டு.. சம்பந்தர் போல.. ரகசிய சந்திப்புக்களை நடாத்தி.. மக்களையும்.. மக்களின் போராளிகளின் தியாகங்களையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்..???!

 

புலிகளின் குரல் மீதான தாக்குதல் போர்க் குற்றம் - RSF

 

27_11_07_vot_attack_01_65531_435.jpg

சிங்கள அரச வான்படையின் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இன்றும் புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல் ஜெனிவா உடன்பாட்டுக்கு எதிரானது என்றும் தெளிவாக எச்சரிக்கைகள் இன்றி இராணுவ இலக்கல்லாத ஒரு சிவிலியன் இலக்கு தெரிவு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை போர்க் குற்றம் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் (செய்தியாளர்கள்) அமைப்பான RSF குற்றம்சாட்டியுள்ளது.

இதேபோன்ற தாக்குதல்களை முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்துக்கு வந்த இந்தியப்படையினரும் தனியாருக்குச் சொந்தமான பல பத்திரிகைக் காரியாலங்களைக் குண்டு வைத்துத் தகர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-------------

27_11_07_vot_04_65525_200.jpg

இன்றைய தாக்குதலில் காயமடைந்த சிறுவன்.

Airstrike on VoT, a war crime - Reporters Without Borders

[TamilNet, Tuesday, 27 November 2007, 18:39 GMT]

A Sri Lanka military air strike Tuesday on the Voice of Tigers, the radio station of the Liberation Tigers of Tamileelam (LTTE), was a "war crime," Reporters Without Borders (RSF) said. Three of the station's staff, who had not been given any warning, and six other civilians were killed in the bombardment by air force jets, the RSF said.

Full text of the press release issued by the RSF follows:

SRI LANKA
REPORTERS WITHOUT BORDERS SAYS AIR STRIKE ON REBEL RADIO STATION IS "WAR CRIME"


A Sri Lanka military air strike today on the Voice of Tigers, the radio station of the Tamil Tiger rebels in the north of the country, was a "war crime," Reporters Without Borders said. Three of the station's staff, who had not been given any warning, and six other civilians were killed in the bombardment by air force jets.

"Voice of Tigers is a propaganda radio operated by the LTTE rebels, but the rules of war are clear - military bombardment and bombing must be limited to strictly military targets," the press freedom organisation said."The government in Colombo uses the Geneva Conventions to condemn LTTE crimes but forgets the conventions when it bombs what is a civilian installation and therefore protected by the conventions."

The air strike on Voice of Tigers, located near Kilinochchi, took place in the afternoon and left a total of nine civilians dead (including three of the station's employees) and around 10 civilians wounded. The Tamilnet website identified the dead employees as Isaivizhi Chempiyan (a former presenter), Suresh Linbiyo (a technician) and T. Tharmalingam.

The bombing was carried out as the station was providing coverage of the annual War Heroes' Day ceremonies, which the LTTE observes in the regions it controls. According to Tamilnet, broadcasts were able to continue with the help of another clandestine transmitter.

The Sri Lankan military confirmed that the air force had destroyed the "clandestine Tiger terrorists radio station" in Kilinochchi. Previous air strikes in October 2006 caused serious damage to the station and wounded two employees.

The Berne-based International Humanitarian Fact-Finding Commission (created under Protocol 1 of the Geneva Conventions), told Reporters Without Borders last year: "Deliberate attacks against journalists and infrastructure belonging to or used by the press constitute a serious violation of international law. Journalists have the right to perform their role in territories where fighting is taking place."

News media in other countries have been targeted as "propaganda media," setting very dangerous precedents for the press. NATO bombed Serbian radio and TV headquarters in Belgrade in April 1999, killing 16 employees. The Israeli military blew up the Voice of Palestine radio and TV building in Ramallah, on the West Bank, in January 2001. And the Kabul bureau of the pan-Arab TV station Al-Jazeera was the target of a US air strike on 12 November 2001.

 

http://kundumani.blogspot.co.uk/2007_11_01_archive.html


2007 இல் எழுதிய இக்கட்டுரையையும் ஒருக்கால் படித்தால்.. 6 வருடங்களின் பின் அன்று சொன்னவை இன்று நடைபெறுவதைக் காணலாம்..

 

ஈழத்தமிழர்களை இரையாக்கத் துடிக்கும் அமெரிக்கக் கழுகு..!

 

usa.jpg

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எனும் ஈழத்தமிழர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பினை விடுதலைப்புலிகளுக்கு பணம் சேர்க்கும் அமைப்பு என்று குற்றம்சாட்டி அதன் நிதியை,அமெரிக்கா சிறீலங்கா பேரினவாத அரசைத் திருப்திப்படுத்த முடக்கி இருப்பது குறித்து சிறீலங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் வெளியிட்ட கருத்தை அடுத்து எழுந்துள்ள சந்தேகங்கள் அமெரிக்காவின் அநியாயமான அணுகுமுறைகள் உலகின் பிறபகுதிகளில் இருந்து ஈழத்தமிழர்களை நோக்கியும் விரிவுபடுகிறது என்பதை இனங்காட்டிச் செல்கின்றன..! தொடர்ந்து படியுங்கள்...

அமெரிக்கத் தூதரின் வழியிலேயே சொன்று நோக்கினால் கூட அமெரிக்காவின் தர்க்கம் தவறானது சுயநலத்தோடு நகர்கிறது என்பதை இலகுவாகக் கண்டறியலாம்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரதேசங்களைப் பிடித்ததும் அதற்காக மக்களை வலிந்து இடம்பெயரச் செய்ததும் சிறீலங்கா அரசு... இதை எப்போதாவது அமெரிக்கா கண்டித்திருக்கிறதா..??! அல்லது இதைத் தடுத்து நிறுத்த சிறீலங்கா அரசுக்கு பகிரங்கமாக அழுத்தங்கள் அல்லது தடைகளைக் கொண்டு வந்திருக்கிறதா..??! மியாண்மாரிலும் ஈரானிலும் அமெரிக்காவின் செயற்பாடு மின்னல் வேகத்தில் இருக்க ஏன் இலங்கைத் தீவில் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் மீது மட்டும் அக்கறை காட்ட மறுக்கிறது..??!

தமிழர் பிரதேசங்களில், ஐநாவின் அவதானிப்புக்கு இணங்கக் கூட ,மனித உரிமைகள் உருப்படியாக இல்லை. அதற்கு இராணுவம் ஆயுதக்குழுக்களும் முதன்மை பங்களிக்கின்றன என்பது வெளிப்பட்டும்.. அமெரிக்கா மெளனம் காக்கிறதே ஏன்...??!

அமெரிக்கா மூச்சுக்கு முந்நூறு தரம் உச்சரிக்கும் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஜோசப் பரராஜசிங்கம்.. அரிநாயகம் சந்திரநேரு.. ரவிராஜ் இவர்களின் படுகொலைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறிய அமெரிக்கா என்ன நடவடிக்கை அல்லது அழுத்தம் கொடுத்தது சிறீலங்கா அரசுக்கு..??!

கொழும்பில் காணாமல் போதல் கைதிகள் சித்திரவதை என்று அமெரிக்கத் தூதரின் கண் முன்னாலே தமிழர்கள் சித்திரவதைப்படும் போது ஏன் அமெரிக்கா அதையிட்டு சிறீலங்கா அரசுக்கு தமிழர்களுக்கு தகுத்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல் வழங்க முன் வரவில்லை..??!

அமெரிக்காவுக்கு உண்மையில் இலங்கைத் தீவின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வில் அக்கறை இருப்பின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்கி அவர்களுடன் நேரடிக் கலந்தாலோசனைகளைச் செய்து வன்முறைகளை நிறுத்தி இரண்டு தரப்பையும் சமனாக மதித்து பேச்சு மேடைக்கு கொண்டு வரலாம் தானே. ஏன் அமெரிக்கா அப்படிச் செய்யாமல் சிறீலங்கா அரச படைகளின் பலத்தை அதிகரிப்பதிலும் அவர்களின் ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதிலும் சிறீலங்கா அரசின் விருப்புக்கு ஏற்ப புலிகளை ஒடுக்கவும் முன்னின்று செயற்படுகிறது. இது எந்த வகையில் பலவீனமான தமிழர் தரப்பை, பலமான சிங்கள அரச தரப்புடன் நியாயமான தீர்வுகளை எட்ட,பேச்சுக்களில் பேரம் பேச தமிழர் தரப்புக்கு உதவியாக அமையும்..??!

சிறீலங்காவின் இனப்பிரச்சனையே இனங்கள் ஒன்றாக வாழ முடியாத நிலையில் எழுந்த ஒன்று. அப்படி இருக்க எங்கோ இருக்கும் அமெரிக்கா இனங்களின் ஐக்கியத்தோடு எப்படி என்ன வகையான தீர்வை, தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயபூர்வ உரிமைகளை வழங்கத்தக்கதாக சிறீலங்கா அரசூடு அளிக்க இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக் கூறக் கூடிய நிலையில் இருக்கிறதா..??!

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் வன்முறைவாதிகள் என்றால் அவர்களை விட மோசமான இன அழிப்பு வன்முறையில் ஈடுபடும் சிங்களப் படையினருக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை அளிப்பது எந்த வகையில் நியாயம். இப்படி ஒருதலைப்பட்சமாக சிறீலங்காவின் இராணுவ வெறித்தனத்தை ஊட்டி வளர்க்கும் அமெரிக்கா எப்படி சிறீலங்கா அரசை இதய சுத்தியுடன் அதுவும் இராணுவ மேலாதிக்க நிலையில் உள்ள ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்புக்கு நியாயம் வழங்க அழுத்தம் கொடுக்க முடியும்..??! வெறுமனவே விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நினைப்பது இராணுவ மேலாதிக்கத்தை விரும்பும் அரசுக்கு சாதகமாகத்தானே அமையும்.. இது வெளிப்படை உண்மைதானே. ஏன் இதை அமெரிக்கா கருத்தில் கொள்ளாது நாடகம் ஆடுகிறது..??!

அமெரிக்காவின் செல்வாக்கை நிலை நிறுத்தவும் இதர நாடுகளின் இராணுவத்தலையீட்டைத் தவிர்க்கவும் அமெரிக்கா மட்டுப்படுத்திய இராணுவ உதவிகளை சிறீலங்காவுக்குச் செய்ய வேண்டிய கட்டாய நிலை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு நோக்கினும் சிறீலங்கா அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கண்டிக்காதது ஏன்..??! இராணுவ உதவிகளை எந்த எச்சரிக்கைகளுக்கும் இடமின்றி அள்ளி வழங்குவது சிறீலங்கா தனது பக்கத் தவறுகளை உணர எவ்வகையில் உதவும்..??!

சீனா மியாண்மார் ரஷ்சியா ஈரான் என்று மனித உரிமைப் பிரச்சனைகள் பூதாகரம் இல்லாத இடங்களில் எல்லாம் அவற்றைப் பூதாகரம் ஆக்கும் அமெரிக்கா ஏன் சிறீலங்கா தொடர்பில் ஐநா மற்றும் அமெரிக்காவையே தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்புக்களின் குரலை செவி மடுக்காமல் இருக்கிறது..??!

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்கக் கூடிய புலனாய்வு வசதிகளை அமெரிக்கா கொண்டிருந்தும் ஏன் அதற்குத் தடை விதிக்க வேண்டும்..??! இது சிங்கள ஆளும் தரப்பை மேலாதிக்க நிலையில் வைத்துக் கொண்டு தமிழர் தரப்பை பலவீன நிலையில் வைத்திருக்க செய்யும் செயலாகத்தானே தென்படுகிறது..??! அதுவும் சுனாமி பாதிப்பின் பின்னர் சர்வதேசத்தின் உதவி தமிழர் தரப்புக்கு சரியான வககயில் போய் சேரவில்லை என்று முன்னால் ஐநா பொதுச் செயலர் கொபி அனான் கோடிட்டுக் காட்டிய பின்னும் அமெரிக்கா இப்படி ஒரு நகர்வைச் செய்வதன் உள்நோக்கம் தமிழர் தரப்பின் மீது சிங்கள அரசின் இன அழிப்பை ஊக்கப்படுத்துவது தானே..??!

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் வேறு எந்த நடுநிலைத்தரப்பின் ஊடு அமெரிக்கா தமிழ் மக்களுக்கு உதவி செய்யப் போகிறது. அதையேன் அமெரிக்கா இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை..??!

தமிழர் தரப்பை சிறீலங்கா அரசுக்கு ஏற்ப பேச்சுக்களத்தில் சமதரப்பு நிலையில் வைத்திருக்க அமெரிக்கா செய்த நகர்வுகள் என்பது இவை தானா..??!

இராணுவ மேலாதிக்கம் உள்ள ஒரு அரசு எப்படி இராணுவ அடக்குமுறைக்குள் பலவீனப்பட்டுள்ள ஒரு இன மக்களுக்கு நியாயம் வழங்கும்..??! அமெரிக்கா இதை எவ்வகையில் தமிழர் தரப்புக்கு நம்பத்தகுந்த வகையில் வெளிச் சொல்லப் போகிறது. அதற்காக அது செய்யும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய நகர்வுகள் என்ன..??! அப்படி எதுவும் இருந்ததாக கடந்த 3 தசாப்தகால போராட்டமே சாட்சியாகி நிற்கிறது..!

ஆக அமெரிக்காவின் நகர்வுகள் சிறீலங்காப் பேரினவாதத்தின் செயற்பாடுகளை அங்கீகரித்தபடி தமிழர் தரப்பை மட்டும் குறை காண்பதிலும் ஒடுக்குவதிலும் தான் குறியாக இருக்கிறது. காரணம் தமிழர் தரப்பு பலவீனமான தரப்பு என்பதால் தனது அச்சுறுத்தல்களால் அத்தரப்பை மிரட்டி இலகுவாகப் பணிய வைக்கலாம் என்றும் ஆனால் அதை சிங்களத் தரப்போடு செய்வது தனக்கு அனுகூலமாக அமையாது என்றும் கருதியே அமெரிக்கா இலங்கைத் தீவில் சமீப காலமாக தனது நகர்வுகளைச் செய்து வருகிறது. இது தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் எந்த அரசியல் தீர்வையும் சிங்களவர்களிடமிருந்து பெற்றுத்தர எள்ளளவும் தமிழர்களுக்கு உதவாது. மாறாக அமெரிக்க நலங்களை பிராந்தியத்தில் நிலைநிறுத்தவும் அதற்கு வெகுமதியாக தமிழர் போராட்டத்தை நசுக்கி சிங்கள அரசின் மேலாதிக்கத்தை தமிழர் தாயகத்தில் நிறுவி, தமிழர் தாயகத்தை சிங்கள இராணுவ மயப்படுத்தல் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து.. சிங்களவர்களின் ஜனநாய முலாம் பூசப்பட்ட அரைகுறைத் தீர்வை பலவீனப்பட்டுப் போயிருக்கும் தமிழர் மீது திணிப்பதன் மூலம் தனது நலனுக்காக இலங்கைத் தீவை நீண்டகால முதலீடாக்கிக் கொள்வதும் அதை நிலைநிறுத்திக் கொள்வதுமே அமெரிக்காவின் திட்டம்..!

 

http://kundumani.blogspot.co.uk/2007_11_01_archive.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவர்களின் ஜனநாய முலாம் பூசப்பட்ட அரைகுறைத் தீர்வை பலவீனப்பட்டுப் போயிருக்கும் தமிழர் மீது திணிப்பதன் மூலம் தனது நலனுக்காக இலங்கைத் தீவை நீண்டகால முதலீடாக்கிக் கொள்வதும் அதை நிலைநிறுத்திக் கொள்வதுமே அமெரிக்காவின் திட்டம்..!
இந்தியாவுக்கு அருகில் சிறிலங்கா ,இந்தோனேசியாவுக்கு அருகில் கிழக்குதிமோர்,மலேசியாவுக்கு அருகில் சிங்கப்பூர், சவுதிஅரபியாவுக்கு அருகில் பகரைன் ,சீனாவுக்கு அருகில் கொங்கொங்.......நீண்ட நோக்கில் அமைக்கப்பட்ட கட்டமைப்புக்கள்.பெரிய நாடுகள் யாவும் அடிப்படைவாத நாடுகள் மதம் மற்றும்,மவோயிச.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.