Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய வீட்டுத் திட்டம் யாருக்கு..?

Featured Replies

சிறீலங்காவின் இனப்படுகொலையில் இருந்து உயிர்தப்பிய தமிழ் மக்களில் 50 ஆயிரம் பேருக்கு இந்தியா வீடு கட்டிக்கொடுக்கப்போவதாகக் கூறப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை ஒரு சில வீடுகளே கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

18072013%20013.jpg

கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு சில வீடுகளும் இடிந்து விழுந்து, அதன் கட்டுமானத் திறனை வெளிப்படுத்தி தமிழர்களை அச்சப்படுத்தியுள்ள நிலையில், இந்த வீட்டுத் திட்டத்தில் தமிழர்களைவிட போரில் பாதிக்கப்படாத முஸ்லீம்களும் சிங்களவர்களும் அதிகளவில் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவில் காணிகளே இல்லாத 450 முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டமும் கூடவே காணியும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

புத்தளத்தில் இருந்து கொண்டு வந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் குடியமர்த்தப்படவுள்ள காணிகளற்ற முஸ்லிம் குடும்பங்களுக்கே இந்த வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான பயனாளிகள் தெரிவில் பிரதேச செயலகமும் ‘யுஎன் கபிற்றான்’ நிறுவனமும் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் 50 வீடுகள் மட்டும் புள்ளி அடிப்படையில் தமிழ்க் குடும்பங்களுக்கு பகிரப்படவுள்ளதாகவும், ஏனைய 450 வீடுகளும் எந்த வரையறைக்கும் உட்படாத வகையில், அமைச்சர் ஒருவரின் பணிப்புக்கமைய முஸ்லிம் குடும்பங்களுக்குப் பகிரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவுக்கு இறுதித் திட்டமாக இந்த 500 வீடுகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை கொக்கிளாய் உட்பட தமிழ்க் கிராமங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும் திட்டத்தை இடைநிறுத்திய சிலர் தற்போது தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மூன்று முஸ்லிம் கிராமங்களுக்கு இந்த வீடுகளைப் பகிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து கரைதுறைப்பற்று உதவித் திட்டப் பணிப்பாளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளிக்க மறுத்த அவர் ‘தான் விடுப்பில் உள்ளதாகவும், இது குறித்து அரச அதிபரிடம்தான் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதன்படி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனைக் கேட்டபோது, ‘அப்படி ஒரு திட்டமே வரவில்லை. யார் சொன்னது உங்களுக்கு? அது பொய்த் தகவல்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இதேவேளை முள்ளியவளை நகரை ஊடறுத்துச்செல்லும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் இருமருங்கும் (முள்ளியவளை மத்தி) முஸ்லிம் குடியேற்றங்களை தோற்றுவிப்பதற்காக பயன்தரு தேக்கு மரக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.

யுத்தத்துக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் வனவள பாதுகாப்பு பிரிவால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த செழிப்பு மிக்க தேக்கு மரக்காடுகளே வகை தொகையின்றி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தான் வகிக்கும் அமைச்சு பொறுப்புக்கும் மீள் குடியேற்ற அமைச்சுக்கும் எந்த வகையிலும் தொடர்பே இல்லாத முஸ்லிம் அமைச்சர் றிசாட் பதியூதீன், வன இலாகாவின் பெயரை பயன்படுத்தி முள்ளியவளையில் மட்டும் சுமார் 1400 ஏக்கர் காடுகளை கனரக இயந்திரங்களைக்கொண்டு அழிக்கும் சட்டவிரோத செயல்பாட்டில் பகிரங்கமாகவே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.

1972ம் ஆண்டு முதல் முள்ளியவளை மத்தியிலும், நகரை அண்மித்த பகுதிகளிலும் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இன்று வரை காணி ஒதுக்கீடுகளும், காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படாத நிலையில், முள்ளியவளை பிரதேசத்துடன் எத்தகைய நிலத்தொடர்புகளும் அற்ற முஸ்லிம் மக்களுக்கு உடனடியாகவே காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி அவர்களை குடியேற்றும் செயலில் அமைச்சர் றிசாட் தீவிரம் காட்டி வருகின்றார்.

இத்தகைய முறையற்ற குடியேற்றங்கள், சட்ட விரோத காடழிப்புகள் குறித்து மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் கேள்வி கேட்டால், குறித்த விடையம் தொடர்பில் தமக்கு எழுத்து மூலமான ஆவணங்கள் எவையும் வழங்கப்படவில்லையென்றும், பகிரங்க கேள்வி கோரல்கள் விடுக்கப்படவில்லையென்றும் கையை விரிக்கின்றனர்.

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காடழிப்பு நடவடிக்கையில் வெறித்தனம் காட்டி வரும் றிசாட், பாலை, முதிரை, கருங்காலி, வேம்பு, தேக்கு போன்ற பயன்தரு மரங்களை குற்றிகளாக்கி தென்னிலங்கைக்கு அனுப்பி காசு மேல் காசு பார்ப்பதோடு, மாவட்டத்தினுடைய ஆற்றுமணல், கிரவல் மண், கருங்கற்கள் போன்ற கனியவள சூறையாடல்களிலும், கடத்தல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். மாவட்டத்தின் தேவைக்கு மேலதிகமாகவுள்ள கனிய வளங்களையே பிற மாவட்டங்களுக்கு அனுப்ப முடியும் என்று சட்டம் சொல்கையில், சட்ட ஒழுங்குகளை மீறி வெளி மாவட்டங்களுக்கு கனிய வளங்களை அனுப்பும் அடாத்து நடவடிக்கையில் அமைச்சர் அலாதிப் பிரியம் கொண்டுள்ளார்.

தமிழ் இளைஞர்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை கறந்து கொண்டு, அண்மையில் அரச நியமனங்களையும், வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்திருக்கும் அமைச்சருக்கு, விசுவாசப்பல்லை இழித்துக்கொண்டு விழா எடுத்துக்கொண்டிருக்கும் சில தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு எங்கே புரியப்போகிறது நாம் நிகழ்காலத்தில் இழந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பிடி மண்ணுக்கும் கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட உயிர் விலைகள், தியாகங்கள் பற்றி!

 

http://www.sankathi24.com/news/31553/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... ஈழத்தமிழர் விடயத்தில், இதுவரை என்னத்தைதான்... ஒழுங்காக செய்திருக்கின்றது.
அது எம்விடயத்தில், தலையிட்டாலே.... நாசமறுக்க வந்திருப்பதையே கடந்த கால அனுபவங்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
தானும்... ஒரு ஆள் என்று, எல்லாத்துக்கும் முன்னுக்கு வந்து நின்றிடுவார்கள், போக்கிரிப் பயல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... ஈழத்தமிழர் விடயத்தில், இதுவரை என்னத்தைதான்... ஒழுங்காக செய்திருக்கின்றது.

அது எம்விடயத்தில், தலையிட்டாலே.... நாசமறுக்க வந்திருப்பதையே கடந்த கால அனுபவங்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

தானும்... ஒரு ஆள் என்று, எல்லாத்துக்கும் முன்னுக்கு வந்து நின்றிடுவார்கள், போக்கிரிப் பயல்கள்.

 

இவர்களிடம் கூட்டமைப்பு வழிந்துகொண்டிருக்கக்கூடாது.. சற்று ஒதுங்கினால் தாமாக வளத்துக்கு வருவார்கள்.. மக்கள் இந்திய அரசை நாய்க்கும் கீழாகத்தான் மதிக்கிறார்கள்..

 

இலங்கை அரசு உதைக்க உதைக்க கூட்டமைப்பை இறுக்கி இறுக்கி பிடிக்கிறாங்கள். கூட்டமைப்பிலை அல்லது தமிழ்நாட்டிலை தன்னும் மனோ கனேசன் மாதிரி  ஒரு பொறுத்த கை இருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருந்திருக்கும்.

1. பதியுதீனிற்கெதிராக வழக்குப் போடலாம்.
2. பொதுபல சேனாவிடம் இவனைப்பற்றி முறையிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.