Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி லண்டனில், கண்ட இடத்தில "துப்பக்" கூடாது.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30-london-street-300-jpg.jpg

 

இனி லண்டனில், கண்ட இடத்தில "துப்பக்" கூடாது..... மீறினால் ரூ.4.5 லட்சம் அபராதம்!

 

லண்டன்: லண்டன் மாநகரில் இனி கண்ட இடத்தில் துப்ப முடியாது.. மீறி துப்பினால் அவர்கள் 4.5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதுதான். அதோடு அவர்கள் கிரிமினல் குற்றவாளியாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

நகரத்தை சுத்தமாகவும், சுகாதார சீர்கேடுகளை தடுக்கவும் லண்டன் நகர நிர்வாகம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

 

அதன்படி லண்டனின் என்பீல்டு பகுதியில் எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சில் துப்புவர்கள் மீது குற்றச் செயல் புரிந்ததாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் என்பீல்டு கவுன்சில் பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்ப்பதற்கு முயற்சி எடுத்து வந்தது. இந்த நடவடிக்கைக்கு சமூக மற்றும் உள்ளாட்சிக்கான அமைச்சர் எரிக் பிக்கல்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார்.

 

இந்த சட்டத்தை முதன் முதலில் பிரிட்டனில் அமல்படுத்தியது என்பீல்டு கவுன்சில் என்றும், இவ்விதி அமலில் இருந்தபோதும், ஒரு மாத காலத்திற்குள் கடுமையாக பின்பிற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்பீல்டை தொடர்ந்து லண்டனின் பிற பகுதிகளிலும், வெகு விரைவில் இதுபோன்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதேபோல் டான் காஸ்டர் பகுதியில் ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தாலும், இன்னும் சட்டமாகவில்லை.

 

இந்த சட்டத்திற்கு வரவேற்புள்ள போதும், இதனை கிரிமினல் குற்றமாக பார்க்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியளுக்கு வைச்சிடாங்கையா ஆப்பு....:D

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியளுக்கு வைச்சிடாங்கையா ஆப்பு.... :D

 

அவர்களை விட நம்மவர்கள் தான் வெற்றிலை... பீடாவை போட்டுவிட்டு.. பியரையும் குடிச்சிட்டு.. சந்தி சந்தியா துப்பிக்கிட்டு திரியுறவை. குறிப்பாக வெம்பிலி.. கரோ.. ரூரிங்.. ஈஸ்ராம்.. இந்த இடங்களில் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தை அண்டிய பகுதிகளில் உள்ள தமிழ் கடைகளை அண்டி.. மற்றும் சூதாட்ட நிலையங்களை அண்டி.. இந்தச் செயல் மிக மோசமாக எம்மவர்களால் செய்யப்படுகிறது. குடித்துவிட்டு வெறியில் இரவிரவாக கத்திக் கொண்டு திரிவது மட்டுமன்றி.. நேரம் பிந்தி வேலை விட்டு வரும் அப்பாவிப் பெண்களையும் விபச்சாரிகள் என்ற தோறணையில் பின் தொடர்வது எல்லாம் நடக்கிறது.

 

லண்டனுக்கு வெளியில் வெள்ளைகள் கூட இப்படிச் செய்வதில்லை. இந்த நாடோடிகள் செய்யுற அநியாயம்..மிக மோசமானது.

 

இது மட்டும் போதாது.. வூல்பிச் கவுன்சில் கொண்டு வந்த கணக்கா.. பியர் மற்றும் மதுபான வகைகளுக்குரிய கான் மற்றும் வெற்றுப் போத்தல்களை வீதியில் வீசுவது.. ரெக்கவே எடுத்து வீதியில் வைத்து சாப்பிட்டுவிட்டு.. எலும்புகள் மற்றும் பக்கிங்கை வீதியில் வீசுவது.. கொண்டோம் வீசியில் வீசுவது.. நில மேல் பாலங்களில் சுச்சா போவது.. ஓடும் கார்களில் இருந்து வெற்று குளிர்பான.. கான்கள்.. சிகரட்.. கிரிப்ஸ் பைக்கட்டுக்களை வீதியில்.. வீசுதல்.. என்று..எல்லாவற்றிற்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்..!

 

மேலும் இரவில் குடித்து விட்டு கத்தித் திரிபவர்களை பெண்கள் பின்னால் அலைபவர்களை.. கைது செய்து புரபேஷன் சென்ரர்களில் நன்னடத்தைக்கு உட்படுத்த வேண்டும்..! நம்மவர்களிலும் பலர் நன்னடத்தை என்ன என்று தெரியாமல் உலா வருகிறார்கள். லண்டன் கவுன்சில்களின் இந்த மாற்றங்கள் நிச்சயம் நல்ல படிப்பினையைக் கொடுக்கும். நகரை சுத்திகரிப்பது மட்டுமன்றி கவுன்சில்களுக்கான சுத்திகரிப்புச் செலவீனத்தைக் குறைக்கும்.

 

இதையே புலிகள் செய்திருந்தால்.. காசு பறிக்கிறார்கள் அராஜகம் செய்கிறார்கள்.. என்று நம்மவர்கள் கவிதை கதை வடித்திருப்பார்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

லண்டனுக்கு வெளியில் வெள்ளைகள் கூட இப்படிச் செய்வதில்லை. இந்த நாடோடிகள் செய்யுற அநியாயம்..மிக மோசமானது.

 

மோசமானதுகள் என்றபடியால் தான் நாடோடிகளாக இருக்கினம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பனோட பழகிப்பாருங்கள்  எல்லாம்  தெரியவரும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி  கடும்  பலம் கொண்டு அடக்கினால் மருத்துவ  செலவு அதிகரிக்க  வாய்ப்பிருக்கிறது

தண்டனையை  பார்த்தாலே  நுங்சு  பதைபதைக்குது..... :(

இதையே புலிகள் செய்திருந்தால்.. காசு பறிக்கிறார்கள் அராஜகம் செய்கிறார்கள்.. என்று நம்மவர்கள் கவிதை கதை வடித்திருப்பார்கள்..! :):icon_idea:

 

ம்ம்ம்...   இப்படியான பயங்கரவாத செயல்களை பாத்து  அர்சுண் அண்ணாவுக்கு அழுகையே வந்திருக்கும்...  !  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.