Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானா போல கூர்க்காலாந்து உருவாகுமா.. அல்லது தமிழீழம் போல அடக்கப்படுமா..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்தது: ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங்

 

மேற்கு வங்காள மாநிலத்தை பிரித்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா சார்பில் நேற்று முன்தினம் முதல் 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பிமல் குருங் கூறுகையில், ‘தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்து வருகிறது. எனவே மத்திய அரசு தெலுங்கானா தனி மாநிலத்துக்கு அனுமதி அளித்தால், கூர்க்காலாந்து தனி மாநிலத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை முழு அடைப்பு போராட்டம் தொடரும்’ என்று கூறினார்.

 

கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வற்புறுத்தி, 72 மணி நேர டார்ஜிலிங் பந்த் கடந்த திங்கள்கிழமை 2-வது நாளாக நீடித்தது. கலிம்பொங் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

 

மற்ற போராட்டக்காரர்கள் வந்து அணைப்பதற்குள், உடலின் பெரும்பகுதி எரிந்து விட்டது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் பெயர் மொங்கள் சிங் ராஜ்புத் (வயது 45) என்று தெரிய வந்துள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=104697 

 

==================

 

இப்போதைக்கு புதிய மாநிலங்களாகப் பிரியும் ஹிந்தியா இன்னும் கொஞ்சக் காலத்தில் தனிநாடுகளாகப் பிரியும். இந்த தனி மாநிலப் பிரிவுகள் என்பது ஹிந்தியாவில் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையோடு தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும் பெரு விருப்பைக் கொண்டிருப்பதற்கான ஆரம்ப அடையாளமாகவே தெரிகிறது.

 

எவன் எவனோ எல்லாம் பிரிந்து போறான். நமக்கு.... கட்டாயக் கலியாணம். ஒரு கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு என்றால் பிரிந்து செல்ல உள்ள சுதந்திரம் கூட.. தமிழர்கள் நமக்கு வேண்டாத சிங்களவனை விட்டு பிரிந்து செல்ல இந்த உலகம் வழங்காமல் சனநாயகம்.. நல்லிணக்கம்.. சமாதானம்.. இறையாண்மை.. என்ற போலி வார்த்தைகளால் எம்மை அடக்கிப் போட நினைப்பது எவ்வளவு மோசமான செயல்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானாவைப் போல் விதர்பா, பூர்வாஞ்சல் மாநிலங்களை உருவாக்க கோரிக்கை!

 

டெல்லி: ஆந்திராவைப் பிரித்து 'தெலுங்கானா' அமைக்கப்பட்டது போல விதர்பா, புந்தல்கண்ட், பூர்வாஞ்சல் உள்ளிட்ட தனி மாநிலங்களையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை என்பது 60 ஆண்டுகாலம் நீடித்த போராட்டம்.. இது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படும் நிலையில் மேற்கு வங்கத்தைப் பிரித்து 'கூர்க்காலாந்து' உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 2 நாட்களாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்:

'இனி மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது' :  தெலுங்கானா குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் பிரகாஷ் காரத், "தெலுங்கானா உருவாகிவிட்ட நிலையில் நாட்டின் பிற பகுதிகளிலும் தனி மாநிலக் கோரிக்கைகள் எழும். இதனால் மேற்குவங்கத்தையோ அல்லது வேறு எந்த ஒரு மாநிலத்தையோ இனி பிரிக்கக் கூடாது. அப்படி பிரிக்கத் தொடங்கினால் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும்" என்றார்.

'மிக தாமதமான நடவடிக்கை' : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா "தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பது என்பது மிக மிக தாமதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. தெலுங்கானா, ஆந்திர பிரதேச மக்கள் வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் சகோதரத்துவத்துடன் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும்" என்றார்

'நாங்க ஏன் தெலுங்கானா அமைக்கலைன்னா..?' :  பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 3 தனி மாநிலங்களை உருவாக்கினோம். ஆனால் எங்களது கூட்டணிக் கட்சியின் அழுத்தத்தால் அப்போது தெலுங்கானாவை நாங்கள் உருவாக்கவில்லை" என்றார்.

'புந்தெல்காண்ட், விதர்பா, பூர்வாஞ்சலை உருவாக்கனும்' :  "தெலுங்கானாவைப் போல புந்தெல்காண்ட், விதர்பா, பூர்வாஞ்சால் போல பல புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும். எங்களது லோக்ஜன் சக்தி கட்சி எப்போதும் புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கு ஆதரவு தரும்" என்றார் அக்கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான்.

 

 

http://tamil.oneindia.in/news/2013/07/31/india-mixed-reaction-from-non-congress-parties-to-telangana-180222.html

 

 

*****

 

 

ஒரு மொழி, ஒரு மதம், ஒரே கலாச்சாரம் கொண்ட மக்கள் இணைந்து ஒருமித்து வாழ நினைக்கும் தருணத்தில், அரசியலால் சலுகைகளுக்காக துண்டாடப்பட்டு பிரிந்துபோக நினைப்பது அந்நியன் உட்புகவே வழி சமைக்கும்.

 

சிம்பிள் விடை ஆந்திராவை பிரிக்கலாம் அவர்கள் ஒரே மொழி ஒரே இனம் ஆனால் கூர்க்கலாண்ட் அப்படி அல்ல அவர்கள் வேறு மொழி வேறு இனம் ஆகவே அவர்கள் வங்க மொழிக்கு அடிமையா வைத்திருப்பதே மத்திய அரசுக்கு நல்லம்  :icon_idea: 


ஆந்திராவை பிரித்தது போல உத்தரப்பிரதேச மாநிலத்தை 4 சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, சிறிய மாநிலங்கள் உருவாக்குவதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளோம். தற்போதைய நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். பூர்வாஞ்சல், புந்தெல்காண்ட், ஆவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம் என 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி அதிகரிக்கும். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த 4 மாநிலங்கள் உருவாக்குவதற்காக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார்.

 http://tamil.oneindia.in/news/2013/07/31/india-divide-uttar-pradesh-into-four-states-says-mayawati-180250.html


தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கும் கோரிக்கை மீண்டும் எழும் அபாயம்?
ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது எழும் வடதமிழ்நாடு, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு பிரிவினை முழக்கம் மீண்டும் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கானா உதயமானது போதும்.. நாடு முழுவதும் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொன்றாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தெலுங்கானா உருவாகவிருப்பதால் தமிழகத்தையும் மூன்றாகப் பிரிக்கும் கோரிக்கை மீண்டும் சூடு பிடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

http://tamil.oneindia.in/news/2013/07/31/tamilnadu-tn-also-divide-3-states-180252.html


அசாமில் விஸ்வரூபமெடுத்தது 3 மாநில கோரிக்கை! ரயில் மறியல்,பந்த் போராட்டத்துக்கு அழைப்பு!!

அசாம் மாநிலத்தை பிரித்து போடோலாந்து, கமதாபூர், கர்பி அங்லாங் மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல், பந்த் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போடோலாந்து அனைத்து போடோலாந்து மாணவர் அமைப்பு போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 2-ந் தேதி 12 மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கும் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 60 மணி நேர முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் போடோலாந்து நிர்வாக கவுன்சிலில் தனி மாநில அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனிடையே அசாம் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சந்தன் பிரம்மா தலைமையில் போடோலாந்து நிர்வாக கவுன்சில் குழுவினர் டெல்லி விரைந்துள்ளனர். தனி மாநிலம் அமைக்கக் கோரி அக்குழு உள்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த உள்ளனர். கமதாபூர் மாநிலம் அனைத்து கூச் ராஜ்போங்சி மாணவர் அமைப்பினர் கமதாபூர் தனி மாநிலம் அமைக்கக் கோரி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் நாளை முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் பிஸ்வாஜித் ராய் கூறியுள்ளார். கர்பி அங்லாங் கர்பி அங்லாங் திமா ஹசோ மலைமாவட்டங்களை உள்ளடக்கி கர்பி அங்லாங் மாநிலம் அமைக்க வேண்டும் என்பது கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கோரிக்கை. கர்பி அங்லாங்கின் லோக்சபா எம்.பி. பார்லிமென்ட்டில் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 

http://tamil.oneindia.in/news/2013/07/31/india-telangana-fallout-groups-call-bandhs-blockades-in-assam-180275.html

தமிழ் நாட்டையும் தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு என பிரிக்கும் கோரிக்கை முன் வைக்கப்பட உள்ளதாம்.

மாநிலங்களை உடைத்துவிட்டால் மொழி வாரித் தனி நாடுகளுக்கான கோரிக்கைகள் தோல்வியாகும். இது மத்திய கட்சிகளின் தந்திரம். தமிழ் நாடு இதற்கு எடுபடக் கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டைப் பிரிக்க அனுமதிக்கக் கூடாது.. ஈழத்தை வடக்கு கிழக்கு என்று பிரித்து அது படும்பாடு நல்ல முன்னுதாரணம்..

  • கருத்துக்கள உறவுகள்

மாநிலங்களைப் பிரிப்பதை விட....
இந்தியாவிலிருந்து அந்த மாநிலங்களைப் பிரித்து... தனிநாடுகள் ஆக்கவேண்டும்.
அப்போ... தான், அந்த‌ நாடுக‌ளுக்கு விமோச‌ன‌ம் கிடைக்கும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.