Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna_muslim_neighbourhood_2.jpg

யாழ்பாண முஸ்லிம்கள் வடமாகாண சபை தேர்தலில் யாரை ஆதரிப்பது , யாரை ஆதரித்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்ப்போமானால் இறுதியில் வருவது தமிழர் கூட்டமைப்பே. இதனை ஆராய்வதற்க்கு முன்னர் எமது கடந்த காலங்ககளை கொஞ்சம் திரும்பிப்பார்த்து அதற்கேற்றாற்போல் நமது சகல நடவடிக்கைகளையும் அமைத்து நமது மண்ணில் நாம் ஐக்கியமாக வாழ நல்ல நிலைமையை உருவாக்குவது நமது கடமை.

 

1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சிவில் நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கும் போது எமது பிரதேசத்தில் பல தேர்தல்கள் நடைபெற்றது அந்த தேர்தல் காலங்களில் ஸ்ரீல.சு க, ஐ.தே.க, த.அ.க, த.கா.க, த.வி.கூ, மற்றும் வேறு சில கட்சிகளும் போட்டி போட்டன மக்கள் தத்தமது விருப்பத்திற்கேற்றாற்போல் வாக்களித்தார்கள். அந்த காலம் மாறி நாட்டில் வடக்கின் கல்வி வளர்ச்சியை போல் தென்னிலங்கை கல்வியை முன்னேற்றம் செய்வதை நோக்கமாக கொண்ட அரசு வடக்கின் கல்வி வளர்ச்சியிலிருந்து இனவாதத்தை ஆரம்பித்தது. கல்வியில் கைவைக்கும் போது கல்வி அமைச்சராக இருந்தவர் பதியுதீன் முகம்மத். நான் ஒரு முஸ்லிம் என்பதால் இதற்காக வெட்க்கப்படுகிறேன். வடக்கில் உரிமைகள் மறுக்கப்பட்டு போராட்டங்கள் வெடித்தன. படிப்படியாக (தமிழ்) எமது பிரதேசக்கட்சிகளுக்கு மட்டும் தான் வாக்களிக்கும் நிலைமை உருவாகியது. இந்த நிலைமையில் தான் நாங்களும் இருந்தோம்.

நாம் காலாகாலமாக தமிழர்களுடன் சகோதர்களாக சேர்ந்து வாழ்ந்தோம்,வாழ்கிறோம்,வாழ்வோம். 1990ஆம் ஆண்டு த.வி.புலிகளால் நாம் வெளியேற்றப்பட்டதால் முழு தமிழ் மக்களையும் எதிரிகளாக பார்க்கவில்லை,பார்க்கவும் மாட்டோம். இதனை இஸ்லாம் எங்களுக்கு கற்றுத்தந்தது. ஆனால் புலிகள் எங்களை வெளியேற்றியதால் நாங்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் இன்றும் எங்களால் மறக்கமுடியாது. புலிகளின் இந்த நடவடிக்கைகளை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதொன்று.

 

அகதிகளாக வடக்கிலிருந்து வந்த எங்களுக்கு அரசியல் செய்யாமல் உடனடி உதவி வழங்கிய புத்தள,பானந்துர,கொழும்பு, மதவாச்சி முஸ்லிம்களை என்றும் மறக்கமாட்டோம்.இந்த காலகட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா தன்னை முஸ்லிம்களின் போராளிகள் என்று கூறிக்கொண்டு, ஜனாதிபதி பிரேமதாசாவை திருப்திபடுத்துவதற்காக அகதிகளாகிய எங்களுக்கு உடனடி உதவி செய்யவில்லை.அது மட்டுமல்ல எமது பிரச்சணைகளை எமது நாட்டுமக்களிடமோ,சர்வதேசத்திற்கோ கொண்டு போகவில்லை.

 

நாங்கள் அகதிகளாக அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் போது சந்ரிரிக்கா பன்டார நாயக்க தலைமையில் அமைக்கப்பட்ட அரசுக்கான பா.ம.தேர்தலின்போது ஸ்ரீ.மு.கா இடம் பெயர்ந்த வாக்காளர் பட்டியளை வைத்துக்கொண்டு யாழ் முஸ்லிம்களையோ, யாழ்ப்பாணத்தையோ சரியாக அறிந்திடாத புத்தளத்தில் உள்ள இல்யாஸ் என்பவரை யாழ் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து பா.ம.உருப்பினராக ஆக்கியது. இன்றும்கூட பா.மன்றத்திலிருக்கும் ஸ்ரீ. மு.கா,ஏனைய முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் அரச,எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களான 19பேரும் பாராளமன்ற பிணங்களே.அன்று புத்ளத்த மசூதியில் பாதுகாப்பு படையின் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பா.மன்றத்தில் உறையாற்றியவர் செல்வநாயகம் அவர்கள் இன்று பல பாகங்களில் நடைபெறும் மசூதி மீதான தாக்குதலைக் கண்டித்து உறையாற்றியவர் சம்பந்தன் அவர்கள்.

மதத்தின பெயரை கூறிக்கொண்டு முற்றுமுழுதாக இஸ்லாத்திற்கு மாற்றமாக சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சகல முஸ்லிம் கட்சிகளும் கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றிக்கெண்டிருப்பதுபோல் வடக்கு முஸ்லிம்களையும் ஏமாற்ற அரசுடன் இணைந்து வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு மேலும் மேலும் ஏமாற்றப் போகிறார்கள். இவர்களுக்கு எந்த வகையிலும் ஆதரவு வழங்காமல் நமது சமூகத்திலிருந்து விரட்டவேண்டும். அரசக்கூட்டணியில் இருப்பதால் தேர்தற்காலங்களில் சிறுபிள்ளைகளுக்கு மிட்டாய் காட்டுவதுபோல் ஆசைவார்த்தைகளைக் கொட்டுவார்கள். ஏமாறாதீர்கள் ! யாழ் முஸ்லிம்ளாகிய எம்உறவுகளே!

 

எனவே நடைபெற இருக்கும் வ.மா.ச தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தல்களிலும் யாழ் முஸ்லிம்களாகிய நாம் தென்னிலங்கை கட்சிகளையோ, எந்த முஸ்லிங்கட்சிகளையோ நம்பி அவர்கள் பின்னால் செல்லாமல் எமது வாழும் பிரதேசத்தின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் எமது பிரதேச கட்சிகளில் எதற்கு வாக்களித்தால் நல்லதென்று பார்த்து அமைச்சு பதவிக்காகவோ, சுகபோகங்களுக்காகவோ,வலைந்து கொடுக்காதவர்கள் கட்சிக்கு வாக்களித்து நமது உரிமைகளையும் தக்கவைத்துக் கொள்வது சிறந்தது.

 

ஆகவே தற்போது நடைபெற இருக்கும் வ.மா.ச தேர்தலில் யாழ் முஸ்லிம்களாகிய நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டால் நமது முடிவு த.கூ அமைப்பாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றம் இல்லை.

 

- அமீன் ஆசிக் (பரிஸ்)

 

http://www.sonakar.com/?p=10037

முஸ்லீம் தலைமைகள் போகும் பாதையை முஸ்லீம் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள மாட்டாரகள். அதை முஸ்லீம் தலைமைகள் வெளிப்படையாக இப்போதைக்கு சொல்லப்போவதுவும் இல்லை. கக்கீம் போன்றவர்கள் சுதந்திரம் வரட்டும் பாகிஸ்த்தான் பிரிக்க என்று அமசடக்கமாக இருக்கிறார்கள். இதில் யாருக்கு ஜின்னா பதவி என்பதில்தான் முஸ்லீம் தலைமைகளுக்கிடையில் இருக்கும் இன்றைய போட்டி. தமிழ்த் தலைமைகள் முஸ்லீம் மக்களை கவனமாக வழி நடத்தாவிட்டால் எல்லை கோடுகளில் பாகிஸ்த்தான் பிரந்த இரத்தம் பிரிந்து ஓடும். இதில் சில கவிராயர்கள் தங்களுக்கும் பெயருக்கு இரண்டு சமுதாயங்களுக்குமிடையில் புலிக்குறை சொல்லி ஆப்பிறுக்குகிறார்கள். இதனால் வலிமையான ஒரு தீர்வை பெற சிறுபான்மை இனங்கள் தவிக்க போகின்றன. கிடைக்க போகும் ஓட்டை சிரட்டைக்கும், பின்னர் தம்முள் தாம் போட்டி போட்டு நன்றாக ஒருவரை ஒருவர் குத்திக்கொள்ளப் போகிறார்கள். தமிழ் தலைமைகள் தூர நோக்காக முஸ்லீம் மக்களுக்கு கக்கீம் போன்றவர்கள் பேருக்கும் பதவிக்கும் ஆக தீட்டும் அழிவுப் பதையை புட்டு வைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.