Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் பரவலாக வெடிக்கும் தனிமாநிலப் போராட்டங்கள்! - தமிழ்நாட்டைப் பிரிக்கவும் யோசனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
india-1813-150.jpg

திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும்,மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார். இதே போலத்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனும் கூறி வருகின்றனர். தெலுங்கானா பிறப்பதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரை முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்றவை கருத்து தெரிவித்ததில்லை. இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

  

அதேவேளை,தெலங்கானா போன்று கர்பி ஆங்லாங் தனி மாநிலம் அமைக்க கோரி அசாமில் புதன்கிழமை போராட்டம் தொடங்கியுள்ளது. திபு மாவட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை தடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.ஆந்திரத்தை பிரித்து தெலங்கானா தனிமாநிலம் அமைக்கப்படுவது போன்று, அசாமின் சில பகுதிகளை பிரித்து கர்பி ஆங்லாங் தனிமாநிலம் அமைக்க வேண்டும் எனக் கோரி சில அமைப்புகளும், பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் கர்பி ஆங்லாங் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு தீவைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போராட்டக்காரர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

 

ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலத்தைப் பிரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்ததன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் தனி கோர்க்காலாந்து கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதற்காக டார்ஜிலிங்கில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த பந்த், மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இந்நிலையில், வரும் சனிக்கிழமையிலிருந்து காலவரையற்ற பந்த் போராட்டத்துக்கு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அழைப்பு விடுத்திருக்கிறது. புதன்கிழமை நடைபெற்ற பந்த் காரணமாக, கடைகள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. எனினும், கோர்க்கா கட்சி அனுமதி அளித்திருந்ததால் வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. மலைப் பகுதிகளில், குறிப்பாக டார்ஜிலிங்கில் அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், தனிமாநிலம் கோரி வரும் சனிக்கிழமை முதல் காலவரையற்ற பந்த் நடைபெறும் என்று கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது. தெலங்கானா தனி மாநிலத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து அசாமைச் சேர்ந்த போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியினர் அசாம் மாநிலத்தை பிரித்து போடோலாந்து தனி மாநிலத்தை விரைவாக அமைக்கும்படி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.அக்கட்சித் தலைவர் ஹக்ராம மொகிலரி தலைமையிலான குழுவினர் புதன்கிழமை புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்து போடோலாந்து தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள், கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின் 6வது பிரிவின்படி போடோலாந்து பகுதிக்கான கவுன்சில் உருவாக்கப்பட்டது. அப்போது புது மாநிலம் அமைப்பதற்கான சட்டம் எதுவும் இல்லாததால் போடோலாந்து தனி மாநிலம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது என்று குறிப்பிட்டுள்ளனர். போடோலாந்து தனிமாநிலம் அமைக்கா விட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

தெலங்கானா தனி மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருப்பதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி உத்தரப்பிரதேச மாநிலத்தை 4 ஆக பிரிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியது:

 

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி சட்டப் பேரவையில் மாநிலத்தை 4 ஆக பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறந்த நிர்வாகம் மற்றும் எளிதான முறையில் ஆட்சி செய்வதற்கு உத்தரப்பிரதேசத்தை பிரிப்பது அவசியமான ஒன்று.ஆனால் துரதிருஷ்டவசமாக மத்திய அரசு அந்த தீர்மானத்தை கிடப்பில் போட்டுவிட்டது.இப்போது தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் தனிமாநில கோரிக்கையை எழுப்பும்.

 

மேற்கு வங்காளத்தை பிரித்து கோர்க்காலாந்து மாநிலம் அமைக்க கோரியும்,மகாராஷ்டிரத்தை பிரித்து விதர்பா மாநிலம் அமைக்க கோரியும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதற்கும் எனது முழு ஆதரவு உண்டு.உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களது மாநிலத்தை பிரிக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.நான் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தபோது நிறைய மாவட்டங்கள், தாலுகாக்களை உருவாக்கினேன்.

 

இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை செய்வதுடன் மாநிலத்தை சிறப்பாக ஆட்சி செய்யவும் முடியும்.நான் உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வாஞ்சல்,புந்தேல்கண்ட்,அவத் பிரதேஷ்,பஸ்சிமாஞ்சல் என்று 4 ஆக பிரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன் என்று தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88955&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ்காரரும், டாகடர் ராமதாசும் மாநிலத்தைப் பிரிக்க முனைவார்கள் என்கிற எண்ணம் தெலுங்கானா முடிவின் பின்னர் வந்தது.. இவ்வளவு விரைவில் அது வெளிப்படும் என நினைக்கவில்லை..

தமிழ் நாடு நமது திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது. இவற்றுக்கு முதல் அமைச்சர்களையே நாம் இறக்குமதிதான் செய்து கொண்டுவருகிறோம். இந்த நிலைமையில் தமிழ்நாட்டில் அப்படி ஒரு கதை மேல் எழுவது அதை கொண்டுவரும் கட்சிக்குத்தான் ஆபத்து. இதை வைத்து, வரும் தேர்தலில் காங்கிரசை நன்றாக தாக்கிவிடலாம். நாம் தமிழர் இயக்கம் இதை வைத்து தோற்க போகும் தேர்ததலில் காங்கிரசு வாக்கு பார்க்க முடியாதபடி  தமிழரை ஒன்றாக வைத்திருக்க முயல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ்காரரும், டாகடர் ராமதாசும் மாநிலத்தைப் பிரிக்க முனைவார்கள் என்கிற எண்ணம் தெலுங்கானா முடிவின் பின்னர் வந்தது.. இவ்வளவு விரைவில் அது வெளிப்படும் என நினைக்கவில்லை..

 

இல்லை இராமதாஸ் முன்பும் சொல்லியிருக்கிறார். பிரிப்பதினால் வன்னியர்கள் அதிகமுள்ள பகுதியில் தான் முதல்வராகலாம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இராமதாஸ் முன்பும் சொல்லியிருக்கிறார். பிரிப்பதினால் வன்னியர்கள் அதிகமுள்ள பகுதியில் தான் முதல்வராகலாம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.

நன்றி தகவல்களுக்கு கந்தப்பு.. அப்படியென்றால் நிறைய நாட்களாக திட்டம்போட்டு வருகிறார் ராமதாஸ்..

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதியும், ராமதாசுடன் சேர்ந்து... தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால்,
ஒன்றிற்கு.. ஸ்ராலினையும், மற்றதுக்கு அழகிரியையும் முதல்வராக்கி... குடும்பப் பிரச்சினையை இலகுவில் தீர்க்கலாம். :D  :lol:

கலைஞர் கருணாநிதியும், ராமதாசுடன் சேர்ந்து... தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால்,

ஒன்றிற்கு.. ஸ்ராலினையும், மற்றதுக்கு அழகிரியையும் முதல்வராக்கி... குடும்பப் பிரச்சினையை இலகுவில் தீர்க்கலாம். :D  :lol:

 

நான் சொல்ல நினைத்தை சொல்லிவிட்டீர்கள்! :)

 

கலைஞர் கருணாநிதியும், ராமதாசுடன் சேர்ந்து... தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால்,

ஒன்றிற்கு.. ஸ்ராலினையும், மற்றதுக்கு அழகிரியையும் முதல்வராக்கி... குடும்பப் பிரச்சினையை இலகுவில் தீர்க்கலாம். :D  :lol:

இதுதான் உண்மை மதுரைய தலைநகராய்  தென் தமிழகம் அழகிரி முதலமைச்சர். வட தமிழகம் ஸ்டாலின் முலமைச்சர் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.