Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டி.வி.டி ஆதாரத்துடன் பொலிஸாரின் அலட்சியம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு ரிஸாட் பதியுதீன் கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
rishad-bathiudeen-240613-seithy-150.jpg

கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது பொலிஸாரின் அலட்சியப்போக்கு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டதற்கான பாதுகாப்பு கமரா காட்சி ஆதரம் அடங்கிய 'டிவிடி' இருவட்டு ஒன்றினையும் இணைத்து ரிசாத் பதியூதின் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். 'பொலிஸார் மக்களை பாதுகாக்க தவறியதை கிரான்ட்பாஸ் மக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர். அத்துடன், தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து செயற்பட்டதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர்.

  

அரசாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இது குறித்து கவலை அடைகிறேன். பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டும். மசூதி குண்டர்களால் தாக்கப்பட்ட போது பொலிஸார் அதனை பார்த்துக் கொண்டிருந்ததை மக்கள் அவதானித்துள்ளனர். குற்றவாளிகளை தண்டிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடத் துடிக்கும் நபர்களுக்கு அது வாய்ப்பாகவும் ஊக்கமாகவும் அமைந்துவிடும்.

 

எனவே கிரான்ட்பாஸ் சம்பவத்தில் கடமையை செய்யத் தவறிய பொலிஸார் மீது உடன் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். அத்துடன் தாக்குதல் நடாத்தியவர்களை இனங்கண்டு தண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மேலதிக தகவல் தேவைப்படுமாயின் தயவு செய்து தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் உங்கள் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றோம்.

 

இவ்வாறு ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90172&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனாவை குண்டர்கள் என்று திட்டிய அமைச்சரை எல்லோரும் கண்டிக்க வேண்டும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு மகிந்த  கூப்பிட்டு 

ஏதும்  பிரச்சினையே  என்று  கேட்டால்

சீ

அப்படி  ஒன்றுமில்லையே  என்று வாலைச்சுருட்டிக்கொள்ளும்   கோடரிக்காம்பு   இது........... :(

Edited by விசுகு

ரிசாட் தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம்களின் அடாவடித்தனங்களை, ஆக்கிரமிப்புகளை மன்னாரிலும், முல்லைத்தீவிலும் அரங்கேற்றி வருபவர். மன்னார் நீதிமன்றத்தினை அவமதித்தவர். இவரது அடாவடித்தனங்களை பொலிசார் கண்டும் காணாமல் விடும்போது ரசித்தவர் இன்று தம் மக்களுக்கு எதிராக அவர்கள் இயங்கும் போது மட்டும் குரல் எழுப்புகின்றார்

 

ரிசாட் - முஸ்லிம் அடாவடித்தனங்களின் அடையாளம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிசாட் தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம்களின் அடாவடித்தனங்களை, ஆக்கிரமிப்புகளை மன்னாரிலும், முல்லைத்தீவிலும் அரங்கேற்றி வருபவர். மன்னார் நீதிமன்றத்தினை அவமதித்தவர். இவரது அடாவடித்தனங்களை பொலிசார் கண்டும் காணாமல் விடும்போது ரசித்தவர் இன்று தம் மக்களுக்கு எதிராக அவர்கள் இயங்கும் போது மட்டும் குரல் எழுப்புகின்றார்

 

ரிசாட் - முஸ்லிம் அடாவடித்தனங்களின் அடையாளம்.

100% உண்மை 

ரிசாத் இலங்கைகோன் பதவியை ராஜினாமா பண்ண வேண்டும் என்கிறார்.

 

பொலிஸ் மா அதிபர்  தமிழர் என்ற முறையில் தனது இனத்துவேசத்தை காட்டி பொலிஸ் மா அதிபரை பதவி விலக வைக்க முயல்கிறார் ரிசாத். தனக்கு தேவையாய் இருந்தால் அரசு பிரதம நீதி அரசரையே பதவி நீக்கம் செய்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபரை பதவி நீக்க, அரசில் கதைக்க தனக்கு யாரும் இல்லாமல் அவஸ்தை படுவது போல நடித்து, எதிர்க்கட்சிகள் கேட்பது போல பொலிஸ் மா அதிபரை பதவி விலகச்சொல்லி அரசின் அரசாங்க அமைச்சர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். நாட்டில் பிரபலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் வெலவேரிய பிரச்சனை சிங்கள கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே என்பது போல அதில் ஏதும் தலையிடாமல் ஒதுங்கியிருந்துவிட்டார் இந்த அர அரசாங்க முஸ்லீம் மந்திரி. ரிசாட்டிடம் பி.பி.சி. நிரூபர் ஏன்  முஸ்லீம்களை பாதுகாக்காத அரசில் இருக்கிறார் என்று கேட்ட போது அது கூட்டமைப்பு இன்னும் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற அனுமதிக்கவில்லை, அதனால் அரசுடன் இருக்க வேண்டி இருக்கிறது என்று இனவாதம் கக்கி, அந்தக் கேள்வியிருந்து விடுவித்தவர். (கூட்டமைப்பை மீறி குடியேற்றங்கள் நடந்து முடிய தான் அரசிலிருந்து விலகுவார் என்பது அவரின் பதிலாக கொள்ளப்பட வேண்டும்)    சுத்த கோமாளித்தனமான ரிசாத்தின் நடத்தைகள்தான் இவை.

 

பொலிஸ் கண்காணிப்பு ஆணைகுழுவின் பேச்சாளர் பி.பி.சி.க்கு கொடுத்த பேட்டியில் மந்திரிகள் அல்ல பொது மக்களே பொலிசின் நடத்தை  பற்றி முறைப்பாடுகள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர். ரிசாத் அந்த பக்கம் போகாமல் பொலிஸ்மா அதிபர் பக்கம் போகிறார்.  

 

பழைய பள்ளிவாசலை விஸ்தரிக்க தடையாக இருந்த அரசமரத்தை வெட்டுவதன் மூலம் பழைய பள்ளிவாசலை விஸ்தரித்து தொழுகை நடத்துவதாகவும் புதியதை கைவிடுவதாகவும் இரு சமூகத்திற்கிடையிலும் இணக்கம் காணப்பட்டது. கக்கீம் பங்கிரங்கமாக பொலிசும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அழிப்பதாக அறிக்கைவிட்டவர். ரிசாத் இந்த இணக்கப்பாடுகளில் சம்பந்தப்படவில்லையாவின் இதுவரை ஏன் கக்கீமின் "அரச நடவடிக்கை திருப்திகரமாக இருக்கிறது" என்ற பத்திரிகை செய்திகளுக்கு மறுப்பு அறிக்கை வெளிவிடவில்லை? இதன்பின்னர் கிறான்பாஸ்சில் திரண்டிருந்த முஸ்லீம் கூட்டத்தை, விவகாரம் தீரக்கப்பட்டதாகக் கூறி முஸ்லீம் மந்திரிகள் கலைய வைத்தவர்கள். கலையும் போது இவர்கள் சிங்கள வீடுகளை தாக்க முயன்றவர்கள்.  பதிலடி கொடுக்க முயன்ற சிங்களவரை பொலிஸ் அடக்கியதாக செய்திகள் வெளிவந்தன. 

 

ரிசாத் பாதுகாப்பு அமைச்சின் உலங்குவானூர்த்தியில் சுற்றிப்பார்த்துக்கொண்டு மன்னாரில் நீதிபதியை, நீதிமன்றத்தை தாக்கியதாக சொல்லப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கு. 

 

அரசில் ஒட்டியிருந்து நக்கிக்கொண்டு, சிங்கள தமிழ்மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கிகொண்டு, பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் காடைதனங்கள் புரிந்து கொண்டிருக்கும் ரிசாட், இந்தவிதமாகத்தான்  பொலிஸ் மா அதிபருடன் தனது புதிய போட்டிகளை ஆரம்பித்திருக்கிறார். பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின்  கட்டளைகளை நிறைவேற்றுபவர். உள் அரசியலை விளங்கிய, பேடி மந்திரி ரிசாத்துக்கு,  தனது கோரிக்கையை அமைசர்களுக்கு மேலாக இருக்கும் பாதுகாப்பு காரியதரசி கோத்தாவிடம் எடுத்து செல்லும் தைரியம் இல்லை. கோத்தா பகைத்தால் இன்னொரு தடவை தான் காடைதனம் புரிய உலங்கு வானூர்த்தி கிடையாது என்ற பயம்.

 

 

Edited by மல்லையூரான்

 
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2013
 
BurnedPallivasal.jpg

அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் அநுராதபுரம் ஆளுந்தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர சபையினரால் இன்று அகற்றப்பட்டுள்ளது.

 

இந்த பள்ளிவாசல் தொடர்பில் கடந்த பல மாதங்களாக  அனுராதபுரம் மாநகர சபைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று வந்துள்ளது.

 

எனினும், இந்த பேச்சுவார்த்தை கடந்த ஜுலை மாதத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்தே இந்த பள்ளிவாசலினை அகற்ற அநுராதபுரம் மாநகர சபை தீர்மானித்துள்ளது.

 

புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த பள்ளிவாசல் உள்ள பிரதேசம் உள்ளடக்கப்படுகின்ற காரணத்தினாலேயே இந்த பள்ளவாசல் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு குறித்த பிரதேச முஸ்லிம்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

 

எனினும் புனித நோன்பு காலம் என்பதனால் குறித்த தீர்மானத்தை  சில நாட்களுக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையிலேயே மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் இன்று அகற்றப்பட்டுள்ளது.

 

இந்த அகற்றல் தொடர்பில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் அநுராதபுரம் மாநகர சபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த பள்ளிவசால் மீது கடந்த வருடம் ஹஜ் பெருநாள் தினத்தன்றும் மற்றொரு நாளும் என இரண்டு தடவைகள் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81

 

 

 

பதியுதின் இதற்கும் ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாரா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.