Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?

Featured Replies

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?

 

download.gif

 

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..

பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்?
உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?

பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்…

ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..?

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று,

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது.

(தலைவியை இயல்பாக ஓரிடத்தல் தலைவன் பார்தலுக்கு இயற்கைப் புணர்ச்சி என்று பெயர்.)

“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே“

(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)


சிறிய வெண்மையான பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

· பாம்பு தோற்றத்தால் அழகிய கோடுகளை உடையதாயினும் செயலால் மிகவும் கொடியது.

· பெண் அழகிய தோற்றம் உடையவளாயினும் உயிரைக் கொல்லும் உணர்வுகளைத் தூண்டக்கூடியவள்.

· பாம்பு தன் பற்களில் கொண்ட விசத்தன்மையால் அடுத்தவரைத் துன்புறுத்தும்.

· பெண் சிரிப்பு என்னும் முறுவல் குறிப்பால் காண்போர் நெஞ்சை வருத்தும் இயல்பினள்.

· பாம்பின் குட்டி தீண்டினால் உடலெங்கும் விசம் பரவும்.

· பெண்னைப் பார்த்தல், அவள் உடல் தீண்டுதல் ஆகியவற்றால் ஆணின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதனால் பெண்வழிச் சேரலில் ஆண் தன் வாழ்க்கையைத் தொலைக் நேரிடும்.

இவ்வாறு பாம்புக்கும், பெண்ணுக்கும் பல ஒற்றுமைகளைக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் இருக்கும் ஈர்ப்பே மனித இனம் வளர்ச்சி பெறக் காரணமாகிறது.

இந்த ஈர்ப்பு மனித இனம் மட்டுமன்றி உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது.

காதல் - அன்பு - ஈர்ப்பு ஆகியவை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாகும்.

இந்த வேதியியல் மாற்றங்களால் ஆணும் பெண்ணும் தன் வாழ்வியல் நெறிகளில் பிறழ்ந்துவிடக்கூடாது என்று பல வழிகளில் நம்முன்னோர் அறிவுறுத்தினர்.

அவ்வடிப்படையில் பெண் மீது கொண்ட ஈடுபாட்டால் ஆண் தன் வாழ்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தவே..

சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று அறிறுத்தினர்.

சீறும் பாம்பு யாரைப் பார்த்துச் சீறினாலும்
தன்னைப் பார்த்துச் சீறுவதாகவே நம்ப வேண்டும்!

சிரிக்கும் பெண் தன்னைப் பார்த்துச் சிரித்தாலும்
ஒரு நொடிப் பொழுது யோசிக்க வேண்டும்……

ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!

 

http://www.gunathamizh.com/2009/11/blog-post_22.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை (சிங்கையில்) பேருந்து தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்தேன்.. அங்கு நின்ற ஒரு ஃபிலிப்பினோ பெண் சினேகமாக சிரித்தாள்..! :unsure: நம்மளையா பார்த்து சிரிக்கப்போகுது என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தேன்.. அங்கே யாருமில்லை.. :rolleyes:

இப்போது சிரிக்கும் பெண்ணை திரும்பவும் பார்க்கிறேன்.. இது தேறாத கேஸ் என்று பாம்பு அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டது.. :(:D

  • தொடங்கியவர்

ஒருமுறை (சிங்கையில்) பேருந்து தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்தேன்.. அங்கு நின்ற ஒரு ஃபிலிப்பினோ பெண் சினேகமாக சிரித்தாள்..! :unsure:நம்மளையா பார்த்து சிரிக்கப்போகுது என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தேன்.. அங்கே யாருமில்லை.. :rolleyes:

இப்போது சிரிக்கும் பெண்ணை திரும்பவும் பார்க்கிறேன்.. இது தேறாத கேஸ் என்று பாம்பு அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டது.. :(:D

 

குறிப்பாய் சிங்கையில் எந்த இடத்து பஸ் ஸ்ராண்டில் நின்றீர்கள் டங்கு :wub: :wub: ??  இப்பிடி மொட்டையா போட்டால் எப்பிடி :unsure: :unsure: ?? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாய் சிங்கையில் எந்த இடத்து பஸ் ஸ்ராண்டில் நின்றீர்கள் டங்கு :wub: :wub: ?? இப்பிடி மொட்டையா போட்டால் எப்பிடி :unsure: :unsure: ?? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

தெலோக் பிளாங்காவில்.. ஏன்.. போய் தேடிப் பார்க்கப்போறிங்களா?? :unsure::D

தேடி எல்லாம் சிங்கையில் போகத் தேவை இல்லை. இதுக்கு என்று இரண்டு இடம் சிங்கையில் இருக்கு. :icon_mrgreen: தேடிப்போனால் நோய் தேடி வரும் :lol:
 

  • கருத்துக்கள உறவுகள்
பொம்பிளை  சிரிச்சால் போச்சு பொயிலை(புகையிலை)விரிச்சால் போச்சு என்றொரு பழமொழியும் வழக்கத்தில் உள்ளது.
 
எல்லாம் தேவை பெண்ணிடம் இருந்து. ஆனால்  அவள் சிரிக்கக் கூடாதாம்.

சிரிக்காமல் அழுதுகொண்டிருந்தால் மூட் வராதே. :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் ஆண்கள் தமக்கு வசதியாகவே எழுதி வைத்துள்ளனர். நீங்களும் அப்பிடியானதைத்தான் தேடித் தேடி எடுத்துப் போடுறியள் போல. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு திரத்திக் கொத்தும் !

பெண்ணைத் திரத்திக்  கொத்த வேணும் !

இரண்டும் மயக்கம் தரும் !! :lol:  :D

  • தொடங்கியவர்

 

பொம்பிளை  சிரிச்சால் போச்சு பொயிலை(புகையிலை)விரிச்சால் போச்சு என்றொரு பழமொழியும் வழக்கத்தில் உள்ளது.
 
எல்லாம் தேவை பெண்ணிடம் இருந்து. ஆனால்  அவள் சிரிக்கக் கூடாதாம்.

 

 

நல்ல காலம் நெடுக்கர் உங்கடை கருத்தைப் பாக்கேலை நுணா  :lol: :lol: :D . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) :) .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.