Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பவர்களே பதில் தாருங்கள்....

Featured Replies

வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து முகப்புத்தகத்தினூடாகவும் பல்வேறு இணையத்தளங்களுடாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

 

தமிழர்கள் விடிவு பெற்று வாழ வேண்டும் என்ற வேணவா கொண்ட பலர் கூட இந்த விமர்சனத் தாக்குதலில் குதித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குறித்த பல விமர்சனங்கள் பலருக்கும் இருக்கின்ற போதிலும் தேர்தல் நேரத்தில் இத்தகைய விமர்னங்களை முன்வைப்பதன் மூலம் என்ன பலனை அடைடய முடியும்?

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கெதிரான கருத்துக்களை விதைப்பதன் மூலம் அதன் எதிராளிகளான  அரசு+ஒ. குழுக்களுக்கு ஆதரவான வகையில் காய் நகர்த்தப்படுவதை விடுத்து வேறென்ன பலனைக் காண முடியும்.

 

மாறாக மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வைப்பது தான் இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமென்றால் கடந்த காலங்களிலிருந்து நாம் பாடம் கற்கவில்லை என்பது தான் பொருளாக இருக்க முடியும்.  மக்களை சுரண்டிப் பிழைக்கும் டக்ளஸ் உள்ளிட்டவர்களுக்கு ஒரு அரசியல் அடையாளத்தை பெற்றுக்  கொடுப்பதற்கு கடந்த காலப் பொதுத் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக இருந்ததை மறந்து விட்டோமா? 45 வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு உறுப்பினரை அனுப்பிய சாதனையைச் செய்தவர்கள் அல்லவா நாங்கள்.

 

தமிழ் தேசியக் கூட்டமம்பு குறித்த விமர்சனங்கள் எல்லோருக்குமே இருக்கின்றன என்றாலும் தேர்தல் நேரத்தில் இது சாதிக்கப் போவது என்ன?

 

எனவே அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு ஒத்தூதும் விதமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் இதற்கான பதிலையும் தந்தால் தெளிவு பெற வசதியாக இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

வாழ்த்துக்கள்

(லேற்றாக  வந்தாலும் :lol: )

  • தொடங்கியவர்

நல்ல முயற்சி

வாழ்த்துக்கள்

(லேற்றாக  வந்தாலும் :lol: )

 

வணக்கம் அண்ணா!

 

உங்கள் நக்கல் புரிகிறது. :lol:

 

இதுவும் தற்காலிக வரவாகவே இருக்கலாம்.... :(  :(

தேர்தல் முடிந்தபின் பெரும்பான்மையான மக்களின் தீர்ப்பு எதுவென்று தெரிந்து விடும்.

அப்பொழுது தமிழ்தேசியக் கூட்டமைப்புத்தான் எங்களின் ஏகபிரதிநிதிகள்

சம்பந்தரும் விக்னேஸ்வருனும்தான் எங்களின் தேசியத் தலைவர்கள்

இவர்களை விமர்சிப்பவர்கள் துரோகிகள், ஒட்டுக் குழுக்கள், இரண்டகர்கள்...ect

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்தபின் பெரும்பான்மையான மக்களின் தீர்ப்பு எதுவென்று தெரிந்து விடும்.

அப்பொழுது தமிழ்தேசியக் கூட்டமைப்புத்தான் எங்களின் ஏகபிரதிநிதிகள்

சம்பந்தரும் விக்னேஸ்வருனும்தான் எங்களின் தேசியத் தலைவர்கள்

இவர்களை விமர்சிப்பவர்கள் துரோகிகள், ஒட்டுக் குழுக்கள், இரண்டகர்கள்...ect

 

 

உங்களது  குசும்புகளுக்கும்  ஒரு முடிவு வரணும்

வரும்.......... :( 

தமிழ் தேசிய கூட்டமைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. விமர்சனங்கள் மூலம் அவர்கள் செய்யும் தவறுகள் சுட்டிகாட்டப்படவேண்டும். இதில் துரோகி, தியாகி என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் சுட்டிகாட்பட்டு விமர்சனம் செய்யப்படுவது சம்பந்தபட்டவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என்று பொருள் கொள்ளலாகாது. அதேவேளை விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும்.

 

அளவிட முடியா அர்பணிப்புகளை செய்த விடுதலைப்புலிகள் செய்த மோசமான  அரசியல் தவறுகள் தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டபட்டு திருத்தப்பட்டிருந்தால் இன்று நிலமை வேறுவிதமாக இருந்திருக்கும். அவர்களின் தியாகங்களுக்கு தகுந்த பலன் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும். இன்று தமிழ் மக்களின் தலைவர்களாக விடுதலை புலிகளே இருந்திருப்பர். பேரினவாதிகளால் தமிழ்மக்கள் ஏளனத்துடன் பார்க்கப்படும்  அடக்கி ஒடுக்கபடும்  இன்றைய நிலைமை உருவாகி இருக்காது.

 

ஆகவே ஆக்கபூர்வமான கெளரவமான விமர்சனங்களை வரவேற்போம்.

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் வீமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் இ;நத விமர்சனம் முன்வைக்கப்படும் காலப்பகுதி குறித்த ஆதங்கத்தையே நான் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

 

காரணம் ஏற்கனவே இரண்டும் கெட்டான் நிலையீல் இருக்கும் மக்கள் இத்தகைய வீமர்சனங்களால் அதிருப்தியடைந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்தால் மன்னாரிலிருந்து ரிசாத்தின் பரரிவாரங்களும் கிளீநொச்சியிலிருந்து கீதா:ஞசலியின் எடுபிடிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து அங்கஜனின் குண்டர்களும் எமது மாகாண சபை அங்கத்தவர்களாவதைத் தடுக்க முடியாமல் போய் விடும்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் வீமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் இ;நத விமர்சனம் முன்வைக்கப்படும் காலப்பகுதி குறித்த ஆதங்கத்தையே நான் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

 

காரணம் ஏற்கனவே இரண்டும் கெட்டான் நிலையீல் இருக்கும் மக்கள் இத்தகைய வீமர்சனங்களால் அதிருப்தியடைந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்தால் மன்னாரிலிருந்து ரிசாத்தின் பரரிவாரங்களும் கிளீநொச்சியிலிருந்து கீதா:ஞசலியின் எடுபிடிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து அங்கஜனின் குண்டர்களும் எமது மாகாண சபை அங்கத்தவர்களாவதைத் தடுக்க முடியாமல் போய் விடும்...

 

தங்கள் கலவலை நியாயமானதே. தற்போதைய நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்ப்படுத்தவேண்டும் என்பதை ஒப்பு கொள்கிறேன். நான் கூறியது சாதாரண பொதுவான நிலையை.  தங்கள் கருத்துக்கு நன்றி.

நாலு வருடம் கடந்த பிறகு பலதரப்பையும் அரவணைத்து போக வேண்டும் எண்று கூட்டமைப்பு முடிவெடுத்தமை தெரிகிறது... 

 

தேர்தல்  விஞ்ஞாபனம் கூட  சில பல பலமான வார்த்தை பிரயோகங்களும் அதையே காட்டுகிறது...   அவை நடக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருப்பது ( அது கூட பிறந்தது..) தவிர்க்க முடியவில்லை...  ஆனாலும் முயற்சி  எடுக்க பட்டு இருப்பதை பாராட்டுகிறேன்... 

 

நான்கு வருடங்களின் முன்  இந்த நடவடிக்கைகளை கூட்டமைப்பு எடுத்திருந்தால் இன்னும் நாம் பலமானவர்களாக இருந்து இப்போது வேறான திசைகளில் பயணித்து இருக்க முடிந்திருக்கலாம் எனும் ஆதங்கம் இருப்பதை தவிர்க முடியவில்லை...

 

ஒண்றை மட்டும் சொல்ல முடியும் கூட்டமைப்பை எல்லாரும் ஆதரிக்க வைப்பதற்க்கு இன்னும் நீண்ட பாதைய கடக்க வேண்டி தேவையை கூட்டமைப்பின் தலைவ சம்பந்தரே கடந்த நான்கு வருடமாக உருவாக்கி இருக்கிண்றார்...   இண்றைய குழப்பத்துக்கு காரணமும் அவரே...  இராஜதந்திரம் கருதி அமைதியாக இருந்து சந்தேகத்தை நீட்டிக்காமல் அவர் மக்களிடம் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதே இப்போதைய எனது விருப்பம்... 

Edited by தயா

  • தொடங்கியவர்

நாலு வருடம் கடந்த பிறகு பலதரப்பையும் அரவணைத்து போக வேண்டும் எண்று கூட்டமைப்பு முடிவெடுத்தமை தெரிகிறது... 

 

தேர்தல்  விஞ்ஞாபனம் கூட  சில பல பலமான வார்த்தை பிரயோகங்களும் அதையே காட்டுகிறது...   அவை நடக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருப்பது ( அது கூட பிறந்தது..) தவிர்க்க முடியவில்லை...  ஆனாலும் முயற்சி  எடுக்க பட்டு இருப்பதை பாராட்டுகிறேன்... 

 

நான்கு வருடங்களின் முன்  இந்த நடவடிக்கைகளை கூட்டமைப்பு எடுத்திருந்தால் இன்னும் நாம் பலமானவர்களாக இருந்து இப்போது வேறான திசைகளில் பயணித்து இருக்க முடிந்திருக்கலாம் எனும் ஆதங்கம் இருப்பதை தவிர்க முடியவில்லை...

 

ஒண்றை மட்டும் சொல்ல முடியும் கூட்டமைப்பை எல்லாரும் ஆதரிக்க வைப்பதற்க்கு இன்னும் நீண்ட பாதைய கடக்க வேண்டி தேவையை கூட்டமைப்பின் தலைவ சம்பந்தரே கடந்த நான்கு வருடமாக உருவாக்கி இருக்கிண்றார்...   இண்றைய குழப்பத்துக்கு காரணமும் அவரே...  இராஜதந்திரம் கருதி அமைதியாக இருந்து சந்தேகத்தை நீட்டிக்காமல் அவர் மக்களிடம் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதே இப்போதைய எனது விருப்பம்... 

இந்த அரவணைப்பு என்பது தேர்தலை நோக்கமாகக் கொண்டதாக அல்லாமல் தொடரச்சியானதாக தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தொடரச்சியான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது

எது எப்படியானாலும் கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மையை பெறவேண்டும்.எல்லோரும் அதற்காய் உழைப்போம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.