Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28-rahul-has-written-to-me-on-ordinance-

 

'முட்டாள்தனமான அவசர சட்டம்'- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா?

 

டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி ஆளும் காங்கிரஸிலும் எதிர்ப்பு எழுந்தது.

 

அதுவும் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, அவசரச் சட்டம் கொண்டு வந்தது முட்டாள்தனம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

 

இது தமக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானமாக மன்மோகன் சிங் கருதியதால் உடனடியாக சோனியாவுடன் அவர் பேசினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக கூறியிருக்கிறார். இதை கேட்டதும் சோனியா கடும் அதிர்ச்சி அடைந்தார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

 

இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுல்காந்தி அவசரம், அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு இ-மெயில் செய்தி அனுப்பினார்.

 

ஆனாலும் மன்மோகன்சிங் மிகுந்த தர்ம சங்கடத்திலும், வருத்தத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. ராகுல் பேச்சால் எதிர்க் கட்சிகளிடமும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் உடனே பதவி விலகுவது நல்லது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் மன்மோகன்சிங் சட்ட நிபுணர்களுடன் பதவி விலகுவது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

சும்மா படுத்துக் கிடந்த சிங்கத்தை... சிலிப்பிவிட்டான்... ராகுல் பையன்.
சிங் என்றால்.. கிங், என்று... மன்மோகன் பாயும் நேரம் வந்து விட்டது...

டோய்.........  கடையைப் பூட்டுங்கடா... நாட்டிலை கலவரம், ஆரம்பிக்கப் போகுதடா.....

  • கருத்துக்கள உறவுகள்

பத்து மாதமாவது பதவியில் இருக்க ராகுல் பையனின் பலே ஐடியா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்து மாதமாவது பதவியில் இருக்க ராகுல் பையனின் பலே ஐடியா.. :D

 

ப‌த்து மாத‌ம் சும‌ந்து பெற்ற‌... அன்னை சோனியாவுக்காக,

இதுவும்....‌ ராகுல் பைய‌ன் செய்யாட்டி.... என்ன‌ நியாமுன்னு கேட்குற‌ன். :D  :icon_idea:  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

..... மன்மோகன்சிங் சட்ட நிபுணர்களுடன் பதவி விலகுவது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

நாட்டில் நல்ல காரியங்களும் அவ்வளவு சீக்கிரம் நடந்திடுமா? :o

 

இவர் ராஜினாமா செய்துதான் என்ன செய்யாட்டால்தான் என்ன .........எந்த மாற்றமும் வராதுங்க ........ :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ராஜினாமா செய்துதான் என்ன செய்யாட்டால்தான் என்ன .........எந்த மாற்றமும் வராதுங்க ........ :D

அது சரி அண்ணா...இந்த குடும்பி 2004லில் இருந்து இன்று வர நாட்டு மக்களுக்கு செய்த நன்மை என்ன....ஊழல் கூட்டத்தின் பெரும் தலைவன் இவன்

  • கருத்துக்கள உறவுகள்

tamil+funny+images7.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.