Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவை நீக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் தியாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை நீக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் தியாகு
[ புதன்கிழமை, 02 ஒக்ரோபர் 2013, 00:39 GMT ] [ அ.எழிலரசன் ]


தமிழ் மக்களைக் கொடூரமாக கொன்று குவித்த சிறிலங்கா அரசை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் தியாகு, நேற்று மாலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தியாகுவுடன் அவரது ஆதரவாளர்கள் 15 பேரும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் இந்தப் போராட்டத்தை தொடங்கினார்.

தமிழ் மக்களை கொடூரமாக கொன்று குவித்த சிறிலங்கா அரசை, கொமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும், சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் கொடுக்கும் திட்டத்தையும், கடலுக்கு அடியில் கம்பி வழியாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும், இந்திய அரசு கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்றிரவு, தியாகுவை சந்தித்தார்.

அப்போது, வியாழக்கிழமை தானும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னதாக, கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிறிலங்காவை நீக்கக் கோரி, சென்னை கடற்கரைச் சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தியாகுவுக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது.

இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

அவரது மனுவை நேற்றுப் பிற்பகல் விசாரித்த உயர்நீதிமன்றம், கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என்ற அரசின் நிலையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதேவேளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உண்ணாவிரதம் இருக்கும் நாள், எத்தனை மணி நேரம் மற்றும் எவ்வளவு பிரமுகர்கள் வருவார்கள் என்பன உள்ளிட்ட விபரங்களை தியாகு, நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்தே, நேற்றுமாலை சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை தியாகு ஆரம்பித்துள்ளார்.


http://www.puthinappalakai.com/view.php?20131002109172

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் இப்போராட்டம் முடித்துவைக்கப்பட வேண்டும்.. கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.!

கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.! 

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சியம் வெல்ல வாழ்த்துக்கள்.

 

எதற்கும் பக்கத்தில் உங்கள் மருத்துவக் குறிப்புகளையும் வைச்சுங்கொள்ளுங்கோ. தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்பையும் எழுதி வைச்சுங்கோங்கோ.

 

ஏன்னா.. அப்புறம்.. இவருக்கு புற்றுநோய் சாகிற கட்டத்தில் உள்ளவரை உண்ணாவிரதம் இருத்தி புலிப் பினாமிகள் பிலிம்மு காட்டுகிறார்கள்.. குடும்பத்தில் பிரச்சனை தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக உண்ணாவிரதம் இருக்கிறார்.. நடிகையை ஏமாற்றி விட்டதால்.. நடிகை தற்கொலைக்கு..  அச்சுறுத்தியதால்... இல்ல ஒரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பு அது அம்பலமானதால்.. உண்ணாவிரதம் இருக்கிறார்.. எல்லாம் சீமான் போன்றவர்களின் விடாப்பிடியால் வாற பிரச்சனை. இப்படித்தான் பிரபாகரனும்  விடாப்பிடியா இருந்து திலீபனை.. பூபதி அம்மாவை சாகடிச்சவர் என்று.. இன்னோரென்ன.. வசைமொழிகள்.. உங்களையும்... இணையத்தையும்.. ஊடகங்களையும் அலங்கரிக்கத் தயாராக இருக்கின்றன.. என்பதையும் ஒரு கணம் மனதில் கொள்ளுங்கள்.

 

உது பறுவாயில்லை.. காங்கிரஸ் கூலிகள்.. தேசத்தந்தை மகாத்மா காந்தியை (காங்கிரஸை உருவாக்கிய காந்தியே அதனை கலைக்கவும் சொல்லிட்டார். ஆனால் இன்னும் கலைச்ச மாதிரித் தெரியல்ல. மாறாக வேற காந்தி பெயரில இருந்து.... உருவான.. குடும்ப ஆட்சி மட்டும் பாரத மாதாவின் கழுத்தைத் திரிகிக்கிட்டு இருக்குது.) தியாகு கேவலப்படுத்திறார்.. உவருக்கு.. பிழைப்புக்கு வழி இல்ல.. ஈழத்தமிழர் விவகாரத்தை கையில் எடுத்திட்டார். சிறீலங்கா எங்கள் நட்பு நாடு அது எதில இருக்கனும் இல்லாமல் இருக்கனுன்னு தீர்மானிக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியேன்னு.. காட்டமா அறிக்கைகள் விடுவார்கள்.

 

அண்மையில்.. ஒன்று முகநூலில் ஒரு பதிவு போட்டுச்சுது.. அதை அங்குள்ளவர்கள் ஏனப்பா உதை திலீபன் இறந்து அடுத்த ஆண்டோ இல்ல 5 ஆண்டோ இல்ல 10 ஆண்டோ இல்ல 15 ஆண்டோ இல்ல 20 ஆண்டோ கழிச்சுப் போடல்ல.. இப்ப 26 ஆண்டு கழிச்சுப் போடுறா எண்டு கேட்க.. அந்த ஒன்று சொல்லிச்சுது அப்ப முகநூல் இல்ல.. இப்ப இருக்குது என்று. இப்படியான அதி சாமர்த்திய சீவன்களும்.. எம்மத்தியில் தமிழ்மொழி கற்று இணையத்தில் ஊடகங்களில் எழுதப் பழகி இருக்குதுங்க. இப்படி  அதி உச்ச அறிவாளிகள் உருவாவார்கள் என்று தெரிந்திருந்தால் திலீபன் அண்ணாவும் ஏதேனும் முன்னேற்பாட்டோடு உண்ணாவிரதம் இருந்திருப்பார். அந்த வகையில்.. மேற்படி விடயங்களையும் கருத்தில் கொள்ளுங்கோ.

 

சிங்களவனை.. ஹிந்தியனை விட அவனுங்களுக்கு அடி எடுத்துக் கொடுற தமிழங்க.. தமிழரோடு ஒட்டி இருக்கிறவங்க தான்.. தமிழங்களின் அழிவுக்கே முக்கிய காரணம்..! அதையும் மனசில வைச்சுக் கொண்டு போராடுங்க..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
உங்களின் உண்ணாவிரதப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
 
பி;கு:அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த திலீபன் போராட்டத்தை புரிந்து கொள்ளாத ஈனர்கள்  இந்திய ஆளும் வர்க்கத்தினர் என்பதனை மனதில் வைத்து உங்களது போராட்டத்தை தொடருங்கள்.   :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.