Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகுவின் போராட்டத்தைக் கைவிடுமாறு மன்மோகன் சிங் கோரிக்கை

Featured Replies

மத்தியில் இருந்து அனுமதி வரும்வரை காத்திருந்துவிட்டு நேற்று மன்மோகன் கடிதம் எழுதியதும் திமுக தொண்டர்கள் இன்று ஐயா தியாகுவின் உண்ணாவிரதத்தை பற்றி முகநூலில் கவலை தெரிவிக்க தொடங்கியுள்ளார்கள். 14 நாட்கள் கண்ணுக்கு தெரியாத தோழர் தியாகுவின் போராட்டம், மன்மோகனின் கடிதத்திற்கு பிறகு இன்று திடிரென அக்கறை ஏற்ப்பட்டுள்ளது ஐயா தியாகுவின் மேல்.

திமுக வைப்போல கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல் செய்ய யாராலும் முடியாது.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யா கருணாநிதி.

பிரதமர், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா அல்லது கூடாதா என்பதல்ல கோரிக்கை. இந்தியா மற்றும் அதன் சார்பில் யாரும் கலந்துகொள்ள கூடாது , மேலும் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் இந்தியா லாபி செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

கனடா அதிபரை தொடர்ந்து. இந்தியாவும் "இனபடுகொலை செய்யப்பட்ட நாட்டில் காமன்வெல்த் நடக்க கூடாது " என்று அறிக்கை வெளியிட வேண்டும்

அய்யய்யா கருணாநிதி , பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்கிற உட்டாலக்கடி அரசியல் கடிதத்தை காட்டி ...அருவருப்பு அரசியல் செய்ய முயல வேண்டாம்.

(facebook: loyolahungerstrike)

இதத்தான் முடியாதத கேட்ட்கும் வியாபாரம் என்பது.

இந்தியா செய்யவே முடியாத ஒன்றைக்கேட்டா கடைசி வரை ஆச்பத்திரி போகும் வரை உண்ணாவிரதம், அம்புலன்ஸ் வரும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லி கல்லாவை நிரப்பலாம்.

முடியுமான காணி பொலிஸ் அதிகாரத்தை கேட்டு, அதை கொடுக்கும் படி இந்தியா இலங்கையை நெருக்கி, இலங்கையும் கொடுத்திட்டா. வியாபாரம் படுத்துடுமில்ல.

இதை விட சோனியா குடும்பதோடு இத்தாலிக்கு போகணும் என்று கேட்டுப் போராடுங்க. அது நடந்தாலும் நீங்க கேக்கிறது நடவாது.

தியாகு அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் நடத்தியது. இதில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 10,000 பேரளவில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

இது தொடர்பான செய்தி, படங்களை பார்க்க : http://www.yarl.com/forum3/index.php?showtopic=130804&p=948008

எதிர்வரும் 17 ஆம் திகதி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் சீமான் அண்ணாவின் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இடம்: ஆளுநர் மாளிகை
நேரம்: காலை 10 மணி.

 

(தகவல்: முகநூல்)

Edited by துளசி

தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளித்துள்ளது. வயதான காலத்தில் , சர்க்கரை நோயுடன் அவர் 15 நாட்களுக்கு மேல் உறுதியுடன் உண்ணா நிலையில் இருந்தது பெரிய சாதனை தான் என்று சொல்ல வேண்டும்.

உலகெங்கிலும் தமிழர்கள் பலரும் தியாகுவின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். கட்சித் தலைமைகள் வைகோ, சீமான், பண்ருட்டி வேல்முருகன், திருமாவளவன் மற்றும் தமிழருவி மணியன் போன்றோரும் தோழரை சந்தித்து உண்ணா நிலையை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். முகநூலில் பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். மாணவர்களும் அழுத்தம் கொடுத்தனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டும் , தமிழகத்தில் நடைபெறும் பல மாணவர் , கட்சிகளின் போராட்டங்களை சுட்டிக் காட்டியும் தான் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கம் தோழரை போராட்டத்தை முடிக்குமாறு வலியுறுத்தினர் . அதன் பேரிலேயே தோழர் தன்னுடைய உண்ணா நிலையை முடித்துக் கொண்டார். அதே நேரம் , பிரதமரிடம் இருந்து கருணாநிதிக்கு ஒரு கடிதம் வந்ததும் , அதுவும் ஒரு காரணமாக சேர்க்கப்பட்டு விட்டது. அக்கடிதம் வரவில்லை என்றாலும் தோழர் தியாகு இன்று போராட்டத்தை முடித்துக் கொண்டு இருப்பார். எனினும் பிரதமரின் பதில் சற்று ஆறுதல் பரிசாக தான் வந்தது. அதனால் அதையும் தோழர் குறிப்பிடத்தான் வேண்டி வந்தது.

இப்போராட்டத்திற்கு முழு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் இது முதல் வெற்றி என தோழர் குறிப்பிட்டுள்ளார். பல கட்சிகளையும் , இயக்கங்களையும் இப்போராட்டம் இணைத்துள்ளது. போராட தூண்டியுள்ளது, இப்போராட்டம் புதிய வடிவெடுக்கும் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார் தோழர். தோழரின் உண்ணா நிலை முடிவு பெற்றதற்கும் டெசோ அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் திமுக இப்போராட்டத்தில் ஆதாயம் தேடாமல் இந்தியாவை இலங்கைக்கு அனுப்பாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதே திமுக தமிழர்களுக்கு செய்த அநீதிக்கான பரிகாரம் ஆகும்.

 

 

Rajkumar Palaniswamy

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
மகிழ்ச்சியான செய்தி!
 
தோழர் தியாகுவும் உயிரோடு இருக்கிறார்!
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பல உன்னத வேலைகளை செய்தவர்.
சில தவறுகளால் ....
சில மனிதர்களின் பரிகாசங்களுக்கு உள்ளாவது கவலைக்கு உரியது.
 
எமக்கு தலைவர் என்றால் பிரபாகரன்தான்.
ஒழுக்கம் பண்பு இவரின் அசையாத நம்பிக்கை. அதனூடுதான் நாம் யாரையும் பார்க்கிறோம்.
 
தோழர் தியாகு அவர்கள்.
தொடரும் வாழ்வில் கடந்த கால தவறுகளை கடந்து . வாழ வேண்டும் என்பது ஒரு சிறிய கோரிக்கை.

இனி மன்மோகன்சிங் அப்படியான முடிவுகள் தான் எடுப்பார் என நம்புகின்றீர்களா?

சிங்கிற்கு ஒரு நன்றி கடிதம் போடுவவோமா?

எடுத்த முடிவை மன்மோகன் செயற்படுத்துவார் எண்று இல்லை.. ஆனால் முடிவு எடுக்க முன் பரிசீலிக்க தமிழ் மக்களின் உணர்வுகள் பரிசீலிக்க எடுக்கப்படும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.