Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லிராணியும் அலறும் அப்பாவிப் பெண்களும் .... வன்னியில் அரங்கேறும் அவலங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டில்லிராணியும் அலறும் அப்பாவிப் பெண்களும் .... வன்னியில் அரங்கேறும் அவலங்கள் - 1 –

18 அக்டோபர் 2013


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுதர்ஸினி பெனான்டோ

விடை தெரியாத பல கேள்விகளுடன் உங்களிடம் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களை நான் சந்திக்க இருக்கிறேன்;.....


தேர்தலில் மிகப்பலமான வெற்றியை பெற்று விட்டோம் என்ற வீரப்பிரதாபங்கள்; இன்னும் ஓயவில்லை. அவலங்களை சுமந்து அனாதரவாய் வாழும் எம்மக்கள் துரும்பாய் தந்த வாக்குகள் இன்று அரசியல் கழுத்தறுப்புகளுக்கும், பந்தாக்களுக்கும், கதிரைகளைப் பற்றிப் பிடிப்பதற்கும் பயன்பட்டுக்கொண்டு இருக்கின்றன.


இத்தகைய அபத்தமான சூழலில் என் மனதில் எம் சமூகம் தொடர்பாக எழுகின்ற கவலையுடன் கூடிய விடை தெரியாத பல பிரச்சினைகள் கண்களிற்கு தெரிகின்றன. அவ்வப்போது தேவை நிமித்தம் வன்னி செல்லும் போது அந்த மக்களின் வாழ்வின் கொடுமைகளை என்னால் முடிந்தளவிற்கு தெரிநிதுகொள்ள முற்படுகிறேன். அவற்றை இனங்கண்டு வருகின்றேன். இந்தப் பிரச்சனைகள் முற்றி, கனிந்து, விதையாகி, மண்ணில் புதையுண்டு, முளைப்பதற்கு முன்னர் தடுக்கப்பட வேண்டும் இல்லையேல் விடுதலைக்காய் உயிர் நீத்த லட்சக்கணக்கான உறவுகளின் தியாகங்கள் விளலுக்கு இறைத்த நீராவதனை யாரும் தடுக்க முடியாது. அதனால் வாரம் ஒரு முறை குளோபல் தமிழ்ச் செய்திகளின் ஊடாக உங்களை சந்திப்பேன்....

சுதர்ஸினி பெனான்டோ -

திருமுறிகண்டியில் அரை ஏக்கர் திட்டத்தில் (மீள் குடியேற்ப்பட்ட இவர்களின் நிலத்தில் இராணுவம் குடியிருக்கின்றது) இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் வீ.........ம் தே.......னி என்பவர் தற்போது சவூதியில் வீட்டுப்பணிப் பெண்னாக தொழில் புரிகின்றார். போரில் கணவரை இழந்தவர். வயது 34. இவர் 4 பிள்ளைகளின் தாய். இவர் எவ்வாறு; சமூக விரோத கும்பல்களினால் ஏமாற்றப்பட்டு வெளிநாடு சென்றார் என்பதனையும் இங்கு நோக்கப்படவேண்டியது.


சாந்தபுரத்தில் வசிக்கும் டில்லி ராணி என்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் பெண்ணே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணம் என அறியப்படுகிறது. இவரின் பிரதான தொழில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் மிகவும் வறுமையான வெளி உலகம் தெரியாத பெண்களை தெரிந்தெடுத்து இராணுவத்திற்கு தேவையான போது விபச்சாரத்திற்கு அனுப்புதல் மற்றும் ஆடைத்தொழிற் சாலையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி பெண்களை ஏமாற்றி இராணுத்தின் துணையுடன் கொழும்பின் புறநகர் பகுதிகளிற்கு விபச்சாரத்திற்கு அனுப்புதல். (இதில் சரியான அணுகுமுறைமைகளின் ஊடாக உண்மையாகவே ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைபெற்று தொழில் புரியும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் டீல்லிரானியால் அனுப்பபட்டு சீர்கேட்டுக்கு உள்ளாகுபவர்களில் உள்ளடங்க மாட்டார்கள். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)


அவ்வாறு கொழும்பிற்கு அனுப்பட்ட பெண்களில் ஒருவரே வீ...........ம் தே.......னி ஆவார். இவருடன் 3 பெண்களை கொழும்பில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். அதில் 2 பெண்கள் வீடு திரும்பி வந்து விட்டதாகவும் வீ........ம் தே........னி மட்டுமே சவூதி சென்றதாகவும் அவரின் இயலாத தாய் கண்ணீர் விட்டு புலம்புகின்றார்.


இந்த தாய்க்கு தான் வாழும் வன்னியைத் தவிர வேறு பிரதேசங்களையோ கொழும்பையோ தெரியாது இவ்வாறான குடும்பங்களே பரிதாபமாக ஏமாற்றப்படுகின்றார்கள். தற்போது இந்த தாய் அவரின் மகள் பெற்ற 4 பிள்ளைகளையும் சேர்த்து சுமக்க வேண்டிய மூதாட்டி ஆகிவிட்டாள். டில்லி ராணியின் மூலம்; சவூதி அனுப்பப்பட்ட பெண் அங்கு சென்று 6 மாதங்கள் ஆகிவிட்டன இதுவரை 1 தடவை மட்டுமே தொடர்பு கொண்டு 18 000 டூபா பணம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.


டில்லி ராணியினால் பாதிக்கப்படுவோர் கண்ணீரில் நனைகின்றனர். இராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் டில்லிராணி பற்றி வாய்திறக்கவே அங்குள்ளவர்கள் நடுங்குகிறார்கள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97786/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
இங்கிருந்து வீரம் பேசுபவர்கள் போய் அந்தப் பெண்ணை அடக்கலாமே ^_^
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.