Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் இலங்கை செல்ல இந்திய பாதுகாப்பு அமைச்சரும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்கள் அனைவரும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இசைப்பிரியா படுகொலை உள்ளிட்டவற்றால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை பிரதமர் மதிக்க வேண்டும். எனவே 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புறக்கணிக்கக் கூடாது என்று அந்தோணி கூறியுள்ளாராம்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/3-key-union-ministers-including-k-antony-oppose-pm-s-chogm-visit-186578.html#slide398439

ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன்தான், பிரதமர் இலங்கைக்குப் போயாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படிப் போகாவிட்டால் இலங்கை, சீனா பக்கம் போய் விடும் என்று மத்திய அரசை அவர் பயமுறுத்தி வருகிறாராம். மேலும் ராஜபக்சே இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றி விட்டார் என்றும் பச்சைப் பொய்யாக பேசி வருகிறாராம் மேனன்.

Malayale VS Malayale?

இவ்வளவையும் மீறி மன்மோகன் சின் பொதுநலவாயத்துக்கு போனால் இவருக்கும் அங்கே இன்னொரு விஜித முனி காத்திருப்பார்.

மகாநாட்டுக்கு வந்தால் மட்டும்  இலங்கை இந்தியாவை மதிக்க வேண்டும் என்று எங்கும் இல்லை. இலங்கை இந்தியாவுக்கு நன்றி காட்ட வேண்டுமாயின் 2011 வைத்து அவுஸ்திரேலியாவில் எல்லோரும் எதிர்த்த போது இந்தியா இலங்கைக்கு மகாநாட்டை பெற்றுக்கொடுத்ததே, அதற்காக இலங்கை சீனாவுடன் 2011 தொடக்கம் இன்றுவரை ஒட்டாமல் இருந்திருக்கலாம் இல்லையா? ஆனால் இந்த காலத்தில் வளர்ந்தது மாதிரி இலங்கை-சீனா உறவு எப்போதும் வளர்ந்ததது கிடையாது. 

 

1987ல் இலங்கைக்குள் ஊடுருவியதால் அதன் பலனைத்தான் இன்று சீனாவின் பக்கம் சார்ந்துவிட்ட இலங்கையிடமிருந்து இந்தியா இருந்து காண்கிறது. எப்படியாயினும் இலங்கையை வற்புறுத்தி வடமாகாண தேர்தலை நாடாத்துவித்ததற்கு இந்தியாவுக்கு இலங்கை சரியான பரிகாரம் ஒன்றை கண்டு பிடிக்கும். 

 

இந்த மகாநாடும், வரும் ஐ.நா வின் 25ம் கூட்டத்தொடரும் முடிய  எப்படி இலங்கையின் உறவை தக்க வைக்க முடியும் என்று சிவசங்கர்மேனனிடம் திட்டம் ஏதாவது இருக்கா?

 

2014 தேர்தல் வர இன்னமும் காலம் இருக்கிறது. சிவசங்கர் மேனன் பசிலுடன் பேசி தான் இலங்கையில் போட்ட முதலீடுகளை திருப்பி எடுப்பதுதான் நல்ல முடிவு. இல்லையேல் "கறுப்பு பணம் தானே போனால் போகுது" என்று விட்டுவிட வேண்டியதுதான். தேர்தலின் பின்னால் காங்கிரசுக்கு இலங்கை வர வீசாக்கூட கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் அவசர அவசரமாக அமெரிக்கா சென்று அவர்களது செயற்பாடுகளையும் முடக்கியவர் இந்த மேனன். பதவியை விட்டு விலத்தினால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் அவசர அவசரமாக அமெரிக்கா சென்று அவர்களது செயற்பாடுகளையும் முடக்கியவர் இந்த மேனன். பதவியை விட்டு விலத்தினால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.

 

அவ்வளவு சுலபம் அல்ல! குடும்பமே வெளிநாட்டு ராஜ தந்திரிகள் சேவையில் தான், இவற்றை தகப்பனார் ஆஸ்திரியாவின் தூதராகவும் இருந்தவராம். இவருடைய மச்சினன் தான் எனக்கு கலாநிதிப் பட்ட ஆய்வின் மேற்பார்வையாளராக இருந்தவர். கிட்டத் தட்ட இன்னொரு நேரு குடும்பம் இது!

 

பிரதமர் இலங்கை பயணம்: தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முடிவு எடுக்க வேண்டும்: ஏ.கே.அந்தோணி
4th November 2013

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக சட்டசபையிலும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது என்று, காங்கிரஸ் மேலிட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையில், விடுதலைப்புலிகள் இயக்க ஊடக பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியா படுகொலை குறித்து சானல் 4 டி.வி. வெளியிட்ட புதிய வீடியோ, தமிழகத்தின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், மூத்த மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணியும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘‘உலகம் முழுவதும் உள்ள 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், மத்திய மந்திரிசபை பாதுகாப்பு குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று, ஏ.கே.அந்தோணி கூறி இருக்கிறார்.

மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், பிரதமர் இலங்கை செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறி வந்தாலும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பதே இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று கருத்து தெரிவித்து வருகிறார். அதேபோல் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், உளவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகர்கள், பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள். இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்கவும் பிரதமர் கலந்து கொள்வது அவசியம் என்பது அவர்கள் தரப்பு வாதமாகும்.

இருப்பினும் மத்திய மந்திரிகளும், தமிழகத்தில் காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க.வும் பிரதமர் இலங்கை செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, விரைவில் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

http://newsalai.com/details/tamil-nadu-news-11-04-2013-A-K-Antony-against-PM-Manmohan-SL-visit.html#sthash.fUYNhIfP.dpbs

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப்பிரதமர் சென்றாலும், செல்லாவிட்டாலும் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் மீறி மன்மோகன் சின் பொதுநலவாயத்துக்கு போனால் இவருக்கும் அங்கே இன்னொரு விஜித முனி காத்திருப்பார்.

 

தலயில் ஹெல்மெட் இருக்கே :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் சென்றால் நல்லம் அதைக்காட்டி தேர்தலில் தமிழ் நாட்டில் ஓரளவு தோற்கடிக்க முடியும் இல்லது இதை சாட்டியே பிரச்சாரம் பண்ணி ஓரிரு ஆசனங்களை கைப்பற்றி விடுவார்கள்

பொதுநலவாயத்தில் பங்கேற்குமாறு பிரதமருக்கு பரிந்துரை

இலங்கையில்,  நவம்பர் 15 ஆம் திகதி  முதல் 17  ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது.

இது தொடர்பான பரிந்துரைக் கடிதம் மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் திங்கட்;கிழமை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பிரதமருக்கு சென்றிருக்கும் கடிதம், மாநாட்டில் அவர் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்ப தாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் நடக்கும் மாநாடு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பிரதமருக்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் பரிந்துரைகள் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்லும் போது பேச வேண்டிய விவகாரங்கள் குறித்தும் அந்த அமைச்சகம் பிரதமருக்கு எடுத்துக் கூறும் என்றும் இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்மோகன் சிங் பங்கேற்கார்?

தமிழக அரசு மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அமைச்சர்களின் நெருக்கடியால் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளமாட்டார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன,

இது தொடர்பில் இந்திய இணையத்தளம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை பொதுநலவாய மாநாடு நடைபெற உள்ளது. தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திமுக தலைவர் கருணாநிதியோ எச்சரித்திருந்தார்.

அத்துடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஏ.கே. அந்தோணி ஆகியோரும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கருணாநிதியை ப.சிதம்பரம் நேரில் சந்தித்தும் பேசியிருந்தார். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி சேர வாய்ப்பு அதிகம் இருக்கும் தி.மு.க.வின் கடும் எதிர்ப்பை புறக்கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதை உணர்த்தும் விதமாகவே அண்மையில் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தின் உணர்வுகள் மதிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

அதே நேரத்தில் இலங்கை மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது அவசியம் என்பதால் அனேகமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அல்லது துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இம்மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை ஓரளவு சமாளிக்க முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்கு என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

 

tamilmirror

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.