Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்த பிரதேசத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குமிடையிலான முறுகல் நிலையின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கான அழைப்பு பிரதேச இளைஞர் அமைப்பொன்றினால் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் வீடுகளுக்கு கல் வீச்சு மற்றும் வீட்டுக் கதவுகளை தட்டுதல் போன்ற அச்சுறுத்தல் செயல்பாடுகளினால் மக்களிடையே ஒருவித அச்சநிலை காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் கடற்கரைப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் ஐந்து பேர் பிரதேச மக்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டதாகவும் இவர்களை மீட்பதற்கு மேலதிகமாக சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்த போது, பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடி படையினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாகவும் தொடர்பாக கூறப்படுகின்றது.

சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் எனக் கூறப்படுவோர் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் அவர்கள் தாம் அணிந்திருந்த சீருடைகளுக்கு பதிலாக வேறு உடைகளை அணிந்ததாகவும் அவர்களது செயல்பாடுகளின் எழுந்த சந்தேகம் காரணமாகவே தாம் இவர்களை பிடித்ததாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் கூட்டத்தை கலைப்பதற்காக ஆகாயத்தை நோக்கியும் தரையை நோக்கியும் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததாகவும் நள்ளிரவு வரை பதற்றநிலை காணப்பட்டதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றார்கள்.

பொது மக்களின் தகவல்களின்படி நிந்தவூர்ப் பிரதேச உள்ளுராட்சி மன்ற தலைவர் எம். ஏ. எம். தாஹிர் உட்பட சிலர் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்கள். நிந்தவூர் பிரதேசத்தின் தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் டயர்களும் மரக்கட்டைகளும் போட்டு எரிக்கப்பட்டுள்ளதால் அவ் வழியாக போக்கு வரத்து சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது. அரசாங்க தனியார் அலுவலகங்கள், வங்கிகள் மூப்பட்டுள்ளன. பாடசாலைகள் இயங்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண கூறுகையில், குறித்த சிறப்பு அதிரடி படை வீரர்கள் ரோந்து நடவடிக்கைக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பொது மக்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறுகின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை காவல்துறையினர் அங்கு சென்றிருந்தவேளை, பொது மக்களால் தாக்கப்பட்டு இருவர் காயமடைந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிந்தவூர் பிரதேசத்தில் தற்போது உருவாகியுள்ள பதற்ற நிலையை நீக்கி இயல்வு நிலையை ஏற்படுத்துவது தொடர்பாக பிரதேச செயலகத்தில் இன்று மாலை விஷேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது.

BBC

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99160/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
ninthavur-seithy-2-20131118-150.jpg

அம்பாறை, நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து, துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்பதாகவும் தொடர்ந்து பதற்றமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கவும் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இதனையடுத்து, அக்குழுவின் தீர்மானத்தின்படி, இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

  

இந்நிலையில், நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள், தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். சம்பவத்தை கேள்வியுற்று அரசியல்வாதிகளும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட அந்த குழுவினரை மீட்டுக்கொண்டு போவதற்கே முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு பொதுமக்கள் இடம்கொடுக்காமையை அடுத்து. விசேட அதிரடிப்படையினர் வானத்தையும் பூமியையும் நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சன்னங்கள் தெறித்ததில் பொதுமக்களில் சிலருக்கு சிறுகாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலை தோன்றியதாகவும் அந்நிலைமை இன்னும் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டுள்ளமையால் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிந்தவூரில் கர்த்தால் அனுஸ்டிப்பு

நிந்தவூரில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து, அப்பகுதியில் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. பிரதேசத்திலுள்ள கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கற்கள் மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்த்தால் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

ninthavur-seithy-1-20131118-289.jpg

 

 

ninthavur-seithy-2-20131118-291.jpg

 

 

ninthavur-seithy-3-20131118-432.jpg

 

 

ninthavur-seithy-4-20131118-444.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97121&category=TamilNews&language=tamil

முன்பு ஒரு முஸ்லிமுக்கு பிரச்சனையென்றால் ஓற்றுமையாக முஸ்லிம் பகுதிகள் எல்லாவற்றிலும் கடையடைப்பு நடத்துவார்கள். இப்ப நன்கு பயந்து போயுள்ளார்கள். பாதிக்கப்பட்ட நிந்தவூரில் மட்டும்தான் கடையடைப்பு போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டப்படவேண்டிய  விடயம்

தொடர்ந்து   போராடுங்கள்

பாராட்டப்படவேண்டிய  விடயம்

தொடர்ந்து   போராடுங்கள்

அஸ்வர் இதை வாசித்தால் அளந்து பார்க்க வேண்டுமென்று கொழும்புக்கு வர அழைப்பு விட போககிறார். பயணச் செலவுதான்....

 

 

:D

நிந்தாவூரில் கலவரத்தை தூண்டி நடத்தி முடித்தது கக்கீம் கூட்டாமாம்.  குற்றம் சாட்டுகிறது முகமெட் முசாமில், விமல் கூட்டம். உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்.  கக்கீமின் கட்சி எதையும் செய்யும்.

 

முஸ்லிம் காங்கிரஸே நிந்தவூர் கலகத்திற்கு காரணம்; தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு news
கிழக்கு மாகாணத்தின் நிந்தவூரில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு முஸ்லிம் காங்கிரஸே காரணம் என தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

அக்கரைப்பற்று நிந்தவூர் கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமின் தேவைக்கு எற்பவே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் மக்களின் பிரச்சினைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஏன் தலையீடு செய்தார்கள் என்பது குறித்து பொலிஸ் மா அதிபர் விசாரணை செய்ய வேண்டும்.

போர் இடம்பெற்ற காலத்திலும் ரவூப் ஹக்கீம், விசேட அதிரடிப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

ரவூப் ஹக்கீம், தனது அரசியல் நோக்கங்களுக்காக மக்களையும், விசேட அதிரடிப்படையினரையும் மோத விட்டதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=760582456720127887#sthash.BYAMZAPO.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.