Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது கல்லறையில் ஏறி நின்று தான் உயிருடன் இருப்பதை அறிவித்த மகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மகனொருவர் இரு வருடங்கள் கழித்து வீடு திரும்பியபோது தனது கல்லறைக்கு தனது பெற்றோர் பூங்கொத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது.
 
சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி (38 வயது) என்ற மேற்படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
 
இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவதைக் அவதானித்துள்ளார்.
 
இந்நிலையில் தனது கல்லறையில் ஏறிய ஜரோஸ்லாவ் 'ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்துவிட்டேன்" எனத் தெரிவிக்கவும் அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது தாயார் மயங்கி விழுந்துள்ளார்.
 
உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள காட்டில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தமது மகனுடையது என பெற்றோர் தவறுதலாக கருதியே குறித்த கல்லறையில் அதனை நல்லடக்கம் செய்திருந்தனர்.
sematri.jpg
மகன் உயிருடன் திரும்பியதால் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகன் எதற்காக வீட்டைவிட்டு வெளியேறினார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
 
இந்நிலையில் புதைக்கப்பட்ட சடலம் யாருடையது என கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நமது மாவீரர்களிலையும் பலர் திரும்பி வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நமது மாவீரர்களிலையும் பலர் திரும்பி வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

 

இன்று

மாவீரர் நிகழ்வில்

படங்களைப்பார்த்தபடி அஞ்சலி  செலுத்தியபடி  நகர்ந்தபோது

ஒருசில படங்கள் எடுக்கப்பட்டு

இடம்  காலியாக இருந்தது

என் மனம் உடனே  இப்படித்தான் நினைத்தது

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் போலும் என்று

அடுத்து

இன்னொரு நினைவும் வந்தது

மாவீரர்கள் எல்லோரும் திரும்பி  வந்து

நடந்தது ஒரு கனவாக இருக்கக்கூடாதா என்று............ :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.