Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இக்கட்டான நிலையில் இருக்கிறேன்! - டக்ளஸ் தேவானந்தா வருத்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
duglas-061213-150.jpg

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'டானியல் றெக்சியன்; ஈபிடிபியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது கொலை தொடர்பில் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட றெக்சியனின் மனைவி ஆகியோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

  

கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. அவர் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர். கட்சியிலும் வடமாகாண சபையிலும் அவர் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யும்படி நான் அவரை கேட்டுள்ளேன். தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் அவர் நிரூபிப்பாராயின் அவரை திரும்பவும் சேர்த்துக் கொள்வதுபற்றி யோசிக்கலாம்.

இந்த விடயத்தில் நான் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறேன். கமலேந்திரனின் பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் ஈபிடிபியின் நீண்டகால ஆதரவாளர்கள்.இருப்பினும் நான் கட்சியின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். இவர் சகல பதவிகளையும் துறக்க வேண்டும் இல்லாதுவிடின் நான் அவரை சகல பதவிகளிலிருந்தும் அகற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98410&category=TamilNews&language=tamil

அவருக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை தானே. அவரால் கட்சிக்கட்டுபாடு ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை.  கட்சியில் வைத்திருப்பதே உங்களுக்கு பலம் திரு டக்லஸ் அவர்களே.

Edited by tulpen

அதுதான் மகிந்தர் அன் கோ மொத்தமா வைச்சிருக்கே வடக்கிலை நடந்த குற்றச் செயல்களுக்கு ஈபிடீபிதான் காரணம் எண்டு..இனி தேவையில்லை என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டது. தான் யுத்தக் குற்றங்களில் இருந்து தப்பிக்க இவர்கள் பக்கம் கையைகாட்டி விட்டு இருக்கப் போகின்றது. புலிகள் அழிந்தது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் ஆபத்தானது. இனி இதை இவர்கள் புரிந்து என்ன பயன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆள்..... கோம்பையன் மணல், சுடலைக்கு போகும் நெருங்கிவிட்டது.
இனி... இருந்தென்ன, செத்தென்ன... எல்லாம், சாம்பல் தான்.
இளமையாக இருக்கும் போது, புலிக்கு நீய்... இடைஞ்சல் கொடுக்காமலிருந்திருந்தால்....
தமிழீழம் கிடைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  

கமலேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. அவர் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர். கட்சியிலும் வடமாகாண சபையிலும் அவர் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யும்படி நான் அவரை கேட்டுள்ளேன். தான் குற்றமற்றவர் என நீதிமன்றில் அவர் நிரூபிப்பாராயின் அவரை திரும்பவும் சேர்த்துக் கொள்வதுபற்றி யோசிக்கலாம்.

 

 

 

ஊருக்கு ஒரு நியாயம், எனக்கு வேற நியாயம்

 

எனக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. நான் இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர். கட்சியிலும் நான் வகிக்கும் பதவிகள் சகலதையும் இராஜினாமா செய்யப் போகிறேன்.  நான் குற்றமற்றவர் என சென்னை நீதிமன்றில் நிரூபித்து மீண்டும் கட்சிக்கு தலைமை தாங்குவேன் என்று சொல்ப்போகிறேன் என்று கனவு காண்கிறேன்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.