Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயதாகி விட்டது, விலகுகிறேன்... அரசியலுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் முழுக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகுவது தொடர்பான தனது முடிவை சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு பண்ருட்டியார் அனுப்பி வைத்துள்ளார். அதில், உடல் நிலை சரியில்லாததாலும், வயதானதாலும் எனது எம்.எல்,ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தேமுதிக பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேபோல தீவிர அரசியலை விட்டு விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டசபைத தேமுதிக துணைத் தலைவராகவும், தேமுதிக அவைத் தலைவராகவும் இருந்து வந்தார் பண்ருட்டியார். பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். கடைசியாக ஆலந்தூர் தொகுதியிலிருந்து வென்றார். ராஜினாமா ஏற்பு இதனிடையே பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thatstamil

ஒருமூத்த முது பெரும் அரசியல் வாதியை விஜையகாந்த் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: விஜயகாந்த்தை அரசியல் பாதைக்குத் திருப்பி அவரை ஆரம்பத்தில் சரியான கோணத்தில் செலுத்தி ஒரு அரசியல் தலைவராக, சக்தியாக மக்கள் மத்தியில் உருவாக்கிக் காட்டிய, பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென அரசியலுக்கும், தேமுதிகவுக்கும் முழுக்குப் போட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் நிலை சரியில்லை, வயதாகி விட்டதாக தனது விலகலுக்கான காரணமாக பண்ருட்டியார் கூறியிருந்தாலும், அவரது விலகல் முடிவு விவாதப் பொருளாகியுள்ளது. காரணம், சமீப காலமாக அவருக்கும், தேமுதிகவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பு, ஒதுக்கப்படுவதாக வெளியான தகவல்... உச்சகட்டமாக சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அவருக்கும், கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான தகவல்கள். பண்ருட்டியாரின் விலகல் முடிவு யாருக்கு எப்படியோ நிச்சயம், விஜயகாந்த்துக்கு கண்டிப்பாக நஷ்டமானதாகவே இருக்க முடியும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

1937ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிறந்த பண்ருட்டியார் தெளிவான சிந்தனையோட்டம் கொண்டவர். நிதானமான செயல்பாடுகளில் நம்பிக்கைக் கொண்டவர். எதையும் அழுத்தமாகவும், ஆழமாகவும் செய்யக் கூடியவர்.. ஆரம்பத்தில் இவர் தீவிர திமுககாரர்.

திமுக மற்றும் அதிமுக அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்

பின்னர் அதிமுகவில் இணைந்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் இதயத்தில் நெருக்கமான இடத்தைப் பிடித்தவர். முக்கியப் பிரச்சினைகளில் பண்ருட்டியாருடன் ஆலோசனை கலக்கும் அளவுக்கு எம்.ஜிஆரிடம் நல்ல நெருக்கத்துடன் இருந்தவர்.

.

பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. அதுவும் 3 கட்சிகள் சார்பாக

.

இதில் 67, 71 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திமுக சார்பாகவும், 77, 80, 84 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பாகவும், 1991 தேர்தலில் பாமக சார்பாகவும் சட்டசபைக்கு பண்ருட்டியிலிருந்து தேர்வானவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பி்ல சட்டசபைக்குள் நுழைந்த முதல் எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரன்தான். டாக்டர் ராமதாஸுடன் இவரால் ஒத்துப் போக முடியாததால் அமைதியாக பாமகவிலிருந்து வெளியேறி விட்டார்

கிட்டத்தட்ட தேமுதிகவின் தந்தை என்று கூறும் அளவுக்கு அக்கட்சியை, அதை ஒரு கட்சியாக செதுக்கி, சீராக நடை போட வைத்தவர் நிச்சயம் பண்ருட்டி ராமச்சந்திரன்தான்.

அ முதல் ஃ வரை.. சொல்லிக் கொடுத்தவர் திரைப்பட நடிகராகவும், சமூக சேவைகளை செய்பவராகவும் மட்டுமே அறியப்பட்ட விஜயகாந்த்தை ஒரு அரசியல் சக்தியாக மாற்றி மக்கள் முன்பு நிறுத்தியவரும் பண்ருட்டியார்தான்.

கூட்டணியே அமைக்காமல் தொடர்ந்து போட்டியிடுவோம், மக்கள் முன்பு நல்ல பெயர் எடுப்போம் என்று விஜயகாந்த்துக்கு கூறி அதன்படியே தேமுதிகவை மக்களிடம் செல்வாக்கு பெறும் அளவுக்குக் கொண்டு சென்றவரும் நிச்சயம் பண்ருட்டியார்தான் என்று சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ஆனால் இப்படி பண்ருட்டியார் சொன்ன அனைத்தையும் கேட்டு தெள்ளத் தெளிவாக நடை போட்டு வந்த விஜயகாந்த், பின்னர் அவருடன் மன மாச்சரியம் கண்டதற்கான காரணம்தான் யாருக்கும் இதுவரை சரியாக புரியவில்லை.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை அத்தனை கட்சிகளுமே குறிப்பாக அதிமுகவினர், விஜயகாந்த்தைப் பார்த்து பயந்து கிடந்தனர். இது உண்மை.. ஆனால் அப்படிப்பட்ட விஜயகாந்த்தையே போயஸ் கார்டனுக்கே வரவழைத்து கூட்டணியில் இணைத்து ஜெயலலிதா மேற்கொண்ட அரசியல் சாணக்கியத்தால் தேமுதிகவுக்கு கிடைத்த பலன்- தற்காலிக அரசியல் அங்கீகாரம் மட்டுமே.. மக்கள் மனதில், குறிப்பாக திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று நினைத்த மக்கள் மனதிலிருந்து தேமுதிக விலக்கப்பட்டது.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக செய்த கி்ல்லாடித்தனமான வேலைகளால் விஜயகாந்த் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார். அப்போது அதையெல்லாம் தனக்கு வழி காட்டிய பண்ருட்டியார் மீதுதான் அவர் காட்டியதாக கூறப்பட்டது. கடுமையான வாக்குவாத்தில் அவர் சில வார்த்தைகளை விட்டு விட்டதாகவும் கூட அப்போது செய்திகள் பரபரப்பாக வந்தன

முதல் கூட்டணியில் ஏற்பட்ட சங்கடத்திற்குப் பின்னர் பண்ருட்டியாரை கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்க ஆரம்பித்து விட்டார் விஜயகாந்த் என்கிறார்கள். பண்ருட்டியாரும் அதை அமைதியாக சகித்துக் கொண்டு ஓரமாக இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்.

தற்போது பண்ருட்டியார் அரசியலை விட்டும், தேமுதிகவை விட்டும், எம்.எல்.ஏ பதவியை விட்டும் விலகி விட்டார். இதனால் தேமுதிகவுக்கு என்ன பாதி்ப்பு வரும் என்பதை இப்போது நிஜமாகவே கணிக்க முடியாதுதான்... இருப்பினும் விஜயகாந்த் நிச்சயம் நல்லதொரு வழிகாட்டியை இழந்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Thatstamil

பண்ருட்டி by-election இல் அம்மா ஜெயித்தால் விஜயகாந்த் அரோகரா தான்

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் புதிதாக கட்சி ஆரம்பித்த போது... அதில் ஆர்வமாக இணைந்து கொண்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
பின்பு அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியை... தனிப்பட்ட விஜயகாந்தின் முகத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதிய‌தும்,
அக்க‌ட்சியினுள்... விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுரேஷ் ஆகியோரின் ஆதிக்கமும் பண்ருட்டியாரை வெறுப்படையச் செய்திருக்கலாம்.

நான் நினைக்கிறன் விசர்காந்தின் கட்சி அதோ கதி தான்....

 

பண்ருட்டியார் பதவி காலத்திலேயே விலகுவது விஜயகாந்துக்கு நல்லது அல்ல....ஏற்கனவே அவரின் கட்சியிலிருந்து அம்மாவிடம் தாவியபடி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1987ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் டெல்லியில் இருந்த போது .. எம்ஜிஆர் நோய்வாய் பட்டிருந்தார். அவர்களுக்கு  ஏதும் ஆகிவிடாமல் பர்த்துகொள்ளும்படி எம்ஜிஆரால் இவர் டெல்லிக்கு அனுப்பபட்டார்.
 
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற மோசடி பற்றி அதிகம் தெரிந்தவர். 
அதிகமாக இவர் அதை பற்றி ஏனோ ஏதும் எழுதுவது பேசுவது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.