Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேல் மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
murali-seithy-3-150.jpg

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைப்பது என ஜனாதிபதி முடிவு செய்திருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது குறித்து முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முரளிதரன் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  

எவ்வாறாயினும் இது தொடர்பில் தொடர்ந்தும் முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுவதுடன் அவர் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முத்தையா முரளிதரன் அண்மைய காலமாக அரசாங்கத்திற்கு ஆதவான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என முரளிதரன் சனல் 4 தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.

யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கவில்லை. அதுமட்டுமல்ல இலங்கைக்கு கூட இதற்கு முன்னர் வரவில்லை.

யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதமரியிடம் அழுது புலம்பியதால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். பிரிட்டிஷ் பிரதமர் தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம். கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். பிரிட்டிஷ் பிரதமர் தவறான விசாரணைகளை நடத்தி இல்லாத குற்றச்சாட்டுகளை இலங்கை மீது சுமத்துவதற்கு முயற்சித்து வருகிறார்.

நான் அப்படியான கொள்கைகளை என்றுமே கடைப்பிடிப்பதில்லை. எனக்கும் என்னுடைய கடந்த காலம் ஞாபகம் இருக்கிறது. நானும் ஒரு தமிழன். 1983ம் ஆண்டின் இனக்கலவரத்தின் போது எனது குடும்பமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எங்களிடம் இருந்த அனைத்துமே அழிந்து போயின. அப்படியான துன்பங்களை அனுபவித்தாலும் நான் எனது கடந்த காலத்தை பற்றி நினைத்து துன்பப்படுவதே இல்லை.

கடந்தகாலத்தைப் பற்றி மறந்து கடந்தகால துன்பங்களை இழைத்தவர்களுக்கு மன்னிப்பளித்து நாம் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதே எனது நோக்கமாகும். இது பற்றி இயேசுநாதரும் ஒரு தடவை கூறியிருக்கிறார் என முத்தையா முரளிதரன் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=new_post&f=40

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா முரளீதரன் அவர்களே! நீங்கள் 1983 சகலதையும் இழந்திருந்தாலும் தற்போது முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்டு அதைவிட மேலான பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ளப் பார்க்கிறீர்கள்.  எதுவுமே கிடைக்காமல் இன்றுவரை வாழ்கின்றவர்கள் என்ன செய்வார்கள். ஆகவே அவர்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் மேல்மாகாணத் தமிழர்கள் உங்களைக் கட்டுக் காசும் இல்லாமல் துரத்தியடிக்க வேண்டும். 

 

யாராவது அவர்களைப் போன்று இழந்து இன்றுவரை ஒன்றும் இல்லாமலிருப்பவர்களில் ஒருவரைத்தான் தெரிவு செய்ய வேண்டும்.  அவர்தான் போராடி ஏதாவது பெற்றுக் கொடுப்பார்.

Edited by karu

சாதகமான பதிலை கொடுக்க இவர் அரசியலில் இருபது வருடம் இருந்தவரா?

ராஜபக்சே குடும்பத்திற்கு தலையாட்டுவதற்கு தான் தகுதி இருக்கிறது.

நேற்றும் 16,000 லீற்றர் மதுசாரம் பிடிபட்டிருக்காம். தொடர்பை தெரியாது.

 

சொல்வதை கேட்டால் கொடுத்த காசுக்கு மதுசாரம் வீட்டுக்கு வரும். இல்லையேல் அதை அரசகுடும்பம் அனுபவிக்கும்(enjoy).

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.