Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு மாணவன் உயர்தரப் பரீட்சையில் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
rasan-seithy-20131227-150.jpg

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாணவர்கள் பல சாதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் ஒரு மாணவனது சாதனைதான் இது! வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் முத்துவேல் ராசன் என்னும் மாணவன் கலைப் பிரிவில் இரண்டு 'ஏ', ஒரு 'சீ' பெறுபேற்றினை பெற்று பாடசாலை சார்பாக முதலிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 29வது நிலையினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

  

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவன் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றிருந்தார். இவர் கல்வி கற்கும் காலங்களில் தனது தந்தையை இழந்ததோடு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தனது கல்வியை இடை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கிறார்.

இவருடைய தாயார் கடற்கரைக்குச் சென்று கரை வலையில் வரும் மீன்களைத் தெரிந்து கொடுத்து அதன் மூலம் வருகின்ற ஒரு சிறிய வருமானத்தில் தங்களது வாழ்வாதாரத்தை நடாத்தி வந்துள்ளார். இந்த காலங்களில் அந்தப் பணத்தை வைத்து வயிற்றுக் பசியைத் தீர்ப்பதா? அல்லது அறிவுப் பசியைத் தீர்ப்பதா? என்ற கேள்விக்கு மத்தியில் இவரது கல்விப் பயணம் தொடர்ந்திருக்கிறது.

அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறையுள், மின்சாரம் போன்ற விடயங்கள் கூட இல்லாத நிலையில் இவரது கல்வி தொடர்ந்திருக்கின்றது. இத்தனை கஷ்ரங்களுக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சாதாரண தரம் தொடங்கி இருபது வருடங்களின் பின் இந்த மாணவன் மாத்திரம் தான் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று உயர் தரத்திற்கு தகுதியாகியுள்ளார்.

தன்னுடைய உயர்தரக் கற்கைக்காக மிகுந்த பொருளாதார கஷ்டத்துடன் வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் இணைந்து கொண்டதாகவும், தனது கல்வியை தொடர பாதிரியார் சிறிக்காந்த், ஆசிரியர்களான எ.ஜெயரஞ்சித், க.நிதிஹரன், எஸ்.ஸ்ரீகாந் போன்றவர்களின் உதவியுடன் தான் இந்த நிலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தனது பல்கலைக் கழக அனுமதி கிடைத்திருப்பது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், மறுபக்கம் தம்முடைய இன்றைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று கவலையுடன் தெரிவித்தார். எவ்வளவோ அபிவிருத்திகளை கடந்து போகின்ற இன்றை சூழலில் இவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் இப்படியாக சாதனை என்பது பிரமிப்பான விடயம் தான் எங்களிடம் வளங்கள் இருக்கின்றன.

ஆனால் களங்கள் சரியாக அமையவில்லை என்பதற்கு இவைகள் தான் எடுத்துக் காட்டுகள். இப்படிப்பட்ட இன்னலுக்கு மத்தியிலும் தன் நோக்கத்தில் தளராது சாதித்த மாணவன் ஒரு சிறந்த முன் உதாரணம்.

 

rasan-seithy-20131227.jpg

 

 

rasan-seithy-20131227-2.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100081&category=TamilNews&language=tamil

வாழ்த்துக்கள் தம்பி. :)

இவர் போல் கஷ்டத்தின் மத்தியிலும் படித்து பல்கலைக்கழகம் தெரிவான அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மெம் மேலும் முன்னேற வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி. :)

இவர் போல் கஷ்டத்தின் மத்தியிலும் படித்து பல்கலைக்கழகம் தெரிவான அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். :)

தம்பிக்கு வாழ்த்துக்களும், மேலும் வளர ஆசிகளும்!

 

துளசிக்கும் ஒரு 'தம்பி' கிடைச்சதும் சந்தோசம்! :lol:

தம்பிக்கு வாழ்த்துக்களும், மேலும் வளர ஆசிகளும்!

 

துளசிக்கும் ஒரு 'தம்பி' கிடைச்சதும் சந்தோசம்! :lol:

 

முகநூலில் நிறைய தம்பிகள் இருக்கிறார்கள். யாழில் இன்று தான் "தம்பி" என குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள் !  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.