Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு எக்டேருக்கு 165 டன் வாழை விளைச்சல்.

Featured Replies

தேனி: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த வாழை விவசாயி வி.குருநாதன், ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைவித்து, உலகளவில் சாதனை படைத்துள்ளார்.

விவசாய கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் வி.குருநாதன்,75. 45 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்தார். இன்று ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளதால், உலகின் முதல் சாதனை வாழை விவசாயி என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளார். நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது, 150 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான இவர், முழு பரப்பிலும் ஜி 9 திசு வாழை சாகுபடி செய்து வருகிறார்.

Tamil_News_large_88779720140104003515.jp

குருநாதன் கூறியதாவது: 1990ம் ஆண்டு 13 ஆயிரம் வாழைத் தார்களை 16 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். அப்போது, இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. இப்போது, 8500 வாழைத்தார்களை 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளேன். இதனை மிகப்பெரிய சாதனை, என தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர். இப்போது, என் நிலத்தில் எக்டேருக்கு 165 டன் வாழை விளைச்சல் எடுத்து வருகிறேன். ஆனாலும் தோட்டக்கலைத் துறையினர் சராசரியாக கணக்கிட்டு 150 டன் மதிப்பீடு செய்து, இதனையே உலக சாதனை என்கின்றனர். 150 ஏக்கரிலும், சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=887797

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே அவர் ஒரு சிறந்த விவசாயிதான் ...! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.. வாழ்த்துக்கள் ஐயா..

உழைப்புக்கும் முயற்சிக்கும் இன்னொரு வடிவமாக திகள்றீர்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

 

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில் இவரை மாதிரியானவர்கள் விவசாயிகள் எல்லாருக்கும் ஒரு வழிகாட்டி...இவரிடம் இருந்து மற்றவர்களும் கற்று தங்களை காக்க வேண்டும்...

பஞ்சாபில் ஆயிரகணக்கான தொன் கோதுமையை போதிய storage வசதி இல்லாமல் அழுக விடுகிறார்கள்...அது மாதிரி இல்லாமல் இவராவது சரியான முறையில் சந்தைபடுத்தி தானும் நுகர்வோரும் லாபமடையோனும்....அதற்கிடையில் எவ்வளவு பேர் இவரிடம் சுருட்டுகிரார்களோ தெரியாது...

இவர் கூலியாக இருந்து நில சொந்தக்காராகி இருக்கிறார்..அது ஒரு நல்ல அறிகுறி...

 

அவரின் மீசையை பார்த்தல் "தேவர்" மாதிரி இருக்கு...பாரதிராஜாவின் சொந்தக்காரரோ தெரியாது :) :)

Edited by naanthaan

வாழ்த்துக்கள் ஐயா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.