Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'போர்க்குற்ற விசாரணைகோரும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுயாதீனப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வழி செய்யும் ஒரு தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் தமது நாடு கொண்டுவரும் என்று போர்க் குற்றங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டிபன் ஜெ ராப் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பும் போர்க் குற்றங்களைச் செய்ததாக ஐ நா பொதுச் செயலருக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கூறியிருந்தது. போர்க் குற்றங்கள் குறித்து பிரிட்டனில் இருந்து இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சி சில வீடியோ படங்களை வெளியிட்டது. இவற்றின் உண்மைத் தன்மையை குறித்து ஐ நாவின் நிபுணர்களும் பிற சர்வதேச நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசோ இந்த வீடியோக்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கூறிவருகிறது.

தொடர்புடைய விடயங்கள்

இலங்கை அரசு போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று பல நாடுகள் கூறியும் இலங்கை அரசு அதை புறக்கணித்து வந்துள்ளது.

போர்க் குற்றங்களை யார் செய்தார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

போர்குற்றங்கள்
121113163833_sri_lanka_war_civilians_kil

போர் பகுதியில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

போரின் போது இலங்கைப் படையினர், மக்கள் செரிந்து வாழ்ந்த பகுதிகளில் தாக்கியதாகவும், தாக்குதலற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தியது, கனரக ஆயுதங்களை பயன்படுத்தியது, மருத்துவமனைகளைத் தாக்கியது போன்ற குற்றங்களை போரின் போது செய்ததாக குற்றம்சாட்டுகிறார் சுமந்திரன்.

இது தவிர சரணடைந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணமல் போயுள்ளனர் . இப்போது மன்னாரில் மனித எலும்புக் கூடுகள் எடுக்கப்படுகின்றன. இவைகளின் உண்மைத் தன்மை விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவு தேவை.

இந்த விடயம் குறித்து சுமந்திரன் அளித்த செவ்வியை புதன் கிழமை நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/01/140107_ustomoveawarcrimeinvestigation.shtml

ஏன் வருகிறவனெல்லாம் சுமந்திரனை சந்திக்கின்றார்கள் :D  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது gari ஏன் இவ்வாறான சுமத்திரனால் தேர்தலில் வென்று வராமல் பின் கதவால் வந்தவர்?

 

ஏன் வருகிறவனெல்லாம் சுமந்திரனை சந்திக்கின்றார்கள் :D:icon_idea:

வருபவர்கள் எல்லோரும் புலிகளை சந்தித்த காலமும் இருந்தது. பிரபாகரன் ஒரு போராளியாக இல்லாமல் அரசியல்வாதியாக மாறியிருந்தால் சுமந்தரன் என்பவர்யார் என்றே தெரியாமல் போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை

இவர் சொல்லாமல் இருந்திருந்தால்  நன்றாக  இருந்திருக்கும் :(  :(

தமிழர்  நலன் சார்ந்து

பொறுப்புடன் செயற்படபவர்களே இன்றைய தேவை..

 

 

நல்லது gari ஏன் இவ்வாறான சுமத்திரனால் தேர்தலில் வென்று வராமல் பின் கதவால் வந்தவர்?

சுமந்திரன் தானகவிரும்பி பதவிக்கு வரவில்லை ,இன்றைய அரசியல் தேவைகருதி அவரின் திறமையை பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டவர் .TNA யின் தேசியப்பட்டியலில் முதலில் சுமந்திரனை கேட்டபொழுது மறுத்துவிட்டார் ,அதன் பின்பு பேராசிரியர் சிற்றம்பலம் முன்னிலையில் இருந்தவர் ,பட்டியல் இறுதி செய்யப்படுவதற்கு இருதினங்களுக்கு முன்புதான் சுமந்திரன் தனது விருப்பத்தை சொன்னவர் .சுமந்திரன் அரசியலுக்கு வந்ததினால் அவருக்கு தனது சட்டத்தொழிலை கவனிக்கமுடியாததால் பல இழப்புகள்

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் கேட்ட சகல தகவல்களையும் சுமந்திரந்தான் கொடுத்தவர் ,பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட பொழுது ஜெனிவாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடித்தொடர்பில் இருந்தவர்.இலங்கை பதிலடி கொடுக்கும் போது அமெரிக்க அதிகாரிகள் அதற்குரிய விளக்கங்களை உடனுக்குடன் சுமந்திரனிடம் பெற்றனர் .

மற்றவர்களை விமர்சிக்கும் நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் என்றுசொல்ல முடியுமா ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134398&p

இதை

இவர் சொல்லாமல் இருந்திருந்தால்  நன்றாக  இருந்திருக்கும் :(  :(

தமிழர்  நலன் சார்ந்து

பொறுப்புடன் செயற்படபவர்களே இன்றைய தேவை..

சில சமயங்களில் நான் எதிர்க்கருத்துக்களை முன்வைப்பதுண்டு.சிலருக்கு நெற்றியடி கொடுப்பதற்கு. :D

சுமந்திரன் தானகவிரும்பி பதவிக்கு வரவில்லை ,இன்றைய அரசியல் தேவைகருதி அவரின் திறமையை பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டவர் .TNA யின் தேசியப்பட்டியலில் முதலில் சுமந்திரனை கேட்டபொழுது மறுத்துவிட்டார் ,அதன் பின்பு பேராசிரியர் சிற்றம்பலம் முன்னிலையில் இருந்தவர் ,பட்டியல் இறுதி செய்யப்படுவதற்கு இருதினங்களுக்கு முன்புதான் சுமந்திரன் தனது விருப்பத்தை சொன்னவர் .சுமந்திரன் அரசியலுக்கு வந்ததினால் அவருக்கு தனது சட்டத்தொழிலை கவனிக்கமுடியாததால் பல இழப்புகள்

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் கேட்ட சகல தகவல்களையும் சுமந்திரந்தான் கொடுத்தவர் ,பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட பொழுது ஜெனிவாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடித்தொடர்பில் இருந்தவர்.இலங்கை பதிலடி கொடுக்கும் போது அமெரிக்க அதிகாரிகள் அதற்குரிய விளக்கங்களை உடனுக்குடன் சுமந்திரனிடம் பெற்றனர் .

மற்றவர்களை விமர்சிக்கும் நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் என்றுசொல்ல முடியுமா ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134398&p

சுமந்திரன் தன்னால் முடிந்தளவு ஆபத்தில் இருந்தும் உதவுகிறார்.

மிகவும் சிறப்பாக உலக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

கூறியது போல் அவரால் கோடி கோடியா உழைச்சு ராஜபக்சேவிற்கு £250,000 கொடுத்து முன்னேறலாம்.

கரி அண்ணா,

எம்மவரில் ஒருவர் நல்லா செய்தால் ஊக்கம் அளிப்பதில்லை. அவரை திட்டி எம்மை பெரியவரா காட்டவே முயற்சி செய்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தானகவிரும்பி பதவிக்கு வரவில்லை ,இன்றைய அரசியல் தேவைகருதி அவரின் திறமையை பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டவர் .TNA யின் தேசியப்பட்டியலில் முதலில் சுமந்திரனை கேட்டபொழுது மறுத்துவிட்டார் ,அதன் பின்பு பேராசிரியர் சிற்றம்பலம் முன்னிலையில் இருந்தவர் ,பட்டியல் இறுதி செய்யப்படுவதற்கு இருதினங்களுக்கு முன்புதான் சுமந்திரன் தனது விருப்பத்தை சொன்னவர் .சுமந்திரன் அரசியலுக்கு வந்ததினால் அவருக்கு தனது சட்டத்தொழிலை கவனிக்கமுடியாததால் பல இழப்புகள்

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் கேட்ட சகல தகவல்களையும் சுமந்திரந்தான் கொடுத்தவர் ,பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட பொழுது ஜெனிவாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடித்தொடர்பில் இருந்தவர்.இலங்கை பதிலடி கொடுக்கும் போது அமெரிக்க அதிகாரிகள் அதற்குரிய விளக்கங்களை உடனுக்குடன் சுமந்திரனிடம் பெற்றனர் .

மற்றவர்களை விமர்சிக்கும் நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் என்றுசொல்ல முடியுமா ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134398&p

முதலில் சுமத்திரனையோ,சம்மந்தனையோ பற்றி எதிர் கருத்திடும் பொழுது நிர்வாகத்தை கூட்டி கொண்டு வந்து தூக்க வைக்கின்றீர்கள் இதை நிற்பாட்டினால் உங்களுடன் மேற் கொண்டு கருத்துக்கள் வைக்கலாம்.மற்றும் நான் ஏதோ பெரிசா புடுங்கினாத்தான் சுமத்திரனை பற்றியோமற்றைவையை பற்றியோ விமர்சிக்கும் உரிமை கிடைக்கும் என்றில்லை ஒரு சாதரன பொது மகனுக்கு உள்ள உரிமைகளின்படியே நான் விமர்சிக்கின்றேன் . ஒரு சாதாரண விமர்சனத்தை தாங்க மாட்டாத அளவுக்கு சம்மந்தனும்,சுமத்திரனும் அவர்களின் ஆதரவாளர்களும் இருக்கின்றீர்கள் ஐனநாயக முறைப்படி வந்து விட்டு தமிழரின் அபிலாசைகளுக்கு மாறாக நடப்பம் ஒருத்தரும் கேள்வி கேட்க்க கூடாது விமர்ச்சிக்க கூடாது என்றால் உங்களுக்கும் மகிந்தவிற்க்கும் என்ன வித்தியாசம்.

 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தன்னால் முடிந்தளவு ஆபத்தில் இருந்தும் உதவுகிறார்.

மிகவும் சிறப்பாக உலக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

கூறியது போல் அவரால் கோடி கோடியா உழைச்சு ராஜபக்சேவிற்கு £250,000 கொடுத்து முன்னேறலாம்.

கரி அண்ணா,

எம்மவரில் ஒருவர் நல்லா செய்தால் ஊக்கம் அளிப்பதில்லை. அவரை திட்டி எம்மை பெரியவரா காட்டவே முயற்சி செய்வோம்.

அய்யா விக் சுமத்திரன் தமிழருக்கு செய்த குறிப்பிடக்கூடிய ஒரு நாலு நல்ல விடயத்தை கூறுங்கள் பார்க்கலாம் .

அய்யா விக் சுமத்திரன் தமிழருக்கு செய்த குறிப்பிடக்கூடிய ஒரு நாலு நல்ல விடயத்தை கூறுங்கள் பார்க்கலாம் .

சுமந்திரன் செய்ததை கேட்கிற நீங்கள் ஏன் இதற்கு( மற்றவர்களை விமர்சிக்கும் நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் என்றுசொல்ல முடியுமா )புலம்புகின்றீங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் செய்ததை கேட்கிற நீங்கள் ஏன் இதற்கு( மற்றவர்களை விமர்சிக்கும் நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் என்றுசொல்ல முடியுமா )புலம்புகின்றீங்கள் .

புலம்புவது நானல்ல நீங்கள்தான் சுமத்திரனையும், சம்மந்தனையும் லண்டனில் நேரடி கருத்து விவாதற்க்கு ஒழுங்கு செய்வதாக என்னுடனான முன்னைய கருத்தாடலில் கூறினீர்கள் நானும் இதுவரை தமிழ் சமூகத்திற்க்கு என்ன செய்தது செய்து கொண்டிருப்பது நேரடியாக பெருமாளகவே விவாதத்தில் கலந்து கொள்வன் என்று உறுதி கூறியுள்ளேன் இப்ப அதை விட்டு திரிக்கு திரி நீ என்ன செய்தாய் என கேள்வி கேட்டு கொண்டு நிற்கிறீர்கள் முதலில் நீங்கள் கூறியமாதிரி ஒரு கலந்துரையாடலுக்கு சம்மந்தன் சுமத்திரன் கட்டாயம் ஒழுங்கு செய்யுங்கள் அதை விட்டு ........................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.