Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவுக்கு ஜெயலலிதா தண்டனை அளிப்பார்’: நாஞ்சில் சம்பத் பேச்சு

Featured Replies

காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. செயற்குழு விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. நகரமன்ற தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.எல்.ஏ., வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

 

இக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியபோது,  ‘’டெல்லி தேர்தல் நமக்கு காட்டும் விஷயம் அங்கு காங்கிரசும், பா.ஜனதாவும் பெரும்பான்மை பெற முடியவில்லை. மக்கள் மாற்றத்தினை விரும்புகின்றனர். திராவிட இயக்கத்தினை எம்.ஜி.ஆர். மக்கள் இயக்கமாக மாற்றினார். அகில இந்தியக் கட்சியாக அ.தி.மு.க. உயர்ந்தது. தற்போது மக்கள் போற்றும் ஆட்சியினை அளித்துக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் விரைவில் பாரதப் பிரதமராக வேண்டும் என இந்திய மக்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் உரிமையினை சட்டப் போராட்டம் நடத்திப் பெற்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை கெஜட்டில் வெளியிட வைத்தார். பசியறியா தமிழகத்தினை உருவாக்கி இன்று ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையிலினில் விலையில்லா அரிசி வழங்குகின்றார்.
 

1957–ல் தமிழகத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்ட போது அதில் தமிழகத்தின் பங்கு ஏதுமில்லை. ஆனால் முதல்வரின் சீரிய முயற்சியினால் தனியாருக்குச் செல்லவிருந்த பங்குகளை அரசுக்குச் சொந்தமாக்கி சாதனை நிகழ்த்தினார்.
 

இன்றைக்கு அருணாசலப் பிரதேசத்திலும், இலங்கையிலும் சீனா காலூன்றி இந்தியாவிற்கு அச்சுறுத் தலாகத் திகழ்கின்றது. 259 மீனவர்கள் இலங்கைச் சிறையில் உள்ளனர், இவற்றிற்கு தீர்வு காண வேண்டிய உறுதியான தலைமை மத்தியில் இல்லை. ஆற்றல் படைத்த ஒருவர் பிரதமராக வர வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். அந்தத் தகுதி தமிழக முதல்வருக்கே உண்டு.
 

மத்தியில் இனி தேசிய கட்சிகளின் ஆட்சி சாத்திய மில்லை, உறுதியும், துணிவும் திறமையும் மிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமர் ஆவது உறுதி. பிரதமர் ஆகி தமிழினத்தினை அழித்த ராஜபக்சேவுக்கு அவர் தண்டனை அளிப்பார்’’என்று தெரிவித்தார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114397

Edited by துளசி

அது ........

  • தொடங்கியவர்

அனைவருமே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். :lol::D

..அப்பாடி இனி நிம்மதியாக தேத்தண்ணி குடிக்கலாம்... :)

ஜெயலலிதா பிரதமராவது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை ஆனால் அதுதான் அவர் கனவு என்று இப்போ வெளிப்படையாகிவிட்டது .அவரே அதை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் .

அவர் கனவு நனவானால் ஆக கூடிய நன்மை ஈழ தமிழர்களுக்கு தான் என நம்புகின்றேன் .

இந்தியாவின் இன்றைய  தேவை ஜெயலலிதா போன்ற ஒரு பிரதமரே.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா பிரதமராவது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை ஆனால் அதுதான் அவர் கனவு என்று இப்போ வெளிப்படையாகிவிட்டது .அவரே அதை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் .

அவர் கனவு நனவானால் ஆக கூடிய நன்மை ஈழ தமிழர்களுக்கு தான் என நம்புகின்றேன் .

இந்தியாவின் இன்றைய  தேவை ஜெயலலிதா போன்ற ஒரு பிரதமரே.

 

ஆமோதிக்கின்றேன்......

இதையே  தொடர்ந்து நானும் சொல்லிவருகின்றேன்

அவரது கனவு தமிழகம் அன்று

இந்தியா........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.