Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் மகாராஜா தொலைக்காட்சி நிறுவன பெண் பணியாளர் கடத்தல்

Featured Replies

வெள்ளைவத்தையில் தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தப்பட்டுள்ளார். கடத்தபட்டவர் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மகாராஜா கூட்டு நிறுவனத்தின் கணனி பிரிவில் பணிபுரியும் யுவதியே கடத்தப்பட்டராவார்.

இன்று முற்பகல் வெள்ளைவத்தை விவேகானந்தா வீதியிலிருந்து காலி வீதியில் சென்று கொண்டிருக்கையில் இவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தபட்டுள்ளார்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மகாராஜா தொலைக்காட்சி நிறுவன பெண் பணியாளர் தவராஜா தவமணி (வயது 26) இன்று கடத்தப்பட்டுள்ளார்.

மகாராஜா தொலைக்காட்சி நிறுவனத்தில் கணணிப் பிரிவில் பணியாற்றி வந்த தவராஜா தவமணி இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் வெள்ளவத்தையில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

தெற்கு கொழும்பில் வெள்ளவத்தையில் விவேகானந்த வீதியில் தவராஜா தவமணியின் வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவில் இக்கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தவராஜா தவமணியின் கண்களைக் கட்டி வெள்ளை வானில் வந்த 6 ஆயுததாரிகள் அவரை கடத்திச் சென்றதாக அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

கடத்தப்பட்ட தவராஜா தவமணி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் மருமகள் ஆவார்.

யாழ். காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட தவமணி, பொறியலாளராக அண்மையில்தான் மகாராஜா குழும தொலைக்காட்சியில் இணைந்தார்.

கடந்த ஒருவாரத்தில் கொழும்பில் மட்டும் 3 பெண்கள் உட்பட 10 தமிழர்கள் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடர்கிறதே :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கப்பா என்னமோ சரக்கு கடத்திற மாதிரி நடக்குது. கொழும்பில சில கும்பலுக்கு நல்ல வருமானம் தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார சுவிசிலும் கடத்தல் நடக்குதாம் வடிவேல் கவனம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் கடத்துங்கப்பா. கொஞ்சம் வெளி உலகமும் என்னை திரும்பி பாக்கட்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார சுவிசிலும் கடத்தல் நடக்குதாம் வடிவேல் கவனம்.....

அடுத்து கடத்தப்படுபவர் வடிவேல் ஆகவும் இருக்கலாம்.

இதுக்கும் குருபரன் கடத்தல் அவரின் விடுதலைக்கு பின்னர் வந்த விமர்சனங்கள் வினாக்களிற்கும் சம்பந்தம் இருக்குமா?

இவரை விடுவிக்க அதே அளவு அழுத்தங்கள் கவனயீர்ப்புகள் நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து கடத்தப்படுபவர் வடிவேல் ஆகவும் இருக்கலாம்.

வடிவேலை கடத்தினா நான் உண்ணாவிரதம் இருப்பேன் சர்வதேச ஊடகவியாளர் வினித் மற்றும் சுண்டலோடு சேர்ந்து.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பன் உண்ணாவிரதம் என்பது சாப்பிடாமல் இருக்கனும். நீர் என்ன ஆரம்பத்திலயே சுண்டலோட இருப்பன் என்டுறீர்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடத்துறது பற்றித் தான் கதைக்கும் போது ஒரு விடயம், ஞாபகம் வருது. தாங்கள் கடத்திக் கொண்டு போன ஆட்களில் ஓரிரண்டு பேரைக் கறுணாக்கும்பல் விடுவதாகப் படம் காட்டிவை அல்லவோ!

அது எப்படி ஒரு இறைமையுள்ள அரசாங்கத்தின் கீழ் உள்ள இடத்தில் நடத்த இயலும். முக்கியமாக, அசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் மட்டக்களப்பு, நகரத்தில் வைத்து, அப்படி ஒரு படம் காட்டினவை.

ஒரு அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள், தாங்கள் பிடித்து வைத்து விடுதலை செய்வதாகச் சொல்லிக் கொள்பவர்களை அனுமதித்தால் என்பது, இலங்கையரசின் இயலாமையையும், வங்குரோத்தினையும் சுட்டிக் காட்டுது அல்லவா!

ஆக, இலங்கையின் இறமையினுள் இருந்து மட்டக்களப்பு விடுபட்டுப் போனதை அரசு ஒத்துக் கொள்கின்றது. அல்லது கருணாக்கும்பல் தான் அரசாங்கத்தை வழிநடத்துவதாக ஒத்துக் கொள்கின்றது. இதைப் போன்ற அவமானாத்தின் மத்தியில் இருந்து நோர்வேக்காரர், அரசாங்கத்தைப் பற்றிக் கண்டித்தால், அதற்கு ஏன் கோபம் வருது?

வெள்ளவத்தையில் தமிழ் யுவதி கடத்தல்

- நிஷாந்தி

aaa-150-200.jpg

கொழும்பு வெள்ளவத்தை விவேகானந்தாவீதியில் காலை தமிழ் யுவதி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இவர் மகாராஜா கூட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றும் கடமை நிமித்தம் சென்றுகொண்டுருக்கும் போதே டொல்பினில் வந்த நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என வெள்ளவத்தை பொலிஸார் அத்தியட்சர் மங்கள தெஹிதெனிய தெரிவித்தார் .

மேலும் கடத்தலுக்குப் பயன்பட்ட வான் எண் 251-7908

- வீரகேசரி

01.09.2006

.

மேலும் கடத்தலுக்குப் பயன்பட்ட வான் எண் 251-7908

- வீரகேசரி

01.09.2006

:twisted:

இவ்வாகன இலக்கம் போலி இலக்கமாம்.

  • தொடங்கியவர்

வடிவேலை கடத்தினா நான் உண்ணாவிரதம் இருப்பேன் சர்வதேச ஊடகவியாளர் வினித் மற்றும் சுண்டலோடு சேர்ந்து.....

ஆகா நான் நல்லா சாப்பிட்டு (ஆடு அடித்து) விரதம் இருக்கின்றேன் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பிள்ளை , தனது மருமகள் என மகேஸ்வரன் எம்பி தெரிவித்துள்ளதாகச் செய்தி வந்திருக்கின்றது.

மகாராஜா தொலைக்காட்சி குழும நிறுவன பெண் பணியாளரும் தனது மருமகளுமாகிய தவராஜா தவமணி கடத்தப்பட்டமைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மகேஸ்வரன் கூறியதாவது:

எனது மருமகள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பு. கடத்தல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

எனது மருமகளை விடுவிப்பதற்காக உள்ளுர் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட உள்ளேன் என்றார் அவர்இ

-புதினம்-

  • தொடங்கியவர்

அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசதுரோக தளம் ஒன்றில் உள்ளது உண்மையா

கடத்தப்பட்ட பெண் விடுதலை!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வைத்து நேற்றையதினம் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட எம்.ரி.வி. பணியாளர் தவராஜா தவமணி கடந்த இரவு அவரது வீட்டருகே விடுவிக்கப்பட்டுள்ளார். வான் ஒன்றில் சென்றவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண். கடந்த இரவு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டருகே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும். விடுவித்தவர்களுக்குத் தானே முதலே செய்தி தெரிந்திருக்கும்!

  • தொடங்கியவர்
இருக்கும். விடுவித்தவர்களுக்குத் தானே முதலே செய்தி தெரிந்திருக்கும்!
:D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.