Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆசி வழங்கக் கூடாது: இங்கிலாந்தில் கட்டளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆசி வழங்கக் கூடாது: இங்கிலாந்தில் கட்டளை 
[sunday, 2014-02-16 09:36:39]
ingland-seithy-20140216.jpg

திருமணம் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு ஆசி வழங்கக் கூடாது என இங்கிலாந்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்களுக்கு தலைமை பிஷப்கள் கட்டளையிட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிஷப்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களுக்குள் வழிபாட்டுக்காக ஓரினச்சேர்கையாளர்கள் வரலாம். ஆனால்,திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சடங்கு- சம்பிரதாய விழாக்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணங்களுக்குதான் பொருந்தும். ஓரினச்சேர்க்கை ஜோடிகளின் திருமணத்தை தேவாலயங்களில் நடத்த அனுமதிக்க கூடாது.

  

அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு ஆசி வழங்கவும் கூடாது என இங்கிலாந்தில் உள்ள அனைத்து தேவாலயங்களின் பாதிரியார்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைப் பொருத்தவரை கடந்த 2005-ம் ஆண்டில் இருந்தே ஓரினச்சேர்க்கையாளர்களுக்குள் நடக்கும் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற தம்பதியருக்கு உள்ள அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு பொருந்தும் என அரசு அறிவித்திருந்த நிலையில் பிஷப்களின் இந்த புதிய கட்டளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பாதிரியார் விரும்பினால், அவர் பணியாற்றும் தேவாலயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு திருமனம் நடத்தி வைக்கலாம் என்ற உரிமை இதற்கு முன்னர் வரை வழங்கப்பட்டிருந்தது. இந்த புதிய கட்டளையின் மூலம் பாதிரியார்களின் அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103751&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உவையை எப்படி வாழ்த்திறது.. 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ் என்றும் வாழ்த்த முடியாது..??! தம்பதிகளாய் கூடிக்களிச்சு வாழ் என்றும் சொல்ல முடியாது... இதில ஆசி வேற ஆசி... அதுக்கு ஒரு சுதந்திரம் வேற. எல்லாத்திலும் சுதந்திரம் தேடுறவை.. உடுப்பை கழற்றிட்டு வீதில போற சுதந்திரத்தை மட்டும் மறுக்கினம்.. ஏன்..?????! அதுவும் சுதந்திரம் தானே.  :lol::D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ! பதினாறும் தத்தெடுத்து பெருவாழ்வு வாழ் என்று வாழ்த்தினால் குறைஞ்சா போயிடும் , ஆசி என்ன காசா பணமா அள்ளி வழங்கிட்டுப் போறது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

உவையை எப்படி வாழ்த்திறது.. 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ் என்றும் வாழ்த்த முடியாது..??! தம்பதிகளாய் கூடிக்களிச்சு வாழ் என்றும் சொல்ல முடியாது... இதில ஆசி வேற ஆசி... அதுக்கு ஒரு சுதந்திரம் வேற. எல்லாத்திலும் சுதந்திரம் தேடுறவை.. உடுப்பை கழற்றிட்டு வீதில போற சுதந்திரத்தை மட்டும் மறுக்கினம்.. ஏன்..?????! அதுவும் சுதந்திரம் தானே. :lol::D

குடிப்பழக்கம் அல்லது போதைப்பழக்கம் (சரியாக ஞாபகம் இல்லை) உள்ள தாய்மார் பிரசவிக்கும் குழந்தைகள் ஓரினச் சேர்க்கையாளராக வளர வாய்ப்பு உள்ளது என அண்மையில் ஒரு கட்டுரையை இங்கு இணைத்திருந்தார்கள். தாய் செய்த தவறுக்கு சேயை வையலாமா? :blink::D

இனம் இனத்துடன் சேர்வது என்ன தப்பு ...அதுக்கு ஆசிகள் மறுகப்படனும் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Obama-seithy-200-world.jpg

ஓரினச் சீர்க்கையாலர்கலுக்கு எதிராக உகாண்டா அரசு விதித்துள்ள புதிய சட்டத்திற்கு, அமெரிக்க அதிபர் ஒபாம கண்டனம் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் கொடும் குற்றமாக கருதப்படுகிறது.

  

எனினும், இதை தடுத்து நிறுத்தும் எவ்வித வலிமையான சட்டங்களும் அங்கு இல்லாத நிலையே இதுவரை நீடித்து வருகிறது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பையடுத்து அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்திற்கு கடந்த ஆண்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, விரைவில் அந்த சட்டத்தை அங்கீகரித்து கையொப்பமிட இருப்பதாக உகாண்டா அதிபர் முசெவேனி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ’ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், நாங்கள் ஏற்கனவே உகாண்டா அதிபருக்கு தெரிவித்துள்ளவாறு அமெரிக்கா- உகாண்டா ஆகிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவுக்கு இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தும்.

உகாண்டாவில் வாழும் ஓரினச் சேர்க்கை பிரியர்களுக்கு இந்த சட்டம் பேராபத்தாக அமைந்துவிடும். மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான உகாண்டாவின் செயல்பாடுகளுக்கும் இது பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும்’ என ஒபாமா எச்சரித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கைக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பராக் ஒபாமா, தற்போது ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் குழுவில் சில ஓரினச் சேர்க்கையாளர்களையும் அனுப்பியுள்ளார். ஓரினச் சேர்க்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா தலைமை இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103857&category=WorldNews&language=tamil

ஏதோ ஆசிகள் வழங்கின எல்லாரும் விளங்கினமாதிரி?

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.