Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை

Featured Replies

no%20fire%20zoon_CI.jpg

நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய நோ பயர் ஸோன் மற்றும் கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சபை நாட்டின் திரையறங்குகளில் செனல்4 ஆவணப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் காணொளியை இந்தியாவில் இலவசமாக இணையத்தில் பிரசூரிப்பதற்கு ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் இணையத்தில் இலவசமாக பார்வையிடக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான உறவுகளில் வரிசல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இந்திய அதிகாரிகள் திரைப்படத்தினை தடை செய்துள்ளதாக செனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. அநேகமான காட்சிகள் பார்க்கக் கூடிய வகையில் இல்லை என இந்திய திரைப்பட தணிக்கைச் சபை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குறித்த ஆவணப்படத்தை டெல்லியி;ல காட்சி;ப்படுத்தும் நோக்கில் இ;ந்தியாவிற்கு விஜயம் செய்ய முயற்சித்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரேவிற்கு வீசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து சுதந்திரத்தை மதிக்கும் இ;ந்தியாவில் இவ்வாறான அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாகவே ஆவணப்படத்தை திரையிடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. யுத்த குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103389/language/ta-IN/article.aspx

அப்பா பெயர் தெரியாத பெண்ணின் தலைமையில் நடக்கும் ஆட்சியில் இது ஒன்றும் புதினமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாகவே ஆவணப்படத்தை திரையிடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. யுத்த குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியா

ஆசியாவின் வல்லரசு......... :lol:  :D  :D

இந்தியா

சிறீலங்காவின் ஒரு மாநிலம்.... :D

சும்மா இந்திய ஊடக சுதந்திரத்தை பற்றி வாயால் வடை சுடுவார்கள்.

இது தமிழ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி கொங்கிரஸ் வாக்கை சரித்துவிடும் என்ற பயம்.

கள்ள சீடிகள் வெளிக்கிட்டால் பிரச்சினை.

வட இந்தியனை பொறுத்த வரை தமிழர் என்றால் எதிர்ப்புதான். அது மீனவர் கொலை யாகட்டும்.  தூக்கு தண்டனை கைதிகள் ஆகட்டும்.

 

அவர்களது கவலை ஆட்சி நிர்ணயிப்பதையும்  தமிழகமே முடிவு செய்யும் காலம் தொடர்கிறது. அங்கு தேசிய கட்சிக்கு செல்வாக்கு இல்லை.

தனது நண்பன் செய்த பல ஆயிரக்கணக்கான கொலைகளுக்கான ஆதாரங்களை உள்ளக்கிய உலகின் பல நாடுகளால் கூட ஏற்று கொள்ளபட்ட ஒரு ஆவணபடத்திற்கு கொலை செய்த தனது பயங்கரவாத நண்பன் கோவித்து கொள்வான என்ற காரணத்திற்காக தடை போடுவதும் பயங்கரவாதத்தை ஊக்கிவிக்கும் செயலே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.