Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர்கள்

Featured Replies

பொல்லாப் பிறப்பும் புளுதியில் எறிபட்ட மீன் குஞ்சுகளும்

வல்ல அசுரர்களின் கால்களில் புளுவாய் துடிக்கும் போதிலும்

எல்லா வலியும் பொறுத்தருள் என்ற கடவுளுக்கு

அரோகரா சொல்லித்திரியும் தெருப்பண்டார பரதேசிகளின் கூச்சல்கள்

உலக மூலை முடுக்குகளில் ஓங்கி ஒலிக்கின்றது.

கோவணத்துடன் சிலுவையில் அறையப்பட்ட கத்தருக்கு

உடல்முழுக்க ஆடையணித்து தோத்திரம் சொல்லும்

தேவதூதர்களை

அம்மணமாக சிலுவையில் அறையப்பட்டிருப்பவர்கள்

குறை உயிருடன் அரைக்கண்ணால்

புரியாமல் பார்க்கின்றார்கள்

கடவுளால் கைவிடப்பட்டவர்களின் திருவோடுகளில்

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விழையாடும்

பந்துகள் தான் தவறி விழுகின்றது

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் கலந்து

பீதியில் வயிற்றோட்டமாய் வீதியோரங்களில்

உதிரத்துடன் நிறைந்திருக்க

மூக்கைப் பொத்திச் செல்கின்றோம்

ஏன் செத்து செலவு வைத்தாய் என்று

பெற்ற தாயின் பிணத்து குடுமியை பிடித்துலுக்கிய

பஞ்சமா பாதகன்

என்ற பட்டத்துடன் தான் இப் புலப்பெயர் வாழ்வு முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை, பல தளங்களைத் தொட்டுச் செல்கின்றது!

 

பொல்லாப் பிறப்பும் புளுதியில் எறிபட்ட மீன் குஞ்சுகளும்

வல்ல அசுரர்களின் கால்களில் புளுவாய் துடிக்கும் போதிலும்

எல்லா வலியும் பொறுத்தருள் என்ற கடவுளுக்கு

அரோகரா சொல்லித்திரியும் தெருப்பண்டார பரதேசிகளின் கூச்சல்கள்

உலக மூலை முடுக்குகளில் ஓங்கி ஒலிக்கின்றது.

 

இந்த விடயத்தில், கருத்துக் கூற வெளிக்கிட்டு, நான் 'சைவத்தை' விட்டு வெளியேறியவன்... என்ற அளவுக்கு ' குறி' சுடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவமும் நடந்தேறியது!

 

உயிரற்ற வெறும் சிலைகளுக்கு, வழிபாடு செய்வதும், அவற்றுக்கு ஆராதனைகள் செய்வதும், ஒருவரை ஆன்மீக வாழ்வுக்கு இட்டுச் செல்லுமானால், ' நான் ஜீவன் முத்தர்கள்' பலரைத் தினமும் சந்திக்கும் பாக்கியசாலியாக இருக்கவேண்டும்!

ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை.! :o

குறிப்பாக முள்ளிவாய்க்காலின் பின்னர், எனது மன நிலை  மிகவும் மாறியுள்ளது.!

தேர் கட்டி விளையாடுகின்ற சிறு குழந்தைகளின் 'விளையாட்டுப்போலவே' இது எனக்குத் தோன்றுகின்றது!

குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், இந்த 'விரயம்' முழுவதும், தேவையான வழிகளில் செலவழிக்கப்பட்டிருக்கலாம்!

எம்மிடம் வளமிருக்கின்றது....அது வெறும் 'புற்களுக்கே' பசளையாவது தான், நிதர்சனம்!

 

 கோவணத்துடன் சிலுவையில் அறையப்பட்ட கத்தருக்கு


உடல்முழுக்க ஆடையணித்து தோத்திரம் சொல்லும்

 

 

 

இந்த விடயத்தில், சிலுவையில் அறியப்பட்டவர், கர்த்தர் அல்ல, யேசு !

 

ஆனால், நீங்கள் சொல்ல வந்த விடயம், கவிதையின் முதல் பகுதியுடன் தொடர்புடையதே என்பதுடன் உடன்படுகிறேன்!

 

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் கலந்து

பீதியில் வயிற்றோட்டமாய் வீதியோரங்களில்

உதிரத்துடன் நிறைந்திருக்க

மூக்கைப் பொத்திச் செல்கின்றோம்

 

இங்கு, குற்றம் புரிந்தவர்களைப் பற்றி, ஓரிரு வார்த்தையாவது கூறுவதற்கு, எதற்குத் தயக்கம் என்று புரியவில்லை!

 

நீங்கள் கூறுவது போல, ஒட்டு மொத்தப் புலம் பெயர்ந்தவர்களும், மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லவில்லை என எண்ணுகின்றேன்!

 

தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் தாருங்கள், சண்டமாருதன்!

  • தொடங்கியவர்

உங்கள் கவிதை, பல தளங்களைத் தொட்டுச் செல்கின்றது!

 

இந்த விடயத்தில், கருத்துக் கூற வெளிக்கிட்டு, நான் 'சைவத்தை' விட்டு வெளியேறியவன்... என்ற அளவுக்கு ' குறி' சுடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவமும் நடந்தேறியது!

 

உயிரற்ற வெறும் சிலைகளுக்கு, வழிபாடு செய்வதும், அவற்றுக்கு ஆராதனைகள் செய்வதும், ஒருவரை ஆன்மீக வாழ்வுக்கு இட்டுச் செல்லுமானால், ' நான் ஜீவன் முத்தர்கள்' பலரைத் தினமும் சந்திக்கும் பாக்கியசாலியாக இருக்கவேண்டும்!

ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை.! :o

குறிப்பாக முள்ளிவாய்க்காலின் பின்னர், எனது மன நிலை  மிகவும் மாறியுள்ளது.!

தேர் கட்டி விளையாடுகின்ற சிறு குழந்தைகளின் 'விளையாட்டுப்போலவே' இது எனக்குத் தோன்றுகின்றது!

குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், இந்த 'விரயம்' முழுவதும், தேவையான வழிகளில் செலவழிக்கப்பட்டிருக்கலாம்!

எம்மிடம் வளமிருக்கின்றது....அது வெறும் 'புற்களுக்கே' பசளையாவது தான், நிதர்சனம்!

 

 

இந்த விடயத்தில், சிலுவையில் அறியப்பட்டவர், கர்த்தர் அல்ல, யேசு !

 

ஆனால், நீங்கள் சொல்ல வந்த விடயம், கவிதையின் முதல் பகுதியுடன் தொடர்புடையதே என்பதுடன் உடன்படுகிறேன்!

 

இங்கு, குற்றம் புரிந்தவர்களைப் பற்றி, ஓரிரு வார்த்தையாவது கூறுவதற்கு, எதற்குத் தயக்கம் என்று புரியவில்லை!

 

நீங்கள் கூறுவது போல, ஒட்டு மொத்தப் புலம் பெயர்ந்தவர்களும், மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லவில்லை என எண்ணுகின்றேன்!

 

தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் தாருங்கள், சண்டமாருதன்!

ஒரு சம்பவம் அதுசார்ந்த அக புற சூழ்நிலைகளின் யதார்த்தம் என்பவவை உணர்வுகளால் எட்டப்படும்போத அதை எழுத முற்பட்டது.

குற்றத்தின் எனது பக்கப் பங்கையே எப்பவும் முன்வைக்க முனைகின்றேன். நான் குற்றவாளியக இருக்கும் வரை குற்றம் புரிந்தவனை சுட்டிக்காட்டுவது அவன் தோழில் தட்டிக்கொடுப்பதாகவே எப்போதும் மாறுகின்றது.

சுட்டிக்காட்டத் தகுதியற்ற அல்லது மறுக்கும் சுழலுக்குள்ளாகவே எனக்கு பட்டதை எழுத முற்பட்டேன.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.