Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய

Featured Replies

யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய சிங்களம் விரைவில் மண்டியிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

நோர்வே தூதுவரைக் கொண்ட தூதுக்குழுவினரை இன்று சந்தித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறோம்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது கட்டவிழ்த்துவிட்டுள்ள அரச பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் பற்றியும் விளக்கினோம்.

யுத்த நிறுத்த ஓப்பந்தத்தை முற்றாக இல்லாதொழிக்கும் முடிவுக்கு சிறிலங்கா அரசாங்கம் வந்துளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமது மக்கள் மீதான குண்டு வீச்சுக்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பாகவும் விரிவாக விளக்கியிருக்கிறோம்.

திருகோணமலையில் சம்பூர் பகுதியை ஊடுருவி ஆக்கிரமித்து இராணுவம் நிற்பதற்கான எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்தோம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இல்லாது செய்யும் இந்நடவடிக்கையினால் எதிர்காலத்தில் சமரச முயற்சிகள் மற்றும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நாளில் இருதரப்பு கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் எந்த வரையறையில் இருந்தனவோ அந்த வரையறைக்குள் மீளக் கொண்டுவரப்படாமல் இனிவரும் காலங்களில் எந்த சமரச முயற்சிகளுக்கு இடமில்லை என்கிற எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாட்டை நோர்வே குழுவினரிடம் முன்வைத்துள்ளோம்.

நோர்வேக் குழுவினரும் தங்களது கவலையையும் கரிசனையையும் தெரிவித்தனர். சிறிலங்கா அரசாங்கத்தரப்பிலிருந்து எதுவித செய்தியும் எமக்குக் கொண்டுவரப்படவில்லை.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்படி இருதரப்பு கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. யுத்த நிறுத்த மீறல்களுக்கு அப்பால் இந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீறுகின்ற போது ஒருதரப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து முற்றாகவே விலகுவதாகவே அர்த்தம் கொள்ளப்படும்.

அந்த வகையில் சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதாக சம்பூர் நடவடிக்கையின் மூலம் நாங்கள் முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

கண்காணிப்புக் குழுவினரோ, இணைத் தலைமை நாடுகளோ, அனுசரணையாளர்களோ மற்றும் சர்வதேச சமூகமோ இந்த நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அதனை அவர்களும் விளங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது. இராணுவ நடவடிக்கைகளையும் குண்டுவீச்ச்களையும் படுகொலைகளையும் இராணுவ வெறியாட்டங்களையும் எமது தேசத்தில்- எமது மக்களிடத்தில் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

....இம்முறை சர்வதேச சமூகத்துக்கு தெளிவாகத் தெரியும்-

யார் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்-

யாருடைய பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறத

சரியான அறிக்கை அப்போ யுத்தநிறுத்தம் அமுலில் இல்லையா???.அப்ப இலங்கை காடையருக்கு சாவுமணியோ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தலைமை பீடத்திற்க்க இப்படியான அறிக்கைகள் தான் ஆறுதலை தருகின்றது...

ம் நல்லதொரு அறிக்கை. அரசியல்; ரீதியாக விடுதலைப்புலிகள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல பதில். சிறீ லங்கா அரசை மற்ற நாடுகள் தடை செய்ய முடியதாது. அனால் தற்போதைய சூழ்நிலைக்கு சிறீ லங்கா அரசே பொறுப்பேற்க வேண்டும்.

சாம்புூரை விட்ட விலகுவாத என்ற ஜனாதிபதியின் ஏக்களத்திற்கு நல்ல பதில்.

இப்ப ஆப்பிளுத்த குரங்கு அரசே!

சாம்புூரை விட்டு விலாகாதுவிடின் அது புலிகளிற்கு வெற்றியே அனால் இராணுவ ரீதியில் ஒரு பின்னடைவே!

வெகு விரைவில் இந்த பின்னடைவுகள் வெற்றிகளாக மாறும். அதற்கு யுத்தம் தான் என்பதல்ல!

ம் நல்லதொரு அறிக்கை. அரசியல்; ரீதியாக விடுதலைப்புலிகள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல பதில். சிறீ லங்கா அரசை மற்ற நாடுகள் தடை செய்ய முடியதாது. அனால் தற்போதைய சூழ்நிலைக்கு சிறீ லங்கா அரசே பொறுப்பேற்க வேண்டும்.

சாம்புூரை விட்ட விலகுவாத என்ற ஜனாதிபதியின் ஏக்களத்திற்கு நல்ல பதில்.

இப்ப ஆப்பிளுத்த குரங்கு அரசே!

சாம்புூரை விட்டு விலாகாதுவிடின் அது புலிகளிற்கு வெற்றியே அனால் இராணுவ ரீதியில் ஒரு பின்னடைவே!

வெகு விரைவில் இந்த பின்னடைவுகள் வெற்றிகளாக மாறும். அதற்கு யுத்தம் தான் என்பதல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ோர்வேக் குழுவினரும் தங்களது கவலையையும் கரிசனையையும் தெரிவித்தனர். சிறிலங்கா அரசாங்கத்தரப்பிலிருந்து எதுவித செய்தியும் எமக்குக் கொண்டுவரப்படவில்லை.

அந்த வகையில் சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதாக சம்பூர் நடவடிக்கையின் மூலம் நாங்கள் முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இருதரப்பு கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு இரு படை வலுச்சமநிலையில்தான் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்தப் படை வலுச் சமநிலையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இன்று சம்பூர் பிரதேசத்துக்குள் இராணுவம் ஊடுருவி ஆக்கிரமித்து நிற்கிறது.

இதற்கு முடிவு கட்டப்படாமல் இனி ஒருபோதும் சமர முயற்சிகளுக்கோ யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கத்துக்கோ வாய்ப்பில்லை என்ற எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடுதான் இன்று விளக்கப்பட்டது.

மிக விரைவில் சிங்களப் படைகள் விரட்டியடிக்கப்படும் நிலை முழு அளவில் விரைவில் உருவாகும்.

இலங்கைத்தீவில் வன்முறையை- யுத்தத்தை முழு அளவில் உருவாக்கி இலங்கைத் தீவை இரணகளமாக்கும் ஒரு முயற்சிதான் இது. இதனுடைய விளைவை மிக விரைவில் மகிந்த ராஜபக்ச உணருவார்.

தமிழர் தேசமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தீர்க்கமான பதிலை இனிவரும் காலங்களில் கொடுக்கும்.

ுத்த காலமாக இருந்தாலும் சர்வதேச சமூகத்துடனான எமது கலந்துரையாடல்களும் சந்திப்புகளும் தொடர்ந்து நடைபெறும்

எங்களைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிவிட்டது.

எமது பிரதேசம் எப்படி அழிக்கப்படுகிறதோ- சிதைக்கப்படுகிறதோ- எமது மக்கள் அழிக்கப்படுகின்றனரோ அதே நிலைமை சிங்கள தேசத்தில் நிகழும்போது சர்வதேச சமூகம் இரட்டைத் தன்மையுடன் அணுகக் கூடாது.

ஆகவே சர்வதேச சமூகம் விழிப்படைய வேண்டிய நிர்பந்தம் உருவாகி வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு இதுவரை காலம் சர்வதேச சமூகம் செய்து வந்த இராணுவ பொருளாதார உதவிகள் வழங்குவதில் மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

அனேகமாக இடி முழக்ககத்துடன் வெகு விரைவிலை எல்லாம் ஆரம்பிக்கும எண்டு சொல்லிறியளே??? சரி சரி பொறுத்தார் அரசாள்வார் மற்றவர் யாழ் இணையத்திலை கிடந்து புலம்புவார் எண்டு முடியும் என்று நம்புவம்.

அனேகமாக இடி முழக்ககத்துடன் வெகு விரைவிலை எல்லாம் ஆரம்பிக்கும எண்டு சொல்லிறியளே??? சரி சரி பொறுத்தார் அரசாள்வார் மற்றவர் யாழ் இணையத்திலை கிடந்து புலம்புவார் எண்டு முடியும் என்று நம்புவம்.

தம்பி 1986லை இருந்து பொறுக்கிறம் ....பொறுக்கிறம் ...இன்னும் பொறுக்கி....சா....ஒரு விடிவையும் காணமுடியேலை எங்கடை காலம் முடியிறத்துக்கிடையிலை கிடைச்சா அதையும் பாத்திட்டு இந்த சீவன் சந்தோஷமாப் போய்ச் சேரும்........

தம்பி 1986லை இருந்து பொறுக்கிறம் ....பொறுக்கிறம் ...இன்னும் பொறுக்கி....சா....ஒரு விடிவையும் காணமுடியேலை எங்கடை காலம் முடியிறத்துக்கிடையிலை கிடைச்சா அதையும் பாத்திட்டு இந்த சீவன் சந்தோஷமாப் போய்ச் சேரும்........

என்ன முகத்தார் ஏக்கங்கள் இழையோட பெருமூச்சு விடுறீங்கள்..!

உண்மைதான்..சிங்களவர்கள் எந்தளவு நக்கல் அடிப்பினம் என்பதை யாழ்ப்பாணத்தை இழந்த போது நாங்களே நேரில அனுபவச்சிருக்கிறம். நெடுநாள் பழகிய ஒருத்தனே வந்து கேட்டான்..இப்ப உங்களுக்கு விடுதலை என்ன...ம்ம்ம் என்று தலையாட்டினதுதான்...!

பார்ப்போம்..புலிகள் சில இராஜதந்திரக் காய் நகர்த்தல்களைச் செய்யினமாம்..அவை நகர்த்தி முடிக்கிறத்துக்கிடையில பொறுமை இழந்திடாதேங்கோ..நீங்கள் சந்திக்கும் மக்களுக்கும் சொல்லுங்கோ. குறிப்பா இராணுவக் கட்டுப்பாட்டுக்க இருக்கிற மக்களுக்குத்தான் உணர்வுகள் அதிகம். அடக்கி வைச்சு வைச்சே..பழகிப் போனவங்களுக்கு எப்படா விடுதலை கிட்டும் என்று காத்திருப்பாங்க..! எங்களால மக்களின் உணர்வுகளை உள்வாங்க முடியுது..! யதாத்தமா நிதர்சன சூழலைப் பார்க்க முடியுது..!

உங்களைப் போலவே பலர் காத்திருக்கின்றனர்..விடுதலைக

காத்திரமான தாமதமற்ற செயற்பாடுகளே இதுபோன்ற அறிக்கைகளை முழுமைப்படுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய் பாண்டு007!

நானும் மழைவரத்தான் திருவிழா என்று கேள்விப்பட்டேன்!!! அதுக்கு மேல் ரி.வி.ஐ "செய்திக்கண்ணோட்டத்திலும்" அப்படித்தான் சொன்னார்களாம்!!!!.... பொறுத்திட்டோம் இவ்வளவு காலமும்!! இன்னும் கொஞ்சமும் பொறுப்பமன்!!!!!!

.... என்ன தமிழன் அவை தொகையின்றி சாக, தமிழ்ப்பிரதேசங்களில் விமானத்தாக்குதல்கள், செல்வீச்சுக்கள், ... என்பனவால் இரத்த ஆறு ஓடும்போது சிங்களப் பிரதேசங்கள் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமா????? என்ற கவலைதான்!!!! ஒரு தமிழனுக்கு பத்துச் சிங்களவனை பரலோகம் அனுப்ப வேண்டாமா????

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி 1986லை இருந்து பொறுக்கிறம் ....பொறுக்கிறம் ...இன்னும் பொறுக்கி....சா....ஒரு விடிவையும் காணமுடியேலை எங்கடை காலம் முடியிறத்துக்கிடையிலை கிடைச்சா அதையும் பாத்திட்டு இந்த சீவன் சந்தோஷமாப் போய்ச் சேரும்........

ஓமோம் முகத்தார். இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருங்கோ! தமிழீழம் கிடைக்கும். ஏனென்றால் அதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லைத் தானே! வேடிக்கை மட்டும் பார்ப்பம்!

ஓமோம் முகத்தார். இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருங்கோ! தமிழீழம் கிடைக்கும். ஏனென்றால் அதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லைத் தானே! வேடிக்கை மட்டும் பார்ப்பம்!

யார் தம்பி முகத்தானோ வேடிக்கை பாக்கிறது??? அகதிகளாக வாற சனத்துக்கு இருக்க இடம் சாப்பாடு தண்ணி எண்டு ஒழுங்கு செய்து குடுக்கிறோமே.... (தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருப்பதால்) இது காணாதோ??? போராட்டத்துக்கு ஆயுதம்தான் தூக்க வேணுமெண்டில்லைதானே....... எங்கள் உறவுகளுக்கு உதவி செய்வதே இந்த நேரத்தில் பெரிதென நான் நினைக்கிறன் ........... வெளிநாட்டிலை போய் இருந்து கொண்டு விண்ணானம் கதைக்கிற ஆட்களோடை ஓப்பிடேக்கை நான் திறம் எண்டுதான் சொல்லுவன்......... (தம்பி இங்கையே நிறைய சனம் எமது போராட்டத்துக்கு எந்த சம்மந்தமில்லாமல்தான் வாழுதுகள் அகதிகளாக வாற சனத்தையே விடுப்புப் பாக்குதுகள் எண்டால் பாருங்கோவன்)

யார் தம்பி முகத்தானோ வேடிக்கை பாக்கிறது??? அகதிகளாக வாற சனத்துக்கு இருக்க இடம் சாப்பாடு தண்ணி எண்டு ஒழுங்கு செய்து குடுக்கிறோமே.... (தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருப்பதால்) இது காணாதோ??? போராட்டத்துக்கு ஆயுதம்தான் தூக்க வேணுமெண்டில்லைதானே....... எங்கள் உறவுகளுக்கு உதவி செய்வதே இந்த நேரத்தில் பெரிதென நான் நினைக்கிறன் ........... வெளிநாட்டிலை போய் இருந்து கொண்டு விண்ணானம் கதைக்கிற ஆட்களோடை ஓப்பிடேக்கை நான் திறம் எண்டுதான் சொல்லுவன்......... (தம்பி இங்கையே நிறைய சனம் எமது போராட்டத்துக்கு எந்த சம்மந்தமில்லாமல்தான் வாழுதுகள் அகதிகளாக வாற சனத்தையே விடுப்புப் பாக்குதுகள் எண்டால் பாருங்கோவன்)

இங்க மட்டும் என்ன முகத்தார்....90% அப்படித்தான்..ஒரு 10% அதுவும் சுயநலத்தோடதான்.. ஒரு 2%... அதுக்குள்ளத்தான் உண்மையான தேசிய உணர்வோட....இருக்குதுகள்...அதாலத

  • கருத்துக்கள உறவுகள்

யார் தம்பி முகத்தானோ வேடிக்கை பாக்கிறது??? அகதிகளாக வாற சனத்துக்கு இருக்க இடம் சாப்பாடு தண்ணி எண்டு ஒழுங்கு செய்து குடுக்கிறோமே.... (தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருப்பதால்) இது காணாதோ??? போராட்டத்துக்கு ஆயுதம்தான் தூக்க வேணுமெண்டில்லைதானே....... எங்கள் உறவுகளுக்கு உதவி செய்வதே இந்த நேரத்தில் பெரிதென நான் நினைக்கிறன் ........... வெளிநாட்டிலை போய் இருந்து கொண்டு விண்ணானம் கதைக்கிற ஆட்களோடை ஓப்பிடேக்கை நான் திறம் எண்டுதான் சொல்லுவன்......... (தம்பி இங்கையே நிறைய சனம் எமது போராட்டத்துக்கு எந்த சம்மந்தமில்லாமல்தான் வாழுதுகள் அகதிகளாக வாற சனத்தையே விடுப்புப் பாக்குதுகள் எண்டால் பாருங்கோவன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.