Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை கருத்திற்கொண்டாவது தேவை இல்லாமல் இலங்கைக்கு போவதை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்!

விடுதலைப் புலிகள் மேற்குலகின் கோரிக்கைகளை ஏற்காமல் முறுக்கிக் கொண்டு திரிந்தார்கள். வளைந்து கொடுக்க மறுத்தார்கள். ஒவ்வொரு பேச்சுவார்த்தை முடிந்ததும் புலிகள் செய்த எதிர்நடவடிக்கைகளை நாங்கள் "அடுத்த கட்ட நகர்வு" என்று ஆய்வு செய்தோம். கடைசியில் புலிகள் முறிக்கப்பட்டார்கள். /p>

 

அறிவாளி ஐயா. இதைப் பற்றி விபரிக்க முடியுமா? முறுக்கிக் கொண்டு திரிவது என்றால் என்ன? மேற்குலகம் விதித்த விதிகள் என்ன என்பது தொடர்பாகவும் சொல்ல முடியுமா? நீங்களும் உங்களின் வெப்புலகத்தில் நன்றாகவே முறுக்கித் தான் எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்போது ஏதோ ஞானி மாதிரிக் கதைக்கின்றீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்!

விடுதலைப் புலிகள் மேற்குலகின் கோரிக்கைகளை ஏற்காமல் முறுக்கிக் கொண்டு திரிந்தார்கள். வளைந்து கொடுக்க மறுத்தார்கள். ஒவ்வொரு பேச்சுவார்த்தை முடிந்ததும் புலிகள் செய்த எதிர்நடவடிக்கைகளை நாங்கள் "அடுத்த கட்ட நகர்வு" என்று ஆய்வு செய்தோம். கடைசியில் புலிகள் முறிக்கப்பட்டார்கள்.

இப்பொழுது நீங்கள் சிறிலங்கா அரசு செய்திருக்கும் இந்த நடவடிக்கையை "அடுத்த கட்ட நகர்வு" என்று வர்ணிக்கின்றீர்கள். உண்மையிலேயே இதை அப்படித்தான் பார்க்கின்றீர்களா?

 

நடுநிலை வகிக்க வந்த அமெரிக்கா.... அது தான் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடுநிலை வகிக்க வந்தவர்கள் வி.புலிகளை ஓரம் கட்டி விட்டு தனியாக இலங்கை அரசோடு பேசியவர்கள்  ஒன்றில் புலிகளை தாங்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டிருந்தால் நடுநிலை வகிக்க வந்திருக்க கூடாது. ஆனால் நடுநிலை வகிக்க வந்த்து விட்டு ஓரம்  அவர்களை ஓரம் கட்டியது அமெரிக்கா. இதில் எங்கே வி.புலிகள் முறுக்கி கொண்டு  திரிந்தார்கள்?. நீங்கள் தான் எங்கோ முறுக்கு சுட்டுள்ளீர்கள் போலுள்ளது. :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கம் வெளியிட்டுள்ள தடைப் பட்டியலில் பல தவறுகளும் பிழைகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் :
07 ஏப்ரல் 2014
 
இலங்கை அரசாங்கம் சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது தடை விதித்து வெளியிட்டுள்ள பட்டியலில் பல தவறுகளும் பிழைகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
விடுதலைப் புலிகள் உட்பட 16 அமைப்புகள் மற்றும் 425 தனி நபர்களுக்கு தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
 
நாட்டை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைப்பாளர் என்று கூறப்படுபவரின் பெயரும் அதில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்களின் பெயர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையின் நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களின் பெயர்களும் அதில் உள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், அதன் காரணமாக உள்ளூர் மக்கள் பெரும் கவலையும் கலக்கமும் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
அரசின் பட்டியல் வெளியானதை அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு மீண்டும் எற்பட்டுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
 
உள்ளூர் மக்களின் பெயர்களும் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இருப்பது தொடர்பில் பலர் தொடர்ச்சியாகத் தன்னிடம் வந்து முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் இதன் காரணமாக சமூகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இவை மட்டுமல்லாமல் கனடாவிலிருந்து இயங்குவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ள சில அமைப்புகள் தற்போது இயங்கவில்லை என்றும் அவை இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள விலாசங்கள் தவறானவை என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அதிசிறந்த புலனாய்வுப் படையை வைத்திருப்பவர்களுக்கு இறந்தவர் விவரங்கள் கிடைக்கவில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
எச்சரிக்கை: பேஸ்புக் வாழ் புலம்பெயர் தமிழர்களே உங்கள் பெயர்களும் நாளை சிறீலங்காவின் தடைப்பட்டியலில் இருக்கலாம். அவதானம்.

தொடங்கிட்டாங்கைய்யா. சிங்களவன் எது செய்தாலும் அதுக்கு ஒரு வியாக்கியானம் கொடுக்க என்றே ஒரு குறூப் இருக்குது. புலிகள் ஏதோ இப்பதான் இராணுவ ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறது போலவும்.. புலிகள் ஒன்றுமே தெரியாமல்.. ஆவணங்களை கைவிட்டிட்டு போனார்கள் என்பது போலவும்.. சிங்களவன் அப்பாவின்னும்.. காட்டச் சிலர் விளைகிறார்கள்.

சிறீலங்கா வெளியிட்ட தடை லிஸ்ட்.. ஆவணங்கள் எல்லாமே புலம்பெயர் காட்டிக்கொடுப்பாளர்களால்.. ( பேஸ்புக்கில் நீங்கள் அட் பண்ணினதுகள் கூட உளவாளிகளாக இருக்கலாம். உங்கள் சொந்தங்கள் கூட அதை காசுக்கு செய்யலாம்.) வழங்கப்பட்டவை. விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில்.. தீயிட்டுக் கொழுத்திட்டுத்தான் போனார்கள். பொதுவாக ஆவணங்களை கைவிட்டுப் போகும் வாடிக்கை புலிகளிடம் இல்லை. புலிகளைப் பற்றி அறியாத பூனைகள் காட்டும் படத்தை எல்லாம் நம்ப வேண்டும் என்றில்லை.

புலிகள் இருந்த போதே வன்னியில், குடா நாட்டில் என்ன நடக்குது என்ற தகவல் சிறீலங்கா இராணுவத்திற்குப் போய்க் கொண்டு தான் இருந்தது. அவற்றை.. யார் வழங்கியது நம்ம தமிழர்கள் தான். புலம்பெயர் தேசங்களிலும் நிறைய கூலித் தமிழர்கள் உள்ளார்கள். அவர்களை பாதுகாக்கும்.. இந்த வகையான.. புலிகளின் ஆவணம் சிக்கியது.. புலிகள் பல தகவல்களை சேகரித்தார்கள்.. அதன் விளைவே இது.. என்று வரும்.. எழுத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

குறிப்பா பேஸ்புக்கில் உண்மையான விபரங்களோடு..உலா வரும் உறவுகள். காட்டிக்கொடுப்பாளர்களால் காசுக்கு.. அவையும் தொகுக்கப்பட்டு சிங்களத்திடம் கையளிக்கப்படலாம். அது நாளை புலிகள் விட்டுச் சென்ற ஆவணத்தில் இருந்து வந்தது என்ற வடிவில் வெளிவரலாம். ஒரே கல்லில் பல மாங்காய். மறைந்திருந்து காட்டிக் கொடுப்புத் தொடரும். கூலி கிடைக்கும். புலிகள் மீதான நம்பிக்கை மேலும் மேலும் தகரும். புலிகள் வெல்லக் கூடாது.. என்ற துரோகிகளின் எண்ணம் வாழும். சிங்களவன்.. வெல்லப்பட முடியாதவன் எதிர்க்கப்பட முடியாதவன் தோறணை வலுப்பெறும். எஜமான விசுவாசம் வளர்க்கப்படும். !!!!! இது தான் இவர்களின் விருப்பம். !!!!!
10173785_10152001220992944_1396883315136

 

  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்யப்பட்ட நபர்களில் சிலர் புலம்பெயர்ந்த நாடுகளில் ,அவர்கள் இருக்கும் நாடுகளினால் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று கைது செய்யப்பட்டு பின்பு நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சமாதான காலத்திலும் ,ஆழிப்பேரலை 2004லும் வன்னிக்கு சென்றவர்கள் பலரின் பெயர்கள் இதில் இருக்கின்றது. அக்காலத்தில் ஓமந்தையில் தங்களது கடவுட்சீட்டு இலக்கம் உட்பட பல விபரங்கள் இராணுவக்காவலரனில் பதியல்படவேண்டும். அத்துடன் தமிழீழத்துக்கு நுளையும் போது தமிழீழக் குடிவரவு அதிகாரிகளிடம் வன்னிக்கு செல்லும் போது பதியப்படல் வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு சிறிலங்கா பாதுகாப்பு இணையத்தளத்தில் வன்னியில் இருந்து கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய புலம் பெயர்ந்த நாட்டினைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் என்று சிலரது விபரங்களை வெளியிட்டு இருந்தார்கள்.(விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக வன்னிக்கு சென்றபோது பதிந்த விபரங்கள்). தடைசெய்யப்பட்ட நபர்களில் சிலர் இப்பொழுது இறந்துவிட்டார்கள். சிலர் நாடுகள் மாறிவிட்டார்கள். பலரது விலாசங்கள் 2005 காலப்பகுதியில் இருந்த விலாசங்களே இருக்கிறது. சில அமைப்புக்கள் இப்பொழுது இயங்குவதில்லை. சிலர் இப்பொழுது ஒதுங்கிவிட்டார்கள். நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டி போடும் சில தமிழர்களினால் தெரிந்தோ தெரியாமலோ புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களின் விபரங்கள் சிங்களத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது. தேவையில்லாமல் சிங்கள தேசத்துக்கு சுற்றுலா செல்வதினைத் தவிர்த்தால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.