Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் சோகக் கதையைக் கேளு, தாய்க்குலமே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் சோகக் கதையைக் கேளு, தாய்க்குலமே!

 

 

M_Id_459073_Narendra_Modi-wife.jpg

 

 

 

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, தமக்கு திருமணம் ஆகிவிட்டது தனது மனைவி பெயர் ஜஷோடபென் என்று முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை தெரிவிக்காமலேயே வந்தார் மோடி. ஆனால் அண்மைக்காலமாக அவருக்கு திருமணமாகிவிட்டது.. அவரது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை ஜஷோடபென் என்று ஊடகங்கள் எழுதி வந்ததுடன் அவரது பேட்டியையும் வெளியிட்டன.

அத்துடன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் நிரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடுபிடிகாட்டியது. இதனாலேயே மோடி இப்போது தமக்கு திருமணமாகிவிட்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்டார்.

ஆனால் மோடி தமது மனைவியுடன் இப்போது இல்லை. அவர் தனியாக வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியையான மோடியின் மனைவி ஜஷோடபென் சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மோடி:

எனக்கு 17 வயது இருக்கும் போது திருமணம் செய்து கொண்டோம். அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் மோடிதான் என்னை படிக்கத் தூண்டினார்.

எனக்கு மோடியுடன் எந்த தொடர்பும் இல்லை.. எந்த சண்டையும் இல்லை.. அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார். நான் அப்போது மாமனார் வீட்டில் இருந்தேன். ஒருகட்டத்தில் அவர் அங்குகூட வருவதும் இல்லை.

அதன் பின்னர் நானும் அங்கே செல்வதை தவிர்த்துவிட்டேன்.. அவரை விட்டு விலகுவது என்பது என்னுடைய முடிவுதானே தவிர.. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

அவரைப் பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளைப் படிப்பேன். தொலைக்காட்சிகளில் அவரைப் பற்றிய செய்திகளை ஆர்வமுடன் கேட்பேன்.

நான் அவரை சந்திக்கப் போவதும் இல்லை.. அவர் என்னை அழைப்பார் என்றும் நினைக்கவும் இல்லை.. அவரை துன்பப்படுத்த நான் விரும்பவில்லை.. அவர் அவருடைய பணியில் முன்னேற வேண்டும். ஒருநாள் அவர் நாட்டின் பிரதமராக அவர் வரவேண்டும்.

நான் அவருடைய மனைவி இல்லையெனில் எப்படி என்னிடம் ஊடகங்கள் பேசுவார்கள்? அவரைவிட்டு வந்த பிறகு நான் வேறு திருமணம் செய்யப் போவதில்லை என முடிவு செய்துவிட்டேன். என்னுடைய மாமனார் குடும்பத்தினர் நன்றாகத்தான் பார்த்துக் கொண்டனர்.

என்னுடைய கல்வியைத் தொடர என் சகோதரர்கள் உதவி செய்தார்கள். அதன் பின்னர் 1978ல் ஆசிரியர் பயிற்சியையும் முடித்தேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன்.

ஓய்வு பெற்ற பின்னர் இப்போது ஆன்மீகத்தில்தான் அதிக நாட்டம் இருக்கிறது. என்னுடைய அண்ணன் அசோக் மோதியுடன்தான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இன்னொரு அண்ணன் பிரமன்வதாவில் இருக்கிறார். எனது இரு சகோதரர்களும்தான் ஆதரவாக இருக்கின்றனர்.

 

 

http://indru.todayindia.info/modis-wife-jasotapen-interview-awesome-rss-rsss-modi-in-motion/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன் மகனே இல்லையென டபாய்த்து, வழக்கு மேல் வழக்கை சந்தித்து சந்தி சிரித்த இறுதி நிலையில் உச்சநீதி மன்றத்தில் குட்டு வாங்கிய பின், ரோஹித சர்மாவை மகனாக ஏற்றுக் கொண்ட என்.டி.திவாரியை விட மோடி பரவாயில்லை சந்தி சிரிக்குமுன் தேர்தல் விதியின் அழுத்தத்தால் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். :)

 

ஆனால் இம்மாதிரியாக டபாய்க்கும் அரசியல் வியாதிகள், இந்தியாவின் தலமை பீடத்தை பீடித்தால் நாட்டின் நிலை என்னவாகும்? :o

  • கருத்துக்கள உறவுகள்

திவாரி தந்தை என்ற நிலையை மறுத்ததுக்கும், திருமணம் ஆகவில்லை என்று சொல்வதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. கலைஞர் கருணாநிதியும் திவாரி போல. கனிமொழியைத் தன் மகள் என்பதையே நீண்டநாட்களுக்குப் பிறகு தான் வெளிப்படையாகச் சொன்னார்.மோடி ஆர்எஸ்எஸ் இல் உள்ள ஈடுபாடு காரணமாகத் தான் திருமணத்தை மறுத்தார் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...மோடி ஆர்எஸ்எஸ் இல் உள்ள ஈடுபாடு காரணமாகத் தான் திருமணத்தை மறுத்தார் போலுள்ளது.

 

பொறுப்புள்ள பதவியை வகிப்போர் எவரும் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். 

 

இவருடைய தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் திருமணமானதை இத்தனை வருடங்களாக மறைத்தது தவறு,

 

வேட்பாளர் விண்ணப்பதில்கூட உண்மையை எழுதாதவர், எப்படி நாட்டின் அரசியல் ரகசியங்களுக்கு உண்மையாக இருப்பார் என மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்?

 

நிரப்பாமல் தானே விட்டார்....பிழையாக நிரப்பவில்லை தானே..அவர் பதவிகளுக்கு வருமுன்னேயே கல்யாணம் முறிந்து விட்டது தானே...

அவர் செய்தது பெரிய பிழையாக தெரியவில்லை.....

அவர் மக்கள் பணத்தை சுருட்டினதாகவோ...பதவியை துஸ்பிரயோகம் செய்ததாகவோ இதுவரை ஒருத்தரும் குற்றம் கூற முடியவில்லை தானே....

 

முஸ்லீம்களை கொல்வதை தடுக்கவில்லை என்பது தான் அவரின் மீதுள்ள ஒரேயொரு பழி :) :)

  • கருத்துக்கள உறவுகள்

1- நிரப்பாமல் தானே விட்டார்....பிழையாக நிரப்பவில்லை தானே..அவர் பதவிகளுக்கு வருமுன்னேயே கல்யாணம் முறிந்து விட்டது தானே...

அவர் செய்தது பெரிய பிழையாக தெரியவில்லை.....

அவர் மக்கள் பணத்தை சுருட்டினதாகவோ...பதவியை துஸ்பிரயோகம் செய்ததாகவோ இதுவரை ஒருத்தரும் குற்றம் கூற முடியவில்லை தானே....

 

2- முஸ்லீம்களை கொல்வதை தடுக்கவில்லை என்பது தான் அவரின் மீதுள்ள ஒரேயொரு பழி :) :)

 

 

1-  இந்தக்கருத்து ஏற்கக்கூடியதே

 

2- தடுக்கவில்லையா?  அவரே கொன்றாரா?? :(

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிய ஜனதாவின் இந்தி முகம் எனக்குப் பிடிப்பதில்லை. அதில் ஒரு மாறுதலாக மோடி இருப்பாரோ என்ற நப்பாசை உண்டு. தவிர அவர் நிரப்பாமல் விட்டதற்குக் காரணமும் உண்டு. அந்தப் பெண் தானாகவே பேட்டியளிக்கும் வரை அப் பெண்ணின் பெயரைப் பாவிக்க அவர் விரும்பாமல் இருந்திருக்கலாம். குறித்த பெண்ணும் தான் மாமனார் வீட்டில் தான் இத்தனை காலமும் வசித்ததாகச் சொல்லி இருக்கின்றார். அதனால் தான் ஊடகங்களும் அவரை இனம் கண்டனர். ஆம் ஆத்மி ஏதோ தான் கண்டு பிடித்த இரகசியம் என்பது நகைச்சுவை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.