Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டமான் மலையக தமிழரின் தலைவனா எட்டப்பனா...???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். ஒருமித்து போராடுவது என்பதை விட, தமிழனுக்கு அப்போது ஒரு தீர்வையும் எதிர்காலச் சிந்தனையோடு கருத்தில் கொண்டு வைத்திருந்தால், இந்த நிலைக்கு நாம் போயிருக்கத் தேவையில்லை.

மேலும், வசம்பு சொன்ன, நாம் தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதைச் சொன்னேன். பொறுப்பெடுக்க வேண்டுமாக இருந்தால், இன்றைக்கு இலங்கையரசு செய்கின்ற கொலைகளுக்கு பதிலாக, அப்படிப் பார்த்தால் தமிழினம் சிங்கள மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டும்.

  • Replies 63
  • Views 9.8k
  • Created
  • Last Reply

«ôÀ àÂÅý ¾Á¢ú Áì¸Ç¢ý þý¨È ¿¢¨ÄìÌ, «ýÚ º¢í¸Çòмý §º÷óÐ ´ÕÁ¢ò¾ þÄí¨¸Â¢ý Ţξ¨Ä측¸ô §À¡Ã¡Ê §º÷ ¦À¡ý þáÁÉ¡¾ý, «Õ½¡ºÄõ §À¡ý§È¡÷ ¦À¡Úô¦ÀÎì¸ §ÅñÎÁ¡?

ஜின்னா பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா? :P :P

இந்தியாவுடன் இனைந்து பிரிட்டனை வெளியேற்றும் போது

பாகிஸ்தானையும் பிரிந்து தந்து விட்டு போ என்று சின்ன பிள்ளை போல அடம் பிடிக்கவில்லையா? :):)

தூயவன்

சிங்களத்தலைவர்கள் விட்ட பிழைகளை பல சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்களமக்களும் சுட்டிக் காட்டத் தயங்கவில்லைத் தானே??

அது போல் மலையகத் தமிழ்மக்களுக்கு நாம் விட்ட தவறுகளுக்கும் நாம் தான் பரிகாரம் தேட வேண்டும். அதைவிடுத்து எம் தவறுகளை மறைத்து அவர்களில் மட்டும் குற்றம் காண முயல்வது தவறு என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாம் தானே???????

  • கருத்துக்கள உறவுகள்
ஓட்டு வீட்டிலும் தனி கிணறுமாக வாழ்ந்த எங்களுக்கு மலையக மக்கள் கம்பரா வீட்டிலும் அட்டை கடியுலும் படும் துன்பம் தெரியாது. நாங்கள் ஒரே மொழி பேசினாலும் எப்போதும் மலையக மக்களின் தாயகம் இந்தியா தான்
  • தொடங்கியவர்

அனைவரின் கருத்துக்களிற்கும் நன்றிகள்..

இப்படிக்கு

- வன்னி மைந்தன் -

«ôÀ àÂÅý ¾Á¢ú Áì¸Ç¢ý þý¨È ¿¢¨ÄìÌ, «ýÚ º¢í¸Çòмý §º÷óÐ ´ÕÁ¢ò¾ þÄí¨¸Â¢ý Ţξ¨Ä측¸ô §À¡Ã¡Ê §º÷ ¦À¡ý þáÁÉ¡¾ý, «Õ½¡ºÄõ §À¡ý§È¡÷ ¦À¡Úô¦ÀÎì¸ §ÅñÎÁ¡?

அது உண்மை தானே தங்கள் சுகத்தை பார்த்து இன்று நடு ரோட்டில் விடப்பட்டிருக்கிரோம் அன்று எம் உரிமைகளை வென்றெடுப்பது என்பது அவர்களின் கடமையாகவிருந்தது அதை அவர்கல் செய்யவில்லையே.அப்படி செய்யாதவருக்கு இன்று ஜ.நா அகிம்சை விருதாம் எங்களை என்ன கேனைகள் எண்டு நினைக்குதுவோ சர்வதேசம் :?: :?: :?:

ஜின்னா பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா? :P :P

இந்தியாவுடன் இனைந்து பிரிட்டனை வெளியேற்றும் போது

பாகிஸ்தானையும் பிரிந்து தந்து விட்டு போ என்று சின்ன பிள்ளை போல அடம் பிடிக்கவில்லையா? :):(

அது உதாரணம் எங்கடதலைவர்மாருக்கு தமது சந்தோசமும் அதிகார ஆசையும் தான் இருந்தது.இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிக்கப்பட்டதுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்

சிங்களத்தலைவர்கள் விட்ட பிழைகளை பல சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்களமக்களும் சுட்டிக் காட்டத் தயங்கவில்லைத் தானே??

அது போல் மலையகத் தமிழ்மக்களுக்கு நாம் விட்ட தவறுகளுக்கும் நாம் தான் பரிகாரம் தேட வேண்டும். அதைவிடுத்து எம் தவறுகளை மறைத்து அவர்களில் மட்டும் குற்றம் காண முயல்வது தவறு என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாம் தானே???????

சிங்களத் தலைவர்கள் விட்ட பிழைகளை எத்தனை பேர் தட்டிக் கேட்டார்கள் என்பது எத்தனை பேர் என்பது புரியவில்லை. அப்படியிருந்தால் இந்தப் பிரச்சனையே இருக்காது அல்லவா!

மேலும், இங்கே மலையகத் தலைவர்கள் மலையக மக்களுக்கு செய்யாததைத் தானே சொல்கின்றேன். அடிக்கடி ஆறுமுகம் தொண்டமான் குடியுரிமை பெற்றதை மட்டும் தானே சொல்ல முடிந்தது. அடையாள அட்டை விடயத்தில் கூட ஜேவிபி தான் ஆதரவளித்து தான் கிடைத்தாகச் சொல்லிக் கொள்கின்றது.

மலையக மக்களுக்கு உபத்திரம் என்று எதைச் சொல்கின்றீர்? என்றும் சமுதாய உயர்ச்சி தேவை என்று சொன்னால் உபத்திரமா?

அப்படிப் பார்த்தால், இண்டைக்கு டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்துக்கு துணை போகும், அனைத்து செயல்களுக்கும் தமிழ் மக்களா பொறுப்பெடுக்க வேண்டும்.

நீங்கள் சொல்லும் உதாரணம் சரியாக இல்லை. இன்று டக்ளஸ் எந்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. ஆனால் அன்று ஜீ.ஜீ தமிழரின் தலைவனாக இருந்து கொண்டு மலையகத் தமிழரின் காலை வாரியது பற்றி தான் இங்கே பேசுகிறோம். சில முஸ்லீம் இளையர்களை அரசு பயன் படுத்துவதையும் அதனை முழு முஸ்லிம் சமூகத்தின் பிழையாக சிலர் சொல்வது வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட டக்ளஸ் உதாரணத்துக்கு பொருந்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டமான் மலையக தமிழரின் தலைவனா எட்டப்பனா...??? என்ற விடயத்தைக் கதைக்கப் போய் சிலர், மலையக மக்களுக்கு துரோகத்தை, பிறதமிழர் இழைத்ததால், அதைப் பொறுப்படுத்து, மலையகத்தைப் பற்றிக் கதைக்க கூடாது என்று சொன்னதால் தான், அதற்குத் தமிழர் பொறுப்பெடுக்க முடியாது என்ற விமர்சனம் வந்தது என்பதைச் சொல்லிக் கொள்கின்றேன்.

ஜிஜி அன்று, மலையக மக்களை மட்டுமல்ல, எம்மை காலையும் வாரியதால் தான் இந்தப் பிரச்சனை! எனவே, ஒரு குறித்த சமூதாயத்துக்கு காலை வாரினார் என்று அவரை வரையறுத்து, இதர தமிழ்மக்களின் தலையில் அவரின் பழியைப் போடமுடியாது.

மேலும் மலையகத் தலைவர்கள், அம் மக்களுக்கே நன்மை செய்யவில்லை என்று சுட்டிக் காட்டினால் அதை எவ்வாறு தப்பு என்ன சொல்லமுடியும்?

நீங்கள் சொல்லும் உதாரணம் சரியாக இல்லை. இன்று டக்ளஸ் எந்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. ஆனால் அன்று ஜீ.ஜீ தமிழரின் தலைவனாக இருந்து கொண்டு மலையகத் தமிழரின் காலை வாரியது பற்றி தான் இங்கே பேசுகிறோம். சில முஸ்லீம் இளையர்களை அரசு பயன் படுத்துவதையும் அதனை முழு முஸ்லிம் சமூகத்தின் பிழையாக சிலர் சொல்வது வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட டக்ளஸ் உதாரணத்துக்கு பொருந்தலாம்.

அப்பிடி பார்த்தால் பல தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு தமிழர்களின் தலையின் மீதே மண்ணை அள்ளி போட்டார்களே....! அதுக்கும் ஒட்டு மொத்த தமிழினதையா பொறுப்பாக்க முடியும்...!

அரசன் எவ்வளி குடிகளும் அவ்வளி... பழ மொழியாக இருக்கலாம்... அந்த வேளை பொறுப்பாக இருந்த தலைவர்கள் செய்த எல்லாமே அவர்கள்தான் பொறுப்பானவர்கள்...!

அதுபோலத்தான் 1983ம் ஆண்டு கலவரத்தில் சிங்களவரும் முஸ்லீம்களுமாக சேர்ந்து கொலை செய்து கொள்ளை அடித்தார்கள்... அதுக்காக அவர்களையா குற்றம் சொல்கிறீர்கள்...???? JR ஜேவர்த்தானா எண்ட குள்ள நரியைத்தானே சொல்கிறீர்கள்...!

ஆனா மலையக மக்களுக்கு யாராவது தலைவராக இருந்தவர் பிழை செய்தால் மட்டும் தமிழர்கள் எல்லாரும் குற்றவாளிகள்....

அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி... பழ மொழியாக இருக்கலாம்... அந்த வேளை பொறுப்பாக இருந்த தலைவர்கள் செய்த எல்லாமே அவர்கள்தான் பொறுப்பானவர்கள்...!

அதுபோலத்தான் 1983ம் ஆண்டு கலவரத்தில் சிங்களவரும் முஸ்லீம்களுமாக சேர்ந்து கொலை செய்து கொள்ளை அடித்தார்கள்... அதுக்காக அவர்களையா குற்றம் சொல்கிறீர்கள்...???? JR ஜேவர்த்தானா எண்ட குள்ள நரியைத்தானே சொல்கிறீர்கள்...!

அரசு என்பது ஏதோ வகையில் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சக்தியாகவே உள்ளது. இலங்கை வரலாற்றில் சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் கலவரங்களையும் ஒடுக்குமுறைகளயும் மேற்கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு அங்கம் தான் 83 கலவரம். இதற்கு மூல காரணமாக நீங்கள் ஒரு அரசு தலைவரையோ அல்லது சில உதிரிகளையோ காட்டுவது அபத்தமானது.

இங்கு நான் சொல்ல வந்த விடயம், எமது தலைமை அன்று பிழை விட்ட போது நாம் என்ன செய்தோம் என்பது பற்றி தான். பிழைகளை நாம் கண்டும் காணாமல் விடுவதும் மறைமுகமான அங்கீகாரமே.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்களின் கருத்துக்கு நண்பரே! சிங்கள மக்கள் சார்ந்த அரசு, என்று நீங்களும், சிங்கள மக்கள் சாராத அரசு என்று வசம்புவும் தான் சொல்கின்றீர்கள்!

அரசு என்ற ரீதியில் மக்களை கட்டி வைக்க ஜேஆர் ஆல் முடியும். அவர் செய்தாதால், அன்று அவரும் அந்தக் கலவரங்களுக்கு முக்கிய பங்காளி. அதை விட, கலவரத்தை பொறுத்து அடக்கலாம் என்று அப்போது ஜேஆர் சொன்னதாக சொல்லிக் கொள்வார்கள். எனவே ஒட்டுமொத்த சிங்கள பேரினவாதக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் சக்தி ஜேஆர் இருந்தும் கட்டுப்படுத்தாதால் அவரின் தப்புமே ஆகும்.

ஆனால் ஜிஜி செய்த தப்பு மலையத்தவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் உரியதே! தலைமைகளைத் தட்டிக் கேட்பது என்று சும்மா கதை விடுதல். உங்களில் எத்தனை பேரால் ஒரு மித்த கருத்துக்கு வர முடியும்.

இன்று, இத்தனை தமிழர் படுகொலைகள் நடக்கின்றபோதும், புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழர் படுகொலைகளை நியாயப்படுத்தும் துரோகிகள் இருக்கின்றார்கள். அதை விட ஒட்டுமொத்த தமிழ்சனமும், போரியலோடு ஒன்றுப் போகத் துணிந்திருக்கின்றார்களா?

இதை ஏன் சொல்கின்றேன் என்றால், ஜிஜி, அருணாச்சலம் செய்த பிழைகளுக்காக, மக்கள் தட்டிக் கேட்கவில்லை என்று குறை சொல்வது எல்லாம் அபத்தம். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றுக்காகவும் மக்களிடம் வாக்கெடுப்பு கேட்டுக் கொண்டு செய்தாக கொண்டார்கள்!

இன்று போல, ஒரு ஒழுங்கான தலமை, சிங்கள அரசினைத் தட்டிக் கேட்டிருந்தால், இந்த சிங்கள அடக்குமுறையாளர்களின் வாயை அடக்க, முடிந்திருக்கும்.

தாங்கள் படித்தவர்கள் என்ற தலைக்கணம். அரச உதவிக்காக, வீட்டு வாசலில் காத்திருந்தால், யார் மதிப்பார்கள்?

இன்றைக்கு தொண்டானை எவ்வாறு சாடுகின்றோமோ, அன்று அவர்கள் அப்படி இருந்தார்கள். ஆனால் அப்போது தந்தை செல்வா இருந்தார். மலையத்தில் அவ்வாறு ஒருவர் இல்லை.

தற்போது இருக்கின்றவர்களில் மனோ கணேசன் உயர்ச்சியாக இருந்தாலும், கொழும்புக்குள்ளேயே மட்டுப்பட்டிருப்பது, மலையத்துக்கு வாழ்வைத் தராது.

எம், தலமைகள் தப்புச் செய்தனர் என்று சொல்லிக் கொண்டு, மலையகத்தவர்களுக்கும், எமக்கும் இடையில் தூரத்தை அதிகரிப்பது சரியானது அல்ல. இப்போது, நாம் என்ன தப்பாகச் சொல்லி விட்டோம் என்று, எகிறிக் குதிக்கின்றீர்கள்?

அரசு என்பது ஏதோ வகையில் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சக்தியாகவே உள்ளது. இலங்கை வரலாற்றில் சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் கலவரங்களையும் ஒடுக்குமுறைகளயும் மேற்கொண்டு வந்துள்ளது. இதன் ஒரு அங்கம் தான் 83 கலவரம். இதற்கு மூல காரணமாக நீங்கள் ஒரு அரசு தலைவரையோ அல்லது சில உதிரிகளையோ காட்டுவது அபத்தமானது.

இங்கு நான் சொல்ல வந்த விடயம், எமது தலைமை அன்று பிழை விட்ட போது நாம் என்ன செய்தோம் என்பது பற்றி தான். பிழைகளை நாம் கண்டும் காணாமல் விடுவதும் மறைமுகமான அங்கீகாரமே.

எங்களது பிரச்சினைகளே தலைக்கு மேலே இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறீர்கள்... 1948ம் வருடம் சுத்ந்திரம் கிடைத்த பின்னர். 1955ம் வருடம் வரை உரிமைகளுக்கா போராடியதன் பயனாய் இனப்படுகொலைகள் ஏவிவிடப்பட்ட ஒரு இனம் எங்களுடன் சேர்ந்து வாழாத மக்களை காப்பாத்தி இருக்கவேணும் என்பது ஏற்புடையது இல்லை...!

எங்களவர்களின் பல தலைவர்களாக இருந்தவர்கள், வடக்கு கிழக்கு பகுதியில் நடந்த கொடூரங்களையே தட்டி கேட்டது கிடையாது... அரசாங்கத்தில் அவ்வளவு பயம்...! தங்களின் இண்றைய வாழ்க்கைக்காய் வாழ்ந்தவர்கள் தூரத்தில் தனித்து இருக்கும் மக்களை வாழ வைத்து இருக்க முடியுமா...??? பிறக்கும் தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கேள்வியாக்கி கொண்டு இப்போதும் அரசுக்கு கூழை கும்புடு போடுபவர்களை மட்டும் வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது... !

மலையக மக்களை காக்கும் ஈழதமிழ் மக்களின் முயற்ச்சி என்பது "தன்னாலையே நடக்க முடியாத மூஞ்சூறு விளக்குமாத்தை காவிய கதையாகத்தான் முடிந்திருக்கும்....!" அதையே எங்களை நாங்கள் ஈழத்தில் நிலைப்படுத்திய பின்னர் கேட்பது, குரல் கொடுப்பது என்பது வேறு...!

உதாரணத்துக்கு இந்தியாவில் இருக்கும் தமிழர்கள், தாங்கள் என்பதால் ஈழதமிழரை பற்றி அக்கறை காட்டும் நிலை...! உலகமுஸ்லீம் நாடுகள் முஸ்லீம்களுக்காக குடுக்கும் குரல் போல வலுவாக இருக்க வேணும்...

அப்படி இல்லாமல் சிங்களவனின் அனுமதி இல்லாமல் தமிழந்தான் மலயக மக்களை கெடுத்தான் என்பதெல்லாம் ஏற்புடையதாக இல்லை...! அப்படி நீங்கள் சொல்வது போல பார்த்தால். மலையக மக்கள் சிங்களவர்களைத்தான் மதித்து இருக்க கூடாது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.