Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி உதவியை கனடா அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது - இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

1993951919s.jpg

நிதி உதவியை கனடா அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது - இலங்கை
நிதி உதவிகளை கனேடிய அரசாங்கம் அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவிகளை கனடா ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு தன்னார்வ அடிப்படையில் வழங்கும் நிதி உதவிகளை ரத்து செய்வது கனடா அறிவித்துள்ளது. 

இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாமையே இவ்வாறு நிதி உதவிகள் ஒதுக்கப்படுவதற்கான காரணம் என கனடா குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில், கனடாவின் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களையே பாதிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

அரசியல் பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றின் மூலமே சுமூகமான தீர்வு காணப்பட முடியும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

பண பலத்தைப் பயன்படுத்தி நிறுவனமொன்றின் அல்லது அமைப்பு ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் முனைப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கனடாவின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

தமிழர் தேச அபிவிருத்திக்கு 66 வருடங்களாக நிதி கொடுக்காமல் ஏமாற்றுவது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

இதோ பார்டா. ஜப்பான் ரோக்கியா மாநாட்டை குழப்பி.. புலிகளுக்கூடாக தமிழ் மக்களுக்கு சர்வதேச நிதி போகக் கூடாது என்று செயற்பட்டவை.. இப்ப என்னென்று ஒப்பாரி வைக்கினமென்று.

 

காலமப்பு.. காலம். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சுனாமிக்கு வெளிநாடுகள் கொடுத்த பணம் புலிகளுக்கு போகிறது என்று வழக்கு போட்டு (விமல் வீரவன்சவை வைத்து வழக்கு போடப்பட்டது) பின்னர் தங்களது நீதிபதியை வைத்து வழக்கை வென்று தமிழ் மக்களின் வெந்த புண்ணில் வேல் பாச்சியவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். மனிதாபிமானம் தெரியாதவர்கள் மனிதாபிமானத்தை ஏனையவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது எப்படி?
 
புலிகள் ஏதோ தம்மால் இயன்றதை தெற்கு மக்களுக்கு கொடுத்து அனுப்பியதையும் இங்கு நினைவு கூர வேண்டும். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சுனாமிக்கு வெளிநாடுகள் கொடுத்த பணம் புலிகளுக்கு போகிறது என்று வழக்கு போட்டு (விமல் வீரவன்சவை வைத்து வழக்கு போடப்பட்டது) பின்னர் தங்களது நீதிபதியை வைத்து வழக்கை வென்று தமிழ் மக்களின் வெந்த புண்ணில் வேல் பாச்சியவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். மனிதாபிமானம் தெரியாதவர்கள் மனிதாபிமானத்தை ஏனையவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது எப்படி?
 
புலிகள் ஏதோ தம்மால் இயன்றதை தெற்கு மக்களுக்கு கொடுத்து அனுப்பியதையும் இங்கு நினைவு கூர வேண்டும். 

 

 

உதுகளெல்லாம் இஞ்சை இருக்கிற ஒருசில ஜாம்பவான்களுக்கு தெரியாது....தெரிஞ்சாலும் வேறை மீனிங்கிலை கருத்து வைச்சிருப்பினம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், 2009 இறுதி யுத்தத்தில் உணவையும், மருந்துப் பொருட்களையும் சிங்களப் பயங்கரவாதம் அன்று ஆயுதமாகப் பாவித்தது. வேண்டுமென்றே அகப்பட்ட சனத்தின் எண்ணிக்கையை குறைத்து 70,000 என்று சர்வதேசத்திற்கு திருப்பத் திருப்பக் கூறப்பட்டது. ஆக, இந்த 70,000 பேருக்கு மட்டுமே போதுமான உணவையும் மருந்தையும் (அதுகூட கால்வயிறு அரை வயிறு நிரப்ப மட்டும் போதுமானது) விருப்பமில்லாமல் அனுப்பி வைத்தது. ஆனால் அங்கே அகப்பட்டிருந்த மக்களின் எண்ணிக்கை 420,000.

 

தனது தாக்குதலில் காயப்பட்டவர்கள் இறக்கவேண்டும் என்பதற்காகவே அத்தியாவசிய மருந்துக்களைக் கூட அனுப்பி வைக்க மறுத்தது. இது அங்கு பணியாற்றிய மருத்துவர்களால் சர்வதேசத்திற்கு விலாவாரியாக எடுத்துச் சொல்லப்பட்டது.

 

தனக்குத் தேவையானபோது உணவையும் மருந்தையும் ஆயுதமாகப் பாவித்து லட்சக்கணக்கில் மக்களைக் கொள்ளலாம், ஆனால் தனது குற்றங்களுக்குத் தண்டனையாக ஒரு நாடு தனது உதவியை நிறுத்தினால் மட்டும் அரசியலா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.