Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று நடத்தியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல்தமிழ்ச்செய்தியாளா் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து

uj-memo1_CI.jpg



தடைகளை தாண்டி யாழ்.பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று நடத்தியுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரை நாலாம் மாடிக்கு அழைப்பதன் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் நிகழ்வினை தடுத்து நிறுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் பிசுபிசுத்துப்போயுள்ளது.

 

இன்று காலை 11.15மணியளவில் ஒன்று குவிந்த மாணவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் கைலாசபதி அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக அனைவரும் முள்ளிவாய்க்காலில் பலியாகிய அனைத்து உறவுகளிற்கும் மௌன அஞ்சலியை செலுத்தியதுடன் தொடர்ந்து சுடரேற்றி பிரார்த்தித்தனர்.அதன் பின்னராக அனைவரும் அமைதியாக கலைந்து சென்றிருந்தனர்.

 



முன்னதாக கைலாசபதி அரங்கை ஒதுக்கி வழங்குவதில் இழுபறி நிர்வாகத்திற்கும் ஏற்பாட்டாளர்களிற்குமிடையே நிலவிய போதும் பின்னர் சுமுகநிலை ஏற்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தை அண்டிய சூழலெங்கும் படையினர் குவிக்கப்பட்டிருந்த போதும் அது எதனையும் பொருட்படுத்தாது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107205/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
photo-%282%29.jpg

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் 11 மணியளவில் அஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.  

 

2009 மே 18 இறுதிப்போரில் உயிர்நீத்த மக்களின் ஆத்ம சாந்தி வேண்டிபல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தனர்.

 

இராணுவம் மற்றும் பல தரப்பினரின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏராளமான மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து நினைவுச்சுடர் ஏற்றி அமைதியான முறையில் அஞ்சலித்தனர். 

 

DSCF9803%20copy.jpg

 

photo-%282%29.jpg

 

44%20copy.jpg

 

DSCF9804%20copy.jpg

 

DSCF9806%20copy.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=684703029221535761#sthash.SbTZO4Tk.dpuf
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 2014 -
140521120832_jaffna_university_protest_5

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு

இலங்கையின் வடக்கே இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நினைவஞ்சலி செய்வதைத் தடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று திறக்கப்பட்டபோது, குறிப்பிட்ட அஞ்சலி நிகழ்வு அங்கு நடத்தப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை, செவ்வாயன்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் இராசகுமாரன் பலாலி இராணுவ தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகின்றது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதென்பது பயங்கரவாதிகளை நினைகூவர்வதே ஆகும் என்று அவருக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும், அதற்கு அங்கு கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்வதற்கு தங்களுக்கு உரிமையிருப்பதாக அவர் பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் செவ்வாய்க்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயரையும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளின் செய்தியாளர்கள் உட்பட சில செய்தியாளர்களின் பெயர்களையும் குறிப்பிடப்பட்டு, அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வீசப்பட்டிருந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரனை கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவுக்கு புதனன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடிய மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுதிரி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதேநேரம் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்து, வியாழன் முதல் இரண்டு தினங்கள் அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக மாணவர்கள் அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/05/140521_jaffnauniprotest.shtml

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே

கவனமாக  இருங்கள்

'இறுதி எச்சரிக்கை, உலகிலிருந்து விடுதலை பெற்று விடுவீர்கள்" :பல்கலைக்குள் அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மீண்டும் அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று threat_2.pngபல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
அத்துடன் அந்த துண்டுப்பிரசுரங்களில் குடாநாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் பத்திரிகையாளர்கள் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பல்கலைக்கழக வாளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் போது காலை முதல் மதியம் வரை சுமார் 15 புலனாய்வாளர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்டனர் என்றும் என்ன காரணத்துக்காக பூசைகள் நடைபெறுகின்றன என்பது குறித்த விவரங்களை அவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
கும்பாபிஷேகம் முடிவடைந்த பின்னர் அவர்களும் வெளியேறினர். அதன்பின்னர் குறித்த துண்டுப்பிரசுரங்கள் குறித்துத் தெரியவந்தது என்று பல்கலைக்கழகத் தரப்பு தெரிவித்துள்ளது.
 
இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் தேசம் காக்கும் படை வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த துண்டுப்பிரசுரத்தில்,
 
'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுவோர் தண்டிக்கப்படவுள்ளனர். பயங்கரவாதம் தோற்கடிக் கப்பட்ட பின்னர் அந்தப் பயங்கர வாதத்தை யாழ்.பல்கலைக்கழகம் ஊடாக வளர்த்தெடுக்க முயற்சி செய்து வருகின்றனர். 
 
இவ்வாறு முயற்சி செய்யும் தேச விரோத சக்திகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவர்களில் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள், மாணவர்கள் ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து சில பத்திரிகையாளர்களும் செயற்பட்டு வருவதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. 
 
இவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை கூறியிருந்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. தொடர்ந்தும் மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் சேர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை ஆகும். இவர்கள் இனியும் திருந்தாவிட்டால் இறுதித் தீர்ப்பு மரணதண்டனையே. சிலருக்கு இறுதி நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. கடந்த எச்சரிக்கைகளைப் போல் இதனையும் சாதாரணமாகக் கருதிவிடவேண்டாம். உங்களுக்கு இவ்வுலகில் இருந்து விடுதலை நிச்சயம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் துண்டுப்பிரசுரங்களால் பல்கலைக்கழகத்தின் இயல்புநிலை மாறியுள்ளது என்றும்  மாணவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது.
 virakesari.lk

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைக்கழகம் என்பது தனியே பட்டப்படிப்புக்கான ஒரு இடம் அல்ல அது என்றும் தமிழ் சமூகத்தின் மீதான அக்கறையும் பொறுப்பும் தமிழ் சமூகத்தின் எண்ணங்களை பலமாக பிரதிபலிக்கும் அறிவுசார் இடமாகவே இருந்து வந்திருக்கிறது அப்பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்

என்னதான் வெளிநாட்டில் இருந்து கொண்டு சிறி லண்கன்ஸ் வாயால் வெசாக் பந்தல் போட்டாலும் ஊர் மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு எழுச்சி என்பது ஈழத்தமிழ் மக்களின் உணர்ச்சிசார்ந்தது.

இதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகக் கடினமான விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே:

தமிழரின் தற்போதைய நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லுவதற்கு பல தடைகள் இருக்கின்றது. அவற்றில் சிலவற்றையாவது பல்கலைகழக மாணவர்களும் அதன் சமூகமும் செய்வது காலத்தின் தேவை.

அதேநேரம், வழமைபோல் அவர்களின் முயற்சியில் மற்றவர்கள் குளிர் காயாமல் தங்கள் பணிகளையும் செய்யவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.