Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரங்களுக்காக சிறப்பு பிரதிநிதியை நியமிக்க மோடி முடிவு

Featured Replies

அண்ணை மன்னிகோனும் தமிழர் எதிர்க்காத விசையம் ஏதும் இருக்கோ அபிவிருத்தி விடையத்தில்.பி.கு-எனக்கு இந்த அனுவால் வரும் பாதிப்பு பற்றி தொியாது.

. டெல்லி: இலங்கையின் திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைக்கும் அனல்மின் நிலைய திட்டத்தைக் காரணம் காட்டி கடந்த 9 ஆண்டுகளாக அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாய்நிலத்திலேயே இன்னமும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகிற கொடுமை நீடித்து வருகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் தமிழர்களுக்கான தீர்வு எத்தகையதாகவிருந்தாலும் அது இந்தியாவின் மூலமாகத்தான் கிடைக்கும்.

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

முன்னரும் இந்த கட்சி ஆட்சியில் இருந்தது, ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவிலையே?

மோடி புதியவர், புதிதாக எதுவும் நடக்கும் சாத்தியம் இருக்கிறது.

ஆனால் காலம் போக வேறு பிரச்சினைகள் வரும், அவை முன்னணி பெறும் சாத்தியங்கள் உள்ளது அல்லவா?

அதே வேளை, அமெரிக்காவின் பயணத்தடை, பொருளாதார முடக்கு, போர்க்குற்ற விசாரணைகள் போன்றவை தீர்வுக்கு வழிவகுக்காதா?

அமெரிக்கத் தடைகள் இவையெல்லாம் இந்திய அனுசரணையுடன் நடந்தால்தான் அது சிறிலங்காவை தீர்வை நோக்கித் தள்ளும். கடந்த காலங்களிலான இந்திய ஆதிக்கம் மட்டுமே சிறிலங்கா மீது வெற்றி பெற்றிருக்கிறது. அதனை அழுத்தம் என்று கூட சொல்ல முடியாத ஒரு அணுகுமுறை.

மோடியின் 'வெளியுறவு' ஆலோசகராக. "அமைதிப்படை அதிகாரி" சுப்பிரமணியம் ஜெய்சங்கர்? 
 
 Published: Saturday, May 31, 2014, 13:48 [iST]
 
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பாரத்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. மோடியின் 'வெளியுறவு' ஆலோசகராக. இந்நிலையில் ஒட்டுமொத்த வெளியுறவு விவகாரங்களுக்கு என தனியே ஒரு ஆலோசகரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருக்கும் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை மோடி தமது ஆலோசகராக நியமிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன டெல்லி தகவல்கள். சுப்பிரமணியன் ஜெய்சங்கர் டெல்லியில் பிறந்த ஜெய்சங்கரின் தந்தை மத்திய அரசு ஊழியரும் அரசியல் விமர்சகருமான கே.சுப்பிரமணியத்தின் மகன். அவரது சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியன் வரலாற்று ஆய்வாளர். 1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையில் இணைந்தார் ஜெய்சங்கர் சுப்பிரமணியம்.. 1979 ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை சோவியன் யூனியனுக்கான இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதிக்கு சிறப்பு உதவியாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து 1989- 90ஆம் ஆண்டு இலங்கையில் நிலை கொண்ட இந்திய அமைதிப்படயின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அதன் பின்னர் ஜப்பான், சீனா நாடுகளுக்கான தூதராக இருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.