Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுப்பு மூலை: விக்கியும் கம்பவாருதியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: விக்கியும் கம்பவாருதியும்

நந்தி முனி

வன்னியப்பு வேட்டியை லோன்றியில் மினுக்கக் கொடுத்துவிட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பேப்பர் மாமா அந்தப் பக்கமாக வந்தார். பேப்பர் மாமா பல பத்திரிகைகளில் றிப்போட்டராக இருக்கிறார். ஒரு பழுத்த ஊடகவியலாளர். அப்புவைக் கண்டதும் அவர் சைக்கிளை நிறுத்தினார்.

பேப்பர் மாமா: என்னப்பு உதில குந்திக்கொண்டிருக்கிறியள்?

அப்பு: வேட்டியை அயர்ன் பண்ண வந்தனான்.

பேப்பர் மாமா: வீட்டில பேரப்பிள்ளையள் அயர்ன் பண்ணாதே?

அப்பு: செய்யலாம் தான். ஆனா கறன்ற் பில் எகிறுதே. ஒவ்வொரு 30 யுனிற்றுக்குப் பிறகு கறன்ற் பில் ரொக்கற்றைப் போல ஏறுதே? அதைவிட இஞ்ச அயர்ன் பண்ணலாம்.

பேப்பர் மாமா: அதுவும் சரிதான்... வேற என்னப்பு புதினம்?

அப்பு: புதினம் என்ன நீங்கள் தான் சொல்லோணும். நீங்கள் தான் புதினக்காரர்... நேற்று என்ர பேரன் சொன்னான்... ஏதோ இணையத் தளத்தில கம்பவாருதி விக்கியரைப் போட்டுத் தாக்கியிருக்கிறாராம்?.

பேப்பர் மாமா: ஓமப்பு. இப்ப அதுதான் சூடான செய்தி.

அப்பு: என்ன பிரச்சினை... அவர் தானே முந்தி விக்கியரை வா வா எண்டு அழைச்சவர்..? இப்ப ஏன் எதிராய் திரும்பினவர்..?

பேப்பர் மாமா: எல்லாம் அரசியல் தான் அப்பு. அந்த இணையத் தளம் நடத்திறவர் முன்னம் முதலமைச்சரா வாறதுக்கு நிண்டவர். ஆனா சம்பந்தர் அதுக்கு இடம்குடுக்கேல்ல. இப்ப வாற எலைக்சனில எம்.பி.யா வாறதுக்கு விரும்பிறார் எண்டொரு கதையிருக்கு.

அப்பு: அப்பிடியெண்டால் உப்பிடிப்பட்ட விசயங்கள போடக்கூடாதே? விக்கியைத் தாக்கினா அது சம்பந்தரையும் தாக்கின மாதிரித்தானே. சம்பந்தன்ர தெரிவு தானே அவர்?

பேப்பர் மாமா: ஓமப்பு. அது தான் இப்ப கதைக்கினம். இனி அவருக்கு எம்.பி. சீற்றும் குடுக்கமாட்டினம் எண்டு... சில நேரம் தனக்குத் தரமாட்டாங்கள் எண்டு தெரிஞ்சப்பிறகுதான் இப்பிடியொரு தாக்குதலை தொடங்கினவரோ தெரியாது.

அப்பு: அவருக்கு மட்டுமில்ல. அவற்ர மச்சான்... அது தான் பேப்பர் முதலாளி.. அவருக்கும் இந்தமுறை குடுக்கமாட்டாங்கள் எண்டொரு கேள்வி?

பேப்பர் மாமா: ஓமப்பு நானும் கேள்விப்பட்டனான். எல்லாரும் ஊடகங்கள வைச்சுக்கொண்டு பேரம் பேசப் பாக்கினம். சரவணா நினைக்கிறார் யாழ்ப்பாணத்தாரின்ர அபிப்பிராயத்த தன்ர பேப்பர் தான் தீர்மானிக்கிறது எண்டு. ஆன விக்கியற்ர தெரிவில அது பொய்யாப் போச்சு. இப்ப மச்சான்காரர் இணையத் தளத்தில சர்ச்சையக் கிளப்பியிருக்கிறார்.

அப்பு: ஊடகம் எண்டா சர்ச்சைய கிளப்பிறதுதானே? உந்தக் கடிதத்தால அவற்ர இணையத்தின்ர ஓட்டம் கூடியிருக்கே?

பேப்பர் மாமா: கூடும் தானே... பிரபலமான ஒருவரை தாக்கிறது பிரபலமடைய இன்னொரு வழி.

அப்பு: சரியாச் சொன்னீங்கள். ஆனாப் பாருங்கோ. நேற்றுப் பேரன் வாசித்துக் காட்டினவன். கம்பவாருதி கேட்ட கேள்விகள் சரியோ பிழையோ..?

பேப்பர் மாமா: சரி அப்பு. அவ்வளவும் சரி. ஆனா ஆர் கேட்டதெண்டதுதான் இப்ப பிரச்சினை. அந்தக் கடிதத்தைப் பற்றிக் கதைக்கிற ஆருமே அதிலயிருக்கிறத பற்றிக் கதைக்கேல்ல. அதிலயிருக்கிற கேள்வியள் எல்லாம் சரி எண்டுதான் சொல்லினம். ஆனா கேட்டவரிலதான் பிழை சொல்லினம்.

அப்பு: என்ன பிழை?

பேப்பர் மாமா: அவர் ரண்டு மூண்டு வருசத்துக்கு முந்தி ஒரு கோயில் கட்டிறதுக்கு தேவானந்தாவிட்ட ஐஞ்சு லட்சம் வாங்கினவர். அந்த நன்றிக் கடனத் தீர்க்க பேப்பர்களில முழுப்பக்க விளம்பரம் போட்டவர். அதில தேவானந்தாவை போற்றிப் புகழ்ந்திருந்தவர்.

அப்பு: அப்பிடியே!

பேப்பர் மாமா: ஆனாப்பு, அதுக்குப் பிறகுதான் அவர் விக்கியர அரசியலுக்க கொண்டு வர பாடுபட்டவர்.

அப்பு: அப்ப உதுக்கு என்ன அர்த்தம்?

பேப்பர் மாமா: அவருக்கெண்டு ஒரு அரசியல் இருக்கு. அது ராமாயண அரசியல். தன்ர கழகத்துக்குத் தேவையெண்டா அவர் போற்றுவார். எதிராப் போனா தூற்றுவார். முந்தி யாழ்ப்பாணத்தில இருக்கேக்க அவர் புதுவை இரத்தினதுரையோட நல்ல ஒட்டு. பிறகு சண்டையும் பெருத்திட்டு. அவங்களோடையும் ஏதோ பிரச்சினையாக்கும். அப்பிடியே வெளிக்கிட்டுப் போய் கொழும்பில வேர் விட்டிட்டார். இப்ப அவர் கொழும்பு வாசி... கோயிலும் கழகமுமா எல்லாவிதமான ஐஸ்வரியங்களோடும் இருக்கிறார்.

அப்பு: அப்ப விக்கியரோட என்ன கொழுவல்?

பேப்பர் மாமா: அது முள்ளிவாய்க்காலோட தொடங்குது. செத்த சனத்துக்கு கம்பன் விழாவில அஞ்சலி செலுத்த வேணுமெண்டு விக்கி கேட்டிருக்கிறார். கம்பவாருதி மறுத்திட்டார். அதால விக்கியர் கழகப் பொறுப்பில இருந்து விலகிட்டார். அதுக்கெல்லாம் சேர்த்துதான் இப்ப கம்பவாருதி பழிவாங்கியிருக்கிறார்.

அப்பு: அதுக்குப் பிறகுதானே விக்கியரை அரசியலுக்கு வாவெண்டு கடிதமெழுதினவர்?

பேப்பர் மாமா: எழுதினவர் தான். ஆனா விக்கியர் முதலமைச்சராக வந்த பிறகு கம்பவாருதி தன்ர விழாக்களுக்கு அழைப்பு விடுத்தவராம். இவர் போகேல்லயாம். அந்தக் கறள் தானாம்.

அப்பு: எந்தக் கறளாய் இருந்தாலும் விக்கியருக்கு சரியான அடி.... கம்பவாருதி கேட்கிறதும் நியாயம் தானே. எட்டு மாசமா என்னத்த கிளிச்சிருக்கினம்?

பேப்பர் மாமா: நியாயமான கேள்வியள் தான். ஆனா அதுக்கு விக்கிய மட்டும் தாக்கேலாது. சம்பந்தனும், சுமந்திரனும்தான் அவர உதுக்குள்ள கொண்டு வந்தது. அவருக்கு அரசியல் தெரியாது. அறநெறியள் தான் தெரியும். மாகாண சபையை வைச்சு ஏதாவது நல்லது செய்யோணும் எண்டுதான் நினைச்சு வந்தவர்.

அப்பு: அவர் சட்டம் படிச்சவர் தானே. உதுக்குள்ள ஒண்டும் இல்லயெண்டு அவருக்கு விளங்காதே.

பேப்பர் மாமா: இல்லை அப்பு. அவருக்கு விளங்கேல்ல. விளங்கியிருந்தா ஒரு நீதிபதியா இருந்துபோட்டு முதலமைச்சரா வந்திருக்கமாட்டார்.

அப்பு: ஏன் அப்பிடி? ஒரு நீதிபதி முதலமைச்சரா வரக்கூடாதே?.

பேப்பர் மாமா: வரேலாது அப்பு. ஏனெண்டா பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு கீழ நீதிபதியா இருந்த ஒருவர் தமிழற்ர அரசியலை கொண்டு நடத்தேலாது.... பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழருக்கு மட்டுமில்ல மனுச குலத்துக்கே எதிரானது. அத ஏற்றுக்கொண்டு நீதிபதியாகி, கடைசியில பிரதம நீதியரசராயும் இருந்தவர். அங்கேயே பிழைக்குது. பயங்கரவாதத் தடைச் சட்டமும் தமிழ்ச் சனத்துக்கான நீதியும் ஒண்டாய் இருக்கேலுமே?

அப்பு: சரியாய் சொன்னீங்கள். அடிப்படையே பிழை. நீதியில்லாத ஒரு சட்ட அமைப்புக்குள்ள எப்பிடி நீதிபதியாக இருக்கேலும்? பிறகு எப்பிடி தமிழருக்கு நீதி கேட்கேலும்?

பேப்பர் மாமா: பயங்கரவாதத் தடைச் சட்டம் சரியெண்டா 13ஆவது திருத்தமும் சரிதான். 13ஆவது திருத்தம் சரியெண்டா இணக்க அரசியல் தான் செய்யோணும். எதிர்ப்பு அரசியல் செய்யேலாது. உவையள் தேர்தலில வெல்லிறதுக்கு எதிர்ப்பு அரசியல் கதைச்சவ. வெண்ட கையோட இணக்க அரசியலுக்குப் போனவை. விக்கியர் பதவியேற்றது மகிந்தவுக்கு முன்னுக்கு. அங்கயிருந்து தொடங்கி இண்டைக்கு வரையிலும் அரசாங்கத்தோட ஏதோவொரு கட்டம் வரைக்கும் இணங்கிப் போகத்தான் முயற்சிக்கினம். ஆனா அரசாங்கம் தான் அதுக்குத் தயாரில்ல. அவங்களப் பொறுத்தவரை இணக்க அரசியல் எண்டது சரணாகதி அரசியல்தான். மாகாண சபையில கொஞ்சப் பேர் எதிர்ப்பு அரசியல் நடத்தினம். கொஞ்சப் பேர் இணக்க அரசியல் நடத்தினம். பிறகு எப்பிடி மாகாண சபை ஓடும்?. அது தான் பிரச்சினை. சம்பந்தரும், சுமந்திரனும் விக்கியரும் சேர்ந்து தொடக்கிவைச்ச இணக்க அரசியல் தோத்துப்போச்சு. அதுக்கு விக்கிய மட்டும் குற்றம் சொல்லேலாது. அவருக்கு அரசியல் விளங்காது. விளங்காத விசயத்தில இறங்கினதுதான் அவற்ர பிழை. எல்லாம் விளங்கின சம்பந்தர் அவரைக் கொண்டு வந்ததுதான் பெரிய பிழை.

அப்பு: உப்பிடியெல்லாம் வருமெண்டு சம்பந்தருக்குத் தெரியாதே?. விக்கிக்குத்தான் அரசியல் விளங்காது. சம்பந்தருக்கு விளங்கும் தானே? எந்தத் துணிச்சலில மாகாண சபையை கையில எடுத்தவை?

பேப்பர் மாமா: இந்தியாவும், அமெரிக்காவும் குடுத்த துணிச்சல் தான்.

அப்பு: உந்த வெளிநாடுகள் அரசாங்கத்தை கேட்கலாம் தானே?

பேப்பர் மாமா: கேட்டவைதான். எல்லாத் தூதுவர்மாரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து விக்கியரை தூக்கு தூக்கெண்டு தூக்கி பப்பாவில ஏத்தினவை. ஆன அரசாங்கம் மசியேல்ல. இலங்கையில அரசாங்கம் தமிழருக்கு ரண்டு தெரிவைத்தான் விட்டு வைச்சிருக்கு. ஒண்டு தேவானந்தா செய்யிற மாதிரி முழு இணக்க அரசியல். மற்றது முழு எதிர்ப்பு அரசியல். ரண்டுக்கும் நடுவில ஒண்டும் இல்ல. ஆனா விக்கியர் ரண்டுக்கும் நடுவிலதான் நிற்கிறார். அதுதான் அடிவாங்கிறார்.

அப்பு: அப்ப இனி எல்லாரும் அடிக்கத் தொடங்கிவினம். உப்பிடியே போனால் மனுசன் தாக்குப் பிடிக்குமே?

பேப்பர் மாமா: சம்பந்தர் எதையாவது செய்வார். ஏனெண்டா விக்கியரைத் தொட்டுக் கொண்டு இன்னும் கொஞ்ச கொழும்புத் தமிழர் கூட்டமைப்புக்குள்ள இறங்கப்போயினம். விக்கியர் தாக்குப்பிடிக்கேலாட்டி அவயளை இறங்கேலாது.

அப்பு: வாற இலக்சனில சுமந்திரன் இறங்கிறாராமே?

பேப்பர் மாமா: ஓம் இறங்கத்தான் போறார். ஆனா கடுமையா கஷ்டப்படோனும். விக்கியர் தாக்குப்பிடிக்காட்டி சுமந்திரன்ர நிலைமை இன்னும் கஷ்டமாயிடும்.

அப்பு: அப்ப கம்பவாருதி ஒரு நல்ல கலகத்தத்தான் தொடங்கியிருக்கிறார் எண்டிறியள்?

பேப்பர் மாமா: பாப்பம். பொறுத்திருந்து பாப்பம்.... சரி அப்பு நான் வெளிக்கிடப் போறன். உங்கட வேட்டி வேலையும் முடிஞ்சுதுபோல...

பேப்பர் மாமா சைக்கிள உழக்கத் தொடங்கினார்.

09-06-2014

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=00ab998c-28cf-41d1-86ac-d9e0ed1d5535

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலையும் சும்மா இல்ல. விதைக்க வேண்டியவற்றை நாசூக்கா விதைக்கினம்.

 

குத்தியர் கடந்த 25 வருசமா சிங்களவனோடையே ஒட்டி இருந்து செய்து வாற சரணாகதி சோர அரசியலுக்கு இணக்க அரசியல் என்று பெயர் வைச்சிருக்கினம்.

 

இணக்க அரசியல் என்பது இரு தரப்பும்... குறைந்தது.. ஏதோ ஒன்றை இட்டு இணக்கிச் செயற்படுதல். குத்தியருக்கு கொள்கையே இல்ல. அதில எதை சிங்களவன் இணங்க.. இணைந்து செயற்பட..!!!  போக்கையா.. போய் வேற அலுவல் இருந்தால் பாருங்க.

 

குடும்பியருக்கும்.. குத்தியருக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. ஒன்று இராமாயணத்தின் பெயரால் சொந்த வயிறு வளர்க்க சோரம் போகுது. இன்னொன்று தமிழ் மக்களின் துயரின் பெயரால்.. சொந்த வயிறு வளர்க்க சோரம் போகுது. அவ்வளவும் தான். :icon_idea::)


விபரச்சாரி.. உடலுறவின் மூலம் சொந்த வயிறு வளர்க்க சோரம் போறாள். :lol:

Edited by nedukkalapoovan

வித்தி ,ஜெயராஜ் ,ஐங்கரநேசன் என்று ஒன்றாக படித்தவர்கள் தான் இப்போ நாட்டில நாயகர்கள் போலிருக்கு . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.