Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெலிகாப்டர் ஊழல்.. ஆளுநர்கள் எம்.கே. நாராயணன், வான்சூவும் சிக்கினர்!

Featured Replies

  • தொடங்கியவர்

ராஜினாமா செய்ய நாகாலாந்து ஆளுநர் விருப்பம்! கால அவகாசம் கோருகிறார் எம்.கே. நாராயணன்

நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். அதே நேரத்தில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் தமது பதவியை ராஜினாமா செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்த நிலையில் பல மாநில ஆளுநர்கள் பதவி விலக வற்புறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் ஜோஷி, சத்தீஸ்கரின் சேகர் தத் உள்ளிட்டோர் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

 

அவகாசம் கேட்கும் நாரயணன்

 

மேலும் மேற்கு வங்க ஆளுநராக உள்ள எம்.கே. நாராயணன் தாம் பதவி விலகுவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/nagaland-governor-willing-quit-bengals-mk-narayanan-seeks-time-204171.html#slide724879

Edited by பகலவன்

இது ஒன்று போதும் யாருக்கு பக்கவாதம்..மனித குணம் நிரம்பி வழிகிறது என்பதை காண :)

 

 

1200 மில்லியன் மக்களின் ராஜகுமாரன் என்பதால் தான் சிங்கள சக்கரவர்த்திகளும் இந்தியாவுக்கு சலாம் போடுகிறார்கள் (விருப்பம் இல்லாவிட்டாலும்) :)

 

நாமும் உயிர் பிச்சை கேட்டோம்...மறந்து விட்டதா??? :)

 

 

2000 இலேயே அவர்கள் உறும...நாங்கள் உயிராய்தம் ஏந்தி பிடித்ததையும் விட்டு விட்டு வரவேண்டி இருந்தது... :)

 

 

இது ஒன்று போதும் யாருக்கு பக்கவாதம்..மனித குணம் நிரம்பி வழிகிறது என்பதை காண  :)

  = தொப்பி அளவானவர்கள் தொப்பியை மாட்டி கொள்ளலாம் ராசா  :D 

 

1200 மில்லியன் மக்களின் ராஜகுமாரன் என்பதால் தான் சிங்கள சக்கரவர்த்திகளும் இந்தியாவுக்கு சலாம் போடுகிறார்கள் (விருப்பம் இல்லாவிட்டாலும்)  :)

 = புலிக்கு அடிக்கிறதெண்டால் சிங்களவன் பேய்க்கும் சலாம் போடுவான் ராசா  :D 

 

நாமும் உயிர் பிச்சை கேட்டோம்...மறந்து விட்டதா???  :)

 = புலி யாரிடமும் உயிர்பிச்சை கேட்டதாக வரலாறு இல்லை ராசா. நீங்கள் கொடுத்த சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட இரசாயன எரி குண்டுகளால் காயம் அடைந்த மக்களை அப்புறப்படுத்தி சிகிச்சை செய்ய மனிதாபிமான போர்நிறுத்தம் தான் கேட்டார்கள் ராசா.  

 

2000 இலேயே அவர்கள் உறும...நாங்கள் உயிராய்தம் ஏந்தி பிடித்ததையும் விட்டு விட்டு வரவேண்டி இருந்தது...  :)

 = ஆமாம். அன்று நீங்கள் உறுமாவிட்டால் யாழ்ப்பாணம் புலிகளிடம் விழுந்திருக்கும். தமிழீழம் புலிகளின் அடியிலேயே கிடைத்திருக்கும். மொத்த சிங்கள ராணுவமும் துண்டை காணம் துணியை காணம் எண்டு ஒட்டினாங்கள் ராசா. எனது வவுனியாவிலிருந்த ஒரு உறவினர் ஓடி வந்த பலருக்கு மாறுடை கொடுத்து பஸ் காசும் கொடுத்து பஸ்ஸிலை ஏற்றி தெற்குக்கு அனுப்பி வைத்தவர். அடியென்றால் அப்படியொரு அடி. பொறி கலங்கி திக்கு திசை தெரியாமல் ஒட்டினாங்கள்  

 

P.S: கோவணமும் இல்லாமல் சேற்றில் மீன் பிடிக்கும் நிலையில் எங்கள் தலைவர் இல்லை ராசா. அது தலைவரின் உடல் அல்ல என்பது சட்ட மருத்துவம் படித்தவர்களுக்கு தெரியும். சிங்கலவன் ஒரு போலி உடலை தயார் செய்து கூவினால் அதை நம்பி கூவுற நிலையிலா எங்கள் அறிவு இருக்கு ராசா?  

 

    " தலைகள் குனியும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா " 

Edited by seeman

இது ஒன்று போதும் யாருக்கு பக்கவாதம்..மனித குணம் நிரம்பி வழிகிறது என்பதை காண :)

1200 மில்லியன் மக்களின் ராஜகுமாரன் என்பதால் தான் சிங்கள சக்கரவர்த்திகளும் இந்தியாவுக்கு சலாம் போடுகிறார்கள் (விருப்பம் இல்லாவிட்டாலும்) :)

நாமும் உயிர் பிச்சை கேட்டோம்...மறந்து விட்டதா??? :)

2000 இலேயே அவர்கள் உறும...நாங்கள் உயிராய்தம் ஏந்தி பிடித்ததையும் விட்டு விட்டு வரவேண்டி இருந்தது... :)

நாங்கள் எல்லாம் நேரில் பார்த்தனாங்கள் இந்த உறுமல் வறுவல்களை.

சந்தியில எங்கேயோ கிரனேட் வெடிக்க அடுத்த அரை மணித்தியாலத்திற்கு ரோட்டு புழுதியில் தொப்பியை பிடித்து கொண்டு உருண்டு உருண்டு வான் வெடி வைப்பது தான் உங்கட உறுமல்.

சில வேளை நீங்கள் உறுமி கொண்டு பரசூட்டில் குதித்ததை சொல்றீங்களோ?

நாங்கள் எல்லாம் நேரில் பார்த்தனாங்கள் இந்த உறுமல் வறுவல்களை.

சந்தியில எங்கேயோ கிரனேட் வெடிக்க அடுத்த அரை மணித்தியாலத்திற்கு ரோட்டு புழுதியில் தொப்பியை பிடித்து கொண்டு உருண்டு உருண்டு வான் வெடி வைப்பது தான் உங்கட உறுமல்.

சில வேளை நீங்கள் உறுமி கொண்டு பரசூட்டில் குதித்ததை சொல்றீங்களோ?

 

இன்று இந்தியா இருக்கு..இலங்கை "முழுசா" இருக்கு...ஆனா இரண்டையும் வென்றவர்களை காணவில்லை... :) :)

இன்று இந்தியா இருக்கு..இலங்கை "முழுசா" இருக்கு...ஆனா இரண்டையும் வென்றவர்களை காணவில்லை... :) :)

9000 இந்திய இராணுவ கூலிகளும், 60,000 சிங்கள இராணுவ கூலிகளும் தான் இல்லை.

இந்தியா இருக்கலாம் ஆனால் நேரு குடும்ப அரசாட்சி இல்லை.

சிறி லங்கா இருக்கலாம் ஆனால் அது ஒரு சர்வதிகார குடும்பத்திடம் உள்ளது.

என்ன நீங்கள் மட்டும் 5 வருசமா ஒரே வெற்றி குத்தாட்டம் தான்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல்: மேற்கு வங்க ஆளுநரை அடுத்து கோவா ஆளுநரை விசாரித்து வரும் சிபிஐ

டெல்லி: வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது நடந்த ஊழல் குறித்து கோவா ஆளுநர் வான்சூவிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தி வருகிறது. வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது ஊழல் நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த எம்.கே. நாராயணன் சாட்சியமாக சேர்க்கப்பட்டு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நாராயணன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானபோது நாராயணன் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.

 

 

04-bharat-vir-wanchoo1-600.jpg

 

 

இந்நிலையில் இந்த ஊழல் வழக்கில் கோவா ஆளுநர் பி.வி. வான்சூவின் பெயரும் சாட்சியமாக சேர்க்கப்பட்டது. இதையடுத்து ஊழல் குறித்து சிபிஐ அதிகாரிகள் வான்சூவிடம் இன்று காலை 11 மணியில் இருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது வான்சூ சிறப்பு பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்தார். அவர் வி.வி.ஐ.பிகளுக்காக வாங்கப்பட்ட 12 ஹெலிகாப்டர்கள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார். ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான சிகோர்ஸ்கிக்கு அது கிடைத்தவாறு செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ரூ. 360 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் கடந்த 2013ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸின் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான வான்சூ எம்.கே. நாராயணனை போல் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு மே மாதம் கோவா ஆளுநராக பொறுப்பேற்ற வான்சூவின் பதவிக்காலம் வரும் 2017ம் ஆண்டு நிறைவடைகிறது.
 

 

http://tamil.oneindia.in/news/india/cbi-quiz-goa-governor-the-agustawestland-scam-205150.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.