Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் புலிகளின் சடல எச்சங்கள் மீட்பு; முகமாலையில் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்திலேயே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர்.  

இதன்போது பெண் புலிகளின் சீருடைகள், எலும்புக் கூடுகள், 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி)  ரவைகள் 40 ,  சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு என்பன மீட்கப்பட்டுள்ளன.

உடனடியாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு  வருகை தந்துள்ளதாகவும் நீதவானின் விசாரணைக்காக இதுவரை எச்சங்கள்  மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளது பாரிய சோதனைச் சாவடி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

x%281%29.jpg

 

w%283%29.jpg

 

y%283%29.jpg

 

z%282%29.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=886333182602418954#sthash.rxfZxH2P.dpuf
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சோதியா, மாலதி படையணியைச் சேர்ந்தவர்களின் எலும்புக்கூடுகளே மீட்பு - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=459333186503838471#sthash.tJcXDGHq.dpuf

 

முகமாலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் சோதியா மற்றும் மாலதி படையணியின் பெண் புலிகளது என இனம்காணப்பட்டுள்ளது.

முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் நேற்றும் இன்றும் சீருடைகள் , ஆயுதங்கள் உள்ளிட்ட எச்சங்கள் நேற்றும் இன்றும் மீட்கப்பட்டிருந்தன. அதன்படி இன்று மீட்கப்பட்ட எச்சங்களில் பெண் புலிகளது 2 இலக்க தகடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி சோதியா படையணியைச் சேர்ந்த 2784 மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்த 1190 தகட்டு இலக்கங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இதில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பெண்புலிகளது என்றும் சோதியா மற்றும் மாலதி படையணியினரது என்றும் இனம்காணப்பட்டுள்ளது.    

 

1-copy%281%29.jpg

 

3-copy%281%29.jpg
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=459333186503838471#sthash.tJcXDGHq.dpuf

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

யார் பெற்ற பிள்ளைகளோ !!! ஆழ்ந்த இரங்கல்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம். :icon_idea:

 

மரணம் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொது. முன்னாடி மரணம் அடைந்த மனிதனை பார்த்து பின்னால் மரணம் அடைய இருக்கிற மனிதன் ஐயோ பாவம் என்பது தான் வேடிக்கையாக உள்ளது.

 

போர்க்களத்தில் பிற எண்ணற்ற உயிர்களின் மரணத்தை பின்னாடி நகர்த்தி விட்டு தாம் முன்னாடி வீழ்ந்த.. தியாகிகளின் மரணத்தை சாதாரண மனிதரின் மரணத்தோடு வைத்துப் பார்ப்பது தான் சிக்கலானது.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம். :icon_idea:

 

மரணம் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொது. முன்னாடி மரணம் அடைந்த மனிதனை பார்த்து பின்னால் மரணம் அடைய இருக்கிற மனிதன் ஐயோ பாவம் என்பது தான் வேடிக்கையாக உள்ளது.

 

போர்க்களத்தில் பிற எண்ணற்ற உயிர்களின் மரணத்தை பின்னாடி நகர்த்தி விட்டு தாம் முன்னாடி வீழ்ந்த.. தியாகிகளின் மரணத்தை சாதாரண மனிதரின் மரணத்தோடு வைத்துப் பார்ப்பது தான் சிக்கலானது.

 

அதைவிட வேடிக்கை, வீர மரணம் என்று உசுப்பேற்றிவிட்டு நாங்கள் தப்பிக்கொள்வது !

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட வேடிக்கை, வீர மரணம் என்று உசுப்பேற்றிவிட்டு நாங்கள் தப்பிக்கொள்வது !

 

நீங்கள் தப்பிக் கொள்கிறீர்கள் என்று தெரிஞ்சு கொண்டு தான் அவர்கள் தேசத்தை காக்கனும் என்று போய் வீழ்ந்தார்கள். அந்த உணர்விற்கு எப்போதும் மதிப்பளிக்க கற்றுக் கொள்ளனும்.

 

அந்த உணர்விற்கும் தியாகத்திற்கும்.. விலை மதிப்பிட முடியாது. அதற்கு செய்யும் ஒரு மரியாதை தான் வீரவணக்கம்...!!!

 

அவர்கள் வீழ்ந்த பின் ஐயோ வீழ்ந்திட்டினமே.. நான் தப்பிட்டனே.. என்று சொல்லிக் கொள்வது.. வெறும் நடிப்பு. அவர்கள் வீழப் போகிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியும்.. எங்களுக்கும் தெரியும். அது நடக்கும் போது.. தேவை என்றிருந்துவிட்டு.. இப்போ.. தோல்வி என்றதும்..

 

தியாகங்கள்.. வெற்றி தோல்விக்காக செய்யப்படுவதில்லை. இப்பூமிப் பந்தில்.. சக மனிதர்களின் உரிமையை.. இருப்பை உறுதி செய்ய செய்யப்படுவை...! அதற்கு எப்போதும் மதிப்பளிக்க கற்றுக் கொள்ளனும்..!

நாங்கள் ஜேசுவை ஏன் தியாகி என்கிறோம்.. வணங்குகிறோம்.. மாறாக.. அவர் ஏன் சும்மா இருக்க முடியாமல்.. எதிர்த்து சிலுவை போனார் செத்தார்.. என்று கேள்வி கேட்பதில்லை.. அந்தப் பக்குவம் இங்கும் வரணும்...!! புத்தனின் பல்லுக்கு மயிருக்கு கோவில் கட்டும் கூட்டம் தான்... இதையும் செய்கின்றன..! எல்லோரும் மனிதர்களே. அவர்கள் தியாகிகள் என்றால் இவர்களும் அதே..!!!!

Edited by nedukkalapoovan

அதைவிட வேடிக்கை, வீர மரணம் என்று உசுப்பேற்றிவிட்டு நாங்கள் தப்பிக்கொள்வது !

நாங்கள் புலம் பெயர்ந்து வாழும் நாட்டிலும் இது தானே நடக்கிறது.

வெள்ளையர் போய் உலகமெல்லாம் சண்டை பிடித்து செல்வம் சேர்க்க, வெல்பெயர் எடுத்து கொண்டு இராக்கில் செய்தது பிழை, ஆப்கானிஸ்தான் போயிருக்க கூடாது என்று அழுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில்  அந்தளவுக்கு அழிவு இல்லை

புலிகள் கதை  விடுகிறார்கள்

 

சோதியா படையணியைச் சேர்ந்த 2784 மற்றும் மாலதி படையணியைச் சேர்ந்த 1190 தகட்டு இலக்கங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இதில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பெண்புலிகளது என்றும் சோதியா மற்றும் மாலதி படையணியினரது என்றும் இனம்காணப்பட்டுள்ளது.    

புலிகள்  செய்திருப்பார்கள்

 

தமிழேண்டா.... :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.