Jump to content

நம்மவர் குறும்படங்கள்!!


Recommended Posts

90. இனி எனினும்

 

https://www.youtube.com/watch?v=VEwlwWB65m4

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

91. நெஞ்சுக்குள்ளே

 

https://www.youtube.com/watch?v=cXxqtlwtE10

Link to comment
Share on other sites

92. தொடுகின்ற தூரம்

 

https://www.youtube.com/watch?v=6UHDoIqPaEU

Link to comment
Share on other sites

93. வள்ளுவன்

 

கவிமாறன், திலீப், திபர்சன், நிவேதன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் வள்ளுவன். இக்குறும்படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார் பிரியந்தன்.

 

தயாரிப்பு காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப் போன இக்குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் மொழியை மையமாக கொண்டு வெளிவந்துள்ளது வள்ளுவன்.

 

சுருக்கமான கதைக்களம், அம்மாவை மறந்தியா, அப்பாவை மறந்தியா, பின் ஏன் தாய் மொழியை மட்டும் மறந்த என்ற நச் வசனங்கள் குறும்படத்திற்கு ஒரு ப்ளஸ்.

 

https://www.youtube.com/watch?v=z8hUasNM6_Y

 

Link to comment
Share on other sites

94. நிஜங்கள்

 

https://www.youtube.com/watch?v=O8t-VzM9HS4

Link to comment
Share on other sites

95. இடிமுழக்கம்

 

Cast: Sathapranavan, Rajinth, Sujeepan, Sujith,Gayani, Muthujaisingham
Music Arrangement: Vikram
Cinematography & Editing : Desuban
Production : Abisha Production
Screenplay & Direction : Sathapranavan

➢ Year Of Production: 2006

https://www.youtube.com/watch?v=qIxTUa-lS-Q

Link to comment
Share on other sites

96. அஞ்ஞான வாசம்

 

➢Short Film Festival of Sankiiyan Viruthu (Paris)
Best Actress (Shiny)
Best Supporting Actor (Vigithan)
Best Music (M.R.Raheis)
Best Cinematography (Desuban)
Best Editing (Desuban)
Best Screnplay

 

https://www.youtube.com/watch?v=ETfDMPgpBLM

 

Link to comment
Share on other sites

97. தினப்பயணம்

 

பிரான்ஸில் அடிக்கடி நடக்கும் மொபைல் போன் வழிப்பறியை மையமாகக் கொண்டு சதா பிரணவன் இயக்கி இருக்கும் குறும்படம் தினப்பயணம்.

 

சதாபிரணவன், ரஜிந்த் ஆகிய இருவருக்கும் குறும்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதனால் வட்டிக்கு கடன் வாங்கி, அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்த கதாநாயகன் பாஸ்கியிடம் தமது படத்தில் நடிக்க அனுமதிகேட்டு போகிறார்கள்.

 

பாஸ்கி அறிமுகமாகும் இடமும், படத்தை பற்றி அவர்களின் உரையாடலும் சூப்பர். அடக்க முடியாத சிரிப்பை ஏற்படுத்துகிறது.

 

அதேபோல் மொபைல் போன் வழிப்பறி கும்பலிடம் அடிவாங்கி ஐபோனை பறிகொடுத்துவிட்டு வரும் சந்தர்ப்பத்தில், அதைப்பற்றி விசாரிக்கும் தமிழர்களிடம் நக்கலாக சொல்லும் வசனங்கள் அட்டகாசம்.

 

இறுதியில் சிம் காட் அளவு சுதந்திரத்தையாவது வாங்கி கொடுங்கோ என்ற வசனம் செம. மொத்தத்தில் கதைக்களம் மிகவும் சூப்பர்.

 

https://www.youtube.com/watch?v=LLwqe2Jhh7s

 

Link to comment
Share on other sites

98. நான்கள்

 

Cast : Ajenthas, Sathapranavan, Rajinth, Ramana...
Music arrangement: Vikram
Cinematography & Editing : Desuban
Production : Rajinth
Screenplay & Direction : Sathapranavan

 

https://www.youtube.com/watch?v=PyOk8dfg2hA

 

Link to comment
Share on other sites

99. போராளிக்கு 'இட்ட' பெயர்

 

cast: SATHAPRANAVAN / NAGA KONES / VIGITHAN
music M.R. RAHEIS
sound design PRATHAP
cinematography & editing DESUBAN
produced AVATHARAM
screenplay & direction SATHAPRANAVAN

 

https://www.youtube.com/watch?v=FtBbBDuifB4

 

Link to comment
Share on other sites

100. பேரன் பேத்தி

 

தாத்தாவுக்குத் தன் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசை. பக்கத்து வீட்டுச் சிறுமி தன்னுடன் தமிழ் கதைக்கும் போது அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி தனது பேரப் பிள்ளைகள் பிரெஞ் கதைக்கும் போது அவரிடம் காணாமல் போய்விடுகிறது. அவரது பேரன், பேத்திக்கு தமிழ் தெரியாதது இறுதியில் அவருக்கு வினையாக முடிந்து விடுகிறது. பராவின் பேரன் பேத்தி குறும்படத்தின் கதை இதுதான்.

 

https://www.youtube.com/watch?v=Nqs4AtP9D88

 

Link to comment
Share on other sites

101. பழி

 

கே. தேவிதா தயாரிப்பில் சிவதுஷியாந்தன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் பழி.கவிமாறன், மிதுனா, சிவசோதி ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கு பிரியன் அவர்கள் இசையமைத்துள்ளார்.

 

நல்ல கதைக்களத்துடனும், சூப்பரான ட்விஸ்ட்டுடனும் உருவாகி இருக்கிறது பழி குறும்படம்.கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு போஸ்டர் வருகிறது, அதை பார்த்ததும் அப்பெண் பயப்படுகிறாள்.

 

அதில் இருந்து ஏதோ ஒரு உருவம் அப்பெண்ணை அடிக்கடி பயம்புறுத்துகிறது. அடிக்கடி தன் மனைவி ஒரு மாதிரியாக செய்வதை பார்த்த அப்பெண்ணின் கணவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

 

கடைசியில் அப்பெண்ணை பயம் புரித்தியது யார், எதற்கு என்பது கதையில் ட்விஸ்ட்.

 

இக்குறும்படத்தில் மிதுனா நடிப்பு அற்புதம், சூப்பர், அவரின் நடிப்பு குறும்படத்திற்கு ஒரு ப்ளஸ். பயப்படுவது போல் நடித்த எல்லா இடத்தில் வெவ்வேரு முக பாவனைகளை காட்யிருந்தார்.

 

குறும்படம் மிகவும் அருமையாக இருக்கிறது. குறும்படத்தில் கடைசி இடத்தில் இசையை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

 

https://www.youtube.com/watch?v=4zjzj4hIQMw

 

Link to comment
Share on other sites

102. நீ இடையில் நான்

 

Cast : Sathapranavan, Ashvina
Music : Jana
Assistant Music: Vikram
Costume & Make-up : Desmila - Mayuri
Cinematography & Editing : Desuban
Production : Rajinth
Screenplay & Direction : Sathapranavan
AVATHARAM PRODUCTION

Festival of Thavam: (Paris)
2nd Price
Best Actor
Best Cinematography

Festival of Vinbam :: (London)
Best Actor

 

https://www.youtube.com/watch?v=unbWCh3Ms8c

 

Link to comment
Share on other sites

103. Today 27

 

Cast SRI.THAYALAN – N.KAMALA – RAMANA 
Sound Design PRATHAP
Sound Dubbing SURENDRAN
Assistant Director NS JANA
Cinematography & Editing DESUBAN
Producer RAJINTH
Screenplay & Direction SATHAPRANAVAN

♦Norway Tamil Film Festival (2013)
✭Best Cinematography (Desuban)

https://www.youtube.com/watch?v=I0YOHyH51vA

 

Link to comment
Share on other sites

104. ஆசுவாசம்

 

Cast : BALARAJA – YAMUNA – FRANKLIN
Music Coordination : PRATHAP
Editing : SURENDRAN
Cinematography, Story & Direction : PREM.K

 

https://www.youtube.com/watch?v=m4ZsgL-v_cY

 

Link to comment
Share on other sites

105. FindMe

 

நடிகர்கள்: விக்ரம் - குஷ்பு - விஜிதன் 
இசை: N.சதீஷ்
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்: சுரேந்திரன் 
கதை & இயக்கம்: J.சதீஷ்

 

https://www.youtube.com/watch?v=bbDcMbvrPoA

Link to comment
Share on other sites

106. Mobila Mobila

 

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக பெண்கள் கூட்டணியில் உருவான குறும் திரைப்படம் மட் வின்சென்ட் பாடசாலை மாணவிகளின் முயற்சியில் உருவாகி பலரின் வரவேற்பினை பெற்ற 'மொபைலா மொபைலா'


முக்கிய பாத்திரங்கள் :
செல்வி தேனுஜா மோகனதாஸ்,
செல்வி பிரனித்தா ரமணாநிதா,
செல்வி வேணுகா ரவிச்சந்திரன்
இயக்குனர் : செல்வி சாருணி இந்திரஜித்

ஒளிபதிவு: செல்வி வேணுகா ரவிச்சந்திரன்
தயாரிப்பு : செல்வி கோபிகா ரவிச்சந்திரன்
படத்தொகுப்பு: செவன் விஷ்ணுகாந்த் குமரஜோதி
இசை: செல்வன் சஞ்சித் லக்ஷ்மன்.
இத் திரைப்படத்துக்கான ஆலோசனையை திரு கோவர்த்தனன் பத்மநாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

 

https://www.youtube.com/watch?v=7wy941kPP2o

 

Link to comment
Share on other sites

107. நாதாரி

 

Tamilan Present Creation வழங்கும் 

Cast: Manmathan & Kesavan
Camera & : Kumar 
Editing ; Shankar

 

https://www.youtube.com/watch?v=v-RlB4AZI74

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

 

நேரம் போதாமையால்  பதில் எழுத

பார்க்க

அதிகம் மினக்கெட முடியவில்லை

ஆனால் அடிக்கடி  மறக்காமல் வந்து  போகும் திரி

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

Link to comment
Share on other sites

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

 

நேரம் போதாமையால்  பதில் எழுத

பார்க்க

அதிகம் மினக்கெட முடியவில்லை

ஆனால் அடிக்கடி  மறக்காமல் வந்து  போகும் திரி

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

 

மிகவும் நன்றி ஐயா! 

Link to comment
Share on other sites

108. மறுதாக்கம்

 

ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி சக்சஸ் விளையாட்டுக்கழகம் சேவகம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த மதனுகண்ணாவின் மறுதாக்கம் குறும்படம். 
 
வயதான பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுவதனால் எதிர்காலத்தில் நாம் முதியோராகும் போது எமது பிள்ளைகள் எம்மை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் என்ற செய்தியை தாங்கி இக் குறும்படம் வெளிவந்துள்ளது. மிகக் குறைந்த செலவில் எந்தவிதமான நவீன தொழில் நுட்பங்களும் இன்றி ஏறாவூர் பிரதேச கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட இக் குறும்படத்தின் வெளியீடு சேவகம் நிறுவனத்தினால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
 

https://www.youtube.com/watch?v=0gjocM22noc

 

Link to comment
Share on other sites

109. கொலையாளி

 

'கொலையாளி'
இலங்கையில் தமிழக் குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள்:

இலங்கையைப் பொறுத்தவரையில், சிங்களத் திரைப்படத்துறை அதனளவில் அபார வளர்ச்சி அடைந்த ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழ்த் திரைப்டத்துறையுடன் ஒப்பிடும் போது சிங்களத் திரைப்படத்துறையானது தொழில்சார் துறையாக உச்ச நிலையில் உள்ளது என்றே சொல்லமுடியும்.

உண்மையில் இலங்கைத் திரைப்படத்துறை என்பது 'சிங்களத் திரைப்படத் துறை' ஆகவே உள்ளது. ஆயிரக்கணக்கான தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட ஒரு வயர்ச்சியடைந்த உட்கட்டமைப்பு சிங்களத் திரைப்படத் துறைக்கு உள்ளது. 'இந்தியன்' படத்துக்கான ஒப்பனைக் கலைஞர் கூட இலங்கையில் இருந்து சென்றுள்ளார் என்பது பலர் அறியாத உண்மை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிங்களத் திரைப்படத்துறைக்கான அரச ஆதரவு 50களில் இருந்தே மிக பலமாக இருந்து வருகின்றது. எல்லா நாடுகளையும் போன்று இலங்கை அரசும் சினிமாத் துறையை வெறும் கலை ஊடகமாக அல்லாது அதன் மேலாதிக்கம், உலக அரங்கில் தனக்கான ஸ்தானம் அல்லது பிடிமானம் என்னும் வகையிலேயே பார்த்து வருகிறது.

சினிமா என்பது வெறும் கலை ஊடகம் அல்ல. அது வல்லரசுகளின் ஒரு ஆயுதமும் கூட. சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வல்லரசுப் போட்டியில் சினிமா ஒரு பிரதான ஆயுதமாக இருந்து வருகிறது. இது அவர்கள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விடவும் பலமான பங்கினை ஆற்றி வருகின்றன. ஈரான் மற்றும் பிரேசில், கியூபா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகள் சினிமாவை அமெரிக்க வல்லரசுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவின் சினிமா வெறும் கூத்தாடிகளின் குமமாளம் அல்ல. அதற்குப் பின்னால் இந்தியாவின் பொருளாதார நலனும் பிராந்திய மேலாதிக்க நகர்வும் உள்ளது. என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் ஒரு இலங்கைத் தமிழர் (பாலுமகேந்திரா, வி.சி.குகநாதன், ஐங்கரன் உட்பட) திரைப்படத்துறையில் ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படாதிருப்பதின் இரகசியம் இதுதான்.

சிங்களத் திரைப்படத் துறையின் மீதான இலங்கை அரசின் கவனமும், காத்திரமும் கூட இவற்றின் பின்னணியிலேயே அமைகின்றன என்பது மிக நுணுக்கமாகப் பார்த்தால் விளங்கும். இலங்கை அரசுக்கெதிராக எடுக்கப்படும் திரைப்படங்கள், தமிழர்களுக்கு ஆதரவானவை எனச் சொல்லப்படும் திரைப்படங்கள் கூட மறைமுகமாக இந்தப் பின்னணியிலேயே உருவாக்கப்படுகின்றன. அதிலும், அத்தகைய படங்களுக்கும், இலங்கை அரசு மறைமுக ஆதரவை வழங்கி வருகிறது என்பதுவும் ஒரு விடயம்.

2002 ஆம் ஆண்டு ஸ்க்றிப்நெட் (ScriptNet) இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், சிங்களத் திரைப்படத் துறைக்கு நிகரான ஒரு தமிழ்த் திரைப்படத் துறையை முஸ்லிம், தமிழர் சூழலில் உருவாக்குவது என்பதாகும். இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு, பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பாவிக்கப்பட்ட உத்திகளும் தந்திரோபாயங்களும் பல. அதனடிப்படையில், முதற்கட்டமாக, குறுந்திரைப்படப் படைப்பாகத்தில் அதிக கவனத்தைச் செலுத்தியது. குறுந்திரைப்படத்தை தொழில்துறைசார் நுட்பங்களுடன், சர்வதேச தரத்துக்கு தயாரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கியதுடன், குறுந்திரைப்படம் செய்வது என்பது தமக்கு எட்டாக்கனி என்ற நிலைப்பாட்டிலிருந்த பல கலைஞர்களை ஒரே நாளில் ஒரு குறுந்திரைப்படத்தை செய்யமுடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து அதனை செயற்படுத்தியும் காட்டியது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தலையில் கைவைத்தப்படி பூனேக்குப் போய் படித்துவிட்டு வந்துதான் குறுந்திரைப்படம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு பலர் இருந்து கொண்டிருந்த வேளை, அதனை ஒரு விளையாட்டாக, கவிதை எழுதல், படம் கீறுதல், போன்ற ஒரு தன்னெழுச்சியான படைப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஸ்க்றிப்ட்நெட் பல முஸ்லிம், தமிழ் இளைஞர்களுக்கு வழங்கியது. தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படம் என்னும் பாரிய அலை உருவாக அது முக்கிய ஒரு காரணமாக இருந்தது.

அந்த வகையில் ஸ்க்றிப்நெட் தனது நோக்கில் வெற்றி கண்டுள்ளது. இன்று இலங்கையில் தமிழச் சூழலில் நடைபெற்று வரும் குறுந்திரைப்படச் செயற்பாடுகள் பலவும் நேரடியாகவும் மறைமுகமாவும் அதன் தாக்கமாகவும், பெறுபேறாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும், எமது படைப்புகள், தமிழ்ச் சூழல் என்னும் வட்டத்தைக் கடந்து சிங்கள மற்றும் சர்வதேச சூழலில் நிலைநிறுத்தப்பட வேண்டியனவாகவும் நிரூப்பிக்கப் படவேண்டியனவாகவும் உள்ளன. ஏனெனில், எப்படி திரைப்படத்துறை ஏனைய சமூகங்கள், நாடுகளின் கையில் கலை, மற்றும் பொழுபோக்குக்கு அப்பாற்பட்ட கருவியாக உள்ளதோ அவ்வாறே இலங்கையில் முஸ்லிம், தமிழ் மக்கள் சார்ந்த ஒரு சமூகக் கருவியாக, பரந்த உலகில் எமக்கான இடம், பிடிமானம் என்பதாக தமிழ்த் திரைப்படங்கள் இருக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் 2007ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற குறுந்திரைப்பட போட்டியில் (Bonjour Award) ஸ்கிறிப்ற்நெட்டினால் தயாரிக்கப்பட்ட 'அழுத்தம்' திரைப்படம் 2007ம் ஆண்டுக்கான சிறந்த (முதலாவது) திரைப்படத்துக்கான விருதைப் பெற்றமை முக்கியமான வரலாற்றுச் சம்பவமாகும். போட்டிக்கு வந்த 168 குறுந்திரைப்படங்களுக்குள் 150 க்கு மேற்பட்டவை சிங்கள குறுந்திரைப்படங்களாகும். ஐந்து திரைப்படங்கள் விருதுக்காக சிபார்சிக்கப்பட்டு விழாவில் திரையிடப்பட்ன. அவற்றுள் அழுத்தம், செருப்பு ஆகியன தமிழ்க் குறுந்திரைப்படங்கள் (இரண்டும் ஸ்க்றிப்நெட் தயாரிப்புக்கள்).

இந்த விருதின் பின்னரான சம்பவங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

அடுத்தநாள், சக்தி தொலைக் காட்சியில் செய்தியில் (தமிழ்) இந்த Bonjour Award விருது விடயம் சொல்லப்பட்டு விருது வழங்கப்படும் காணொளியும் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆங்கிலச் செய்தியில் அந்தச் செய்தி சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் நிறுத்தப்பட்டு, திரை கறுப்பாக்கப்பட்டு பின்னர் வேறு விடயத்துக்கு செய்தி தாவியது.

அடுத்தது, இந்த விழாவுக்கு முன்னர், ஊடகங்களில் பெரும் நிகழ்வாக, இலங்கையில் பிரெஞ்சு பேசும் ஐந்து (France, Swiss, Canada, Belgium, Romania) நாடுகளினால், நடாத்தப்படும் முதல் குறுந்திரைப்பட விழா என்று கொண்டாடப்பட்டும் விருதுக்குப் பின்னர் அது ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் மட்டும் ஒரு பெட்டிச் செய்தியாக வந்தது. சிங்களப் பத்திரிகைகளில் அச் செய்தி வந்ததாக இல்லை.

அதைவிட முக்கியமான விடயம், ஒரு வரலாற்று முன்னெடுப்பாக ஆரம்பிக்கப்பட்ட அந்த குறுந்திரைப்பட விழாவின் முதலும் கடைசியுமாக அது இருந்தது.

அதே ஆண்டு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட சிங்கள-தமிழ் குறுந்திரைப் போட்டியில் ஸ்க்றிப்நெட்டினால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம் 'செருப்பு' இரண்டாவது இடத்துக்கான விருதைப் பெற்றது.

பிரஞ்சு திரைப்பட விழாவினால் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட விழாவில் முதற் பரிசு எந்தக் குறுந்திரைப்படத்துக்கு வழங்குவது என்பதில் இரண்டு குறுந்திரைப்படங்களுக்கு இடையிலேயே போட்டி நிலவியது. அது 'அழுத்தம்' மற்று 'செருப்பு' ஆகிய தமிழ்க் குறுந்திரைப்படங்களுக்கிடையையே இருந்தன. இதனை, விருது வழங்கும் விழாவின் பின்னரான விருந்துபசாரத்தின் போது பிரான்ஸ், சுவிஸ், கனடா நாட்டு தூதரகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட நடுவர்கள் என்னிடம் தெரிவித்தனர். சிலர் அழுத்தம் திரைப்படத்துக்கு வாக்களித்தாகவும் வேறு சிலர் செருப்பு குறுந்திரைப்படத்துக்கு வாக்களித்தாகவும், இறுதியில் அழுத்தத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தாகவும் சொன்னார்கள்.

அத்தகைய செருப்பு' குறுந்திரைப்படத்துக்கு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன குறுந்திரைப்பட விழாவில் இரண்டாம் இடம் கிடைத்தது. முதலாவது இடத்தைப் பெற்ற, குறுந்திரைப்படத்தின் இயக்குனர், திரைபபடப்பட இயக்கம் சம்பந்தமான மேற்படிப்பு படிப்பதற்காக வடகொறியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதற்கான புலமைப்பரிசிலை வடகொறியா வழங்கியது.

இந்நிலையில்,

இன்று 2013, டிசம்பர் 04 மொறட்டுவ பல்கலைக் கழகத்தினால் ('Pehesara 2013' cultural festival) நடாத்தப்பட்ட சிங்கள-தமிழ் குறுந்திரைப்படப் போட்டியில் மொறட்டுவ பல்கலைக் கழக மாணவர்கள் சுபாஸ், கணரூபன், தனஞ்சயன் ஆகியோரின் உழைப்பில் உருவாகியுள்ள 'கொலையாளி யார்' என்னும் குறுந் திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளமை இலகுவாக எடுக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. ஏனெனில், இலங்கையில் சிங்களச் சூழலில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் ஒரு தமிழ்க் குறுந்திரைப்படம் விருது பெறுவது கேன்ஸ் விருதை (Cannes Award) விடக் கடினமானது.

'கொலையாளி யார்' குறுந்திரைப்படத்துக்கு விருது கிடைத்தது பற்றி கணரூபன் அவர்கள் முகநூலில் எழுதியுள்ள குறிப்பில் இருந்து சில மேற்கோள்கள்:

//பெருமளவு செலவினங்கள், அதீத தொழிநுட்பங்கள், பெரிய அணிகள், தொழில்முறை இயக்குனர்கள், திரைப்படத் துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் எனும் வகையறாவில் மொத்தம் 7 படங்கள் வந்திருந்தன.

ஒவ்வொன்றினதும் அழகியலும் ஒளிப் பதிவுத் தரமும் சொல்லி மாளப் பட முடியாதவை. நடித்த அனைவருமே தொழில்முறை நடிகர்கள். அவைகளில் அவ்வளவு நேர்த்தி, தரம், எழில். செலவு இலட்சங்களிலும் இருக்கலாம். நாங்கள் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.//

//கடைசியில் எங்களுக்குத்தான் இரண்டாவது இடம் அறிவிக்கப் பட்டது.

ஏன்?

ஒரே ஒரு காரணந்தான்.

எமது படத்தில் ஒரு கதை இருந்தது. அது முழுக்க முழுக்க எங்களுடையதாயிருந்தது.

இந்தப் படத்துக்கான அங்கீகாரம், உண்மையில் கதைக்கான அங்கீகாரம், வெற்றி.

'கதை' என்பதன் வீரியத்தினையும் முக்கியத்துவத்தினையும் நெற்றிப் பொட்டில் அறைந்து தீர்ப்புச் செய்த நடுவர்களுக்கு நன்றி.//

 

https://www.youtube.com/watch?v=ULSgsEg5Zwk

Link to comment
Share on other sites

110. தாய் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=_xsS5pd4Wd0

Link to comment
Share on other sites

111. மௌனம் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=NnSSvt6kBuE

Link to comment
Share on other sites

112. விடிநிலம் (ஈழம் குறும்படம்)

 

https://www.youtube.com/watch?v=JXlIwOobwvc

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.