Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியா நடுக் கடலில் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது - மெல்கம் பிராசர் -

Featured Replies

malcolm-fraser._CI.jpg

அவுஸ்திரேலியா நடுக் கடலில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் லிபரல் பிரதமர் மெல்கம் பிராசர்  ( Malcolm Fraser) தெரிவித்துள்ளார்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இந்தக் கத்தை வெளியிட்டுள்ளார்.

சிட்னியில் அமைந்துள்ள பொனி சர்வதேச கொள்கை நிறுவகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நடுக் கடலில் 150 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்தமை ஓர் கடற் கொள்ளை முயற்சியாகவே நோக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடற்பரப்பில் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கப்பலில் ஏற்றியமை சர்வதேச சட்ட மீறலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை வேறும் வார்த்தைகளில் விளக்குவதனை விடவும், சர்வதேச கடற் கொள்ளையாகவே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட 41 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தண்டிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு சட்டவிரோதமாக குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் வெளியேறிச் சென்றுள்ளதாக இலங்கை காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்படக் சுடிய சாத்தியங்கள் காதணப்பபடுவதாகத் தெரிவித்துள்ளர்.

நாட்டை விட்டு சட்டவிரோதமாக பயணங்களை மேற்கொள்வோருக்கு இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என காவல்துறை மா அதிபர் எச்சரித்துள்ளார்.

இதனை ஓர் வகையிலான சித்திரவதையாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109185/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கொள்ளைக்கு ஆதரவுதரும் சுண்டல் போன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கொள்ளைக்கு ஆதரவுதரும் சுண்டல் போன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்..! :icon_mrgreen:

 

மனிதாபிமானத்தை   இவர்களிடம் ................................... தமிழன் உணர  முற்படவேண்டும் :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கொள்ளைக்கு ஆதரவுதரும் சுண்டல் போன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்..! :icon_mrgreen:

 

 

அவர் போட்டிருப்பது வேஷம். உண்மையில்லை என்பது மட்டும் நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் எங்கள் ஆஸ்திரேலியா பிரதமர் இன்றைக்கும் சொல்லி இருக்கின்றர்கள் படகு அகதிகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று அப்பிடியே இவர்கள் வந்தாலும் நேர பப்புவா நியூ கினியா தீவுகளுக்கு தான் அத விட இந்தியா இலங்கையிலே இருந்திருக்கலாம்......ஹா ஹா :D :d

அவர் போட்டிருப்பது வேஷம். உண்மையில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஆமா எனக்கு வேஷம் போட்டு விட்டது இவரு தான் பாருங்க .... யாரும் கலைச்சு விட்டுடாதீங்கப்பா....

சும்மா காமடி பண்ணவே யாழுக்கு வாறது.......

கொள்கை அளவிலை இலங்கை சிங்களமும் அவுஸ்ரேலிய அரசும் ஒண்டுதான்... !!   மனிதாபிமானத்தை எல்லாம் எதிர்ப்பார்ப்பது தவறு...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவுஸ்ரேலிய நடவடிக்கையை ஆதரிக்கும் தமிழ்த்தேசியவாதிகளை என்ன சொல்லலாம் தயா?

அப்ப அவுஸ்ரேலிய நடவடிக்கையை ஆதரிக்கும் தமிழ்த்தேசியவாதிகளை என்ன சொல்லலாம் தயா?

 

யார் எல்லாம் எங்கட சனத்தை கொலை செய்தவர், துணை நிண்டவை எண்டதிலையும் இந்த நிலைக்கு காரணம் யார் எண்டதிலையும் பலருக்கு பலவிதமான மயக்கம் இருக்கலாம்...  எல்லாத்தையும் காலம் உலர்த்தும்.... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.