Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸில் இருந்து திருப்பி அனுப்பட்ட அகதிகளை திருப்பி ஏற்கப் போவதில்லை : இந்தியா அறிவிப்பு - See

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்த்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .
 
153 இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள படகு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
 
எவ்வாறாயினும் குறித்த 153 பேருடனான படகு, தமிழ் நாட்டில் இருந்தே அவுஸ்திரேலியா சென்ற நிலையில், அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
 
எனினும் இவ்வாறான பேச்சுவார்த்தைக்கு  இந்தியா இணங்கவில்லை என்று. ஏற்கனவே இந்த படகில் உள்ள அகதிகளை நாடுகடத்துவதற்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னர் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=367883214010859411#sthash.1Z0ua4wQ.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின் மேலாண்மை (rule of law) பற்றியும் சர்வதேச அகதிச் சட்டம் பற்றியும் இந்தியா வகுப்பெடுக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டதே நம்ம அவுஸ்ரேலியா :)

https://treaties.un.org/pages/ViewDetailsII.aspx?&src=TREATY&mtdsg_no=V~2&chapter=5&Temp=mtdsg2&lang=en

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. அவுஸ்திரேலிய ஆட்சியாளர்களுக்கு கச்சான் அளவுதான் மூளை இருக்குது.. :lol: இது அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கே அவமானம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இடி ஆமீன் இந்தியர்களை உகாண்டாவில் இருந்து திரத்திய போது, ஏதோ பெரிய உதவி செய்வது போல பிரிட்டிஸ் அரசு தமது விமானங்களில் ஏற்றி, டெல்லியில் இறக்க முயல, அவர்களை இங்கிருந்து கொண்டு போகையில் பிரிட்டிஸ் பிரஜைகள், இப்போது அவர்கள் உங்களது தலைவலி, இந்தியாவினது அல்ல என்று இந்திரா காந்தி நிலையெடுக்க, வேறு வழி இன்றி அவர்கள் பிரிட்டனுள் குடிஅமர்த்தப் பட்டனர்.

அவுஸ்திரேலியாவும் பாடம் கற்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாத முனி நீங்கள் சொல்லும் "இந்திரா காந்தி அகதிகளை ஏற்க மறுத்தார்" எனும் கதை நான் இதுவரை கேள்விப்படாதது. இதற்கு ஆதாரம் இருந்தால் தர முடியுமா?

நான் அறிந்த வரை உகாண்டாவின் ஆசியர்களில் பலர் ஏலவே பிரிட்டிஸ் குடியுரிமை ( British Overseas citizen) பெற்றவர்கள். சிலர் யுகாண்டா குடிகள். இவர்களில் பலரின் குடியுரிமையை அமீன் பறித்ததால் அவர்கள் நாடற்றவர் (stateless persons) ஆனார்கள். முன்னாள் காலனிய நாடு எனும் வகையில் இவர்களை பிரித்தானியா ஏற்றுக் கொண்டது. பெருமளவு அகதிகளை பிரித்தானிய ஏர்ரதுக்கு இவையே பிரதான காரணம்.

தவிர, இடி அமீன் மீது இண்டியா கடும் கண்டனம் செய்தது என்பதும் மிரட்டல் அறிக்கை கூட வெளியிட்டதும் நடந்தது. ஆபிரிக்காவில் ஒரு மூலையில் அல்லாடும் ஆயிரக்கணக்கான குஜராத்தி இந்துக்களை உதாசீனம் செய்யும் அரசியல் முட்டாள்த்தனத்தை இந்திரா செய்திருப்பார் என்று என்னக்குத் தோன்றவில்லை.

27000 பேர் யூகேயுக்கும் 4500 பேர் இந்தியாவுக்கும் சென்றனர் என்கிறது விக்கி.

http://en.m.wikipedia.org/wiki/Expulsion_of_Asians_from_Uganda

  • கருத்துக்கள உறவுகள்
இது குறித்து முன்னரே பதிவு செய்து உள்ளேன்.
 
முதலாவது பக்கத்தில் கீழிருந்து நாலாவது பதிவினைப் பாருங்கள்.
 
பயணிகள் விரும்பியவாறு தான் முடிவு செய்யப் பட்டது. இந்தியாவில் உறவுகள் இருந்தோர் அங்கு சென்றார்கள். இல்லாதோர் UK சென்றார்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103742

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி நாத முனி. ஆனால் நீங்கள் அங்கும் ஆதாரம் எதுவும் தரவில்லை. உங்கள் கருத்தையே பதிவு செய்துள்ளீர்கள்.

கோபிக்க வேண்டாம், ஒரு வரலாற்று விடயம் என்று ஒன்றைச் சொல்லும் போது அதற்கு ஆதாரம் ஒன்றிண்டாவது இருந்தால் அல்லது நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தல் நலம்.

தயவுசெய்து இதை உங்கள் மேல் செய்யப்படும் தாக்குதலாய் பார்க்க வேண்டாம்.

"வரலாறு முக்கியம் அமைச்சரே" அவ்வளவுதான் :)

  • கருத்துக்கள உறவுகள்
அந்த காலத்தில் பெரும் வல்லரசானா பிரிட்டனின் மூக்கு ஏழை இந்தியாவால் உடைக்கப் பட்டமை கண்டு கொள்ளப் படவில்லை என்பதே உண்மை.
 
இவை அவ்வபோது வாசித்த தகவல்கள். இந்திய பத்திரிகையில்  (ஹிந்து என்று நினைவு) 'இங்கிலாந்து லெஸ்டர் நகரில் இந்தியர்கள்' கட்டுரை வந்திருந்தது. அந்த கட்டுரையில் 'இங்கிலாந்து லெஸ்டர் நகரில் இந்தியர்கள் குடி அமர வந்த போது வெளையர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இன்று அந்த நகர பொருளாதாரமே இந்தியர் கையில் என சொல்லி இந்த தகவலும் தந்திருந்தார்கள்.
 
இதில் வரலாறு உகண்டாவில் இருந்து அனுப்பியது தான், இந்தியாவில் இருந்து அனுப்பியது அல்ல. 
  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் முடிந்தளவு தகவல் தந்ததுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.