Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லாடற்களம்

Featured Replies

  • Replies 467
  • Views 24.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
மிகவும் சரியான சொல் நிபுணத்துவம்
 
நிபுணத்துவம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த தமிழினி, வாத்தியார் மற்றும் முழுமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 63.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------   
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் பொறாமை எனப் பொருள்படும்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்து முக்கனியில் ஒரு கனியைக் குறிக்கும்.
 
3. முதலாம், ஐந்தாம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பொய்மையான தோற்றத்தைக் குறிக்கும்.
 
4. மூன்றாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் பிழைக்கு எதிர்ச்சொல்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
  • தொடங்கியவர்
மிகவும் சரியான சொல் மாச்சரியம்
 
மாச்சரியம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 64.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------------------  
 
இது ஒரு மலரின் ஒத்த சொல்லாகும். இம்மலரின் இயல்பு நிலையைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் பெயராகும்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் உறவினர் எனப் பொருள்படும்.
 
3. நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் இலட்சுமி என்னும் அர்த்தம் வரும்.
 
4. முதல் மூன்:று எழுத்துக்களும் சேர்ந்தால் வாரத்தில் ஓர் நாள் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
  • தொடங்கியவர்

 

களம் 64.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------------------  
 
இது ஒரு மலரின் ஒத்த சொல்லாகும். இம்மலரின் இயல்பு நிலையைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் பெயராகும்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் உறவினர் எனப் பொருள்படும்.
 
3. நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் இலட்சுமி என்னும் அர்த்தம் வரும்.
 
4. முதல் மூன்:று எழுத்துக்களும் சேர்ந்தால் வாரத்தில் ஓர் நாள் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

 

 

இது சூரியகாந்திப்பூவின் மறு பெயராகும்.

  • தொடங்கியவர்

 

களம் 64.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------------------  
 
இது ஒரு மலரின் ஒத்த சொல்லாகும். இம்மலரின் இயல்பு நிலையைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் பெயராகும்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் உறவினர் எனப் பொருள்படும்.
 
3. நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் இலட்சுமி என்னும் அர்த்தம் வரும்.
 
4. முதல் மூன்:று எழுத்துக்களும் சேர்ந்தால் வாரத்தில் ஓர் நாள் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

 

 

ஞாயிறுதிரும்பி

  • கருத்துக்கள உறவுகள்

புயல் , இந்தப் பெயர் சூரியகாந்திக்கா , தாமரைக்கா...!

  • தொடங்கியவர்

புயல் , இந்தப் பெயர் சூரியகாந்திக்கா , தாமரைக்கா...!

 

 

சூரியன் செல்லும் திசைக்குத் திரும்பும் மலர் சூரியகாந்தி என்பதால் அம்மலருக்கு ஞாயிறுதிரும்பி, பொழுதுவணங்கி போன்ற காரணப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

 

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
களம் 65.
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
முதலாவது எழுத்து மட்டும் மாற்றமடைந்து கொண்டு வரும்.
 
தரவுகள் 10.
 
1. உயரமான இடத்திலிருந்தாலும் ஒரு பகுதியினரின் புனிதச் சின்னம்.                             ------------------------------
 
2. மனித குலத்தை நல்வழிப்படுத்த எனவே வகுக்கப்பட்டது                                                  ------------------------------
 
3. குதிரைக்கு இது இல்லையாமே.                                                                                                 ------------------------------
 
4. புகழ் பெற்ற வரலாறுகள் உருவான இடங்களில் இதுவும் ஒன்று.                                       ------------------------------
 
5. முற்காலத்தில் மன்னர்கள் மன்னர்களுக்குச் செலுத்தியது                                                  -------------------------------
 
6. பாரம், வலிமை, பொறுமை போன்றவற்றினைக் குறிக்கும் ஒரே சொல் இது.                  -------------------------------
 
7. கெட்டுப் போகாத உணவுப்பண்டம் ஒன்று.                                                                                 -------------------------------
 
8. மங்கலம், அமங்கலம் என அனைத்து இடங்களிலும் ஓசை எழுப்புவார்.                             --------------------------------
 
9. இது இல்லாத மனிதர்களைக் காண்பது மிகவும் அரிது.                                                             ---------------------------------
 
10. இதுவும் ஒரு வகைக் காற்றுத் தானே?                                                                                         -----------------------------------
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1-- பிறை.

2-- மறை.

3--  --------.

4-- சிறை.

5-- திறை.

6-- நிறை.

7-- உறை ( தயிருக்கு)

8-- பறை.

9-- கறை.

10-- சூறை.

 

ஜஸ்ட்  வன் மிஸ் , குதிரை குப்புறத் தள்ளீட்டுது...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

1-- பிறை.2-- மறை.3 .கறை   .4-- சிறை. 5-- திறை

 

.6-- நிறை.7-- உறை  பறை.9--  குறை 10-- சூறை.

  • தொடங்கியவர்

1-- பிறை.

2-- மறை.

3--  --------.

4-- சிறை.

5-- திறை.

6-- நிறை.

7-- உறை ( தயிருக்கு)

8-- பறை.

9-- கறை.

10-- சூறை.

 

ஜஸ்ட்  வன் மிஸ் , குதிரை குப்புறத் தள்ளீட்டுது...! :lol::D

 

 

சுவி அண்ணா
 
மூன்றாவது, ஆறாவது மற்றும் ஏழாவது தரவுகளுக்கு விடைத் தெரிவுகள் பொருந்தவில்லை.
 
வாழ்க வளமுடன்

நிலாமதி
 
மூன்றாவது, ஆறாவது மற்றும் ஏழாவது தரவுகளுக்கு விடைத் தெரிவுகள் பொருந்தவில்லை.
 
வாழ்க வளமுடன்

 

களம் 65.
அனைத்துத் தரவுகளும் இரண்டு எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
முதலாவது எழுத்து மட்டும் மாற்றமடைந்து கொண்டு வரும்.
 
தரவுகள் 10.
 
1. உயரமான இடத்திலிருந்தாலும் ஒரு பகுதியினரின் புனிதச் சின்னம்.                             ------------------------------
 
2. மனித குலத்தை நல்வழிப்படுத்த எனவே வகுக்கப்பட்டது                                                  ------------------------------
 
3. குதிரைக்கு இது இல்லையாமே.                                                                                                 ------------------------------
 
4. புகழ் பெற்ற வரலாறுகள் உருவான இடங்களில் இதுவும் ஒன்று.                                       ------------------------------
 
5. முற்காலத்தில் மன்னர்கள் மன்னர்களுக்குச் செலுத்தியது                                                  -------------------------------
 
6. பாரம், வலிமை, பொறுமை போன்றவற்றினைக் குறிக்கும் ஒரே சொல் இது.                  -------------------------------
 
7. கெட்டுப் போகாத உணவுப்பண்டம் ஒன்று.                                                                                 -------------------------------
 
8. மங்கலம், அமங்கலம் என அனைத்து இடங்களிலும் ஓசை எழுப்புவார்.                             --------------------------------
 
9. இது இல்லாத மனிதர்களைக் காண்பது மிகவும் அரிது.                                                             ---------------------------------
 
10. இதுவும் ஒரு வகைக் காற்றுத் தானே?                                                                                         -----------------------------------

 

 

1--  பிறை

2--  மறை

3--  காறை

4--  சிறை

5--  திறை

6-- பொறை

7--  நறை ( தேன் )

8--  பறை

9--  கறை

10-- சூறை

 

  • தொடங்கியவர்
அனைத்துத் தரவுகளுக்கும் சரியான பதிலளித்த தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 66.
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல்   ------------------------------------------ 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் நம் முன்னோர்கள் அக்கம் பக்கத்து இடங்களை இப்படித்தான் சொன்னார்கள்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்தும் இறுதி இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் இசையுடன் தொடர்புள்ள ஓர் சொல் வரும்.
 
3. இறுதி ஐந்து எழுத்தக்களும் சேர்ந்தால் சுற்றுப்புறம் என்றும் சொல்லலாம்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 

 

களம் 66.
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல்   ------------------------------------------ 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் நம் முன்னோர்கள் அக்கம் பக்கத்து இடங்களை இப்படித்தான் சொன்னார்கள்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்தும் இறுதி இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் இசையுடன் தொடர்புள்ள ஓர் சொல் வரும்.
 
3. இறுதி ஐந்து எழுத்தக்களும் சேர்ந்தால் சுற்றுப்புறம் என்றும் சொல்லலாம்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

 

சுற்றுவட்டாரம்??

2. சுரம்

3. வட்டாரம்

  • தொடங்கியவர்
மிகவும் சரியான சொல் சுற்று வட்டாரம்
 
சுற்று வட்டாரம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
களம் 67.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
ஒவ்வொரு தரவிலும் இரண்டு எழுத்துக்கள் விடுபட ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. இதைத் தொந்தரவு என்றும் சொல்லலாம்                                                                      -----------------------------------------
 
2. பெருஞ்சீரகத்தை இப்பெயர் கொண்டும் அழைக்கலாம்.                                              -----------------------------------------
 
3. இந்தியாவின் தமிழ் நாட்டு மாவட்டங்களில் இதுவும் ஒன்று                                    -----------------------------------------
 
4. இச்சொல் என்றதும் மகாபாரதம் தான் நினைவில் வரும்                                          ------------------------------------------
 
5. சிறுமழையை இப்படியும் சொல்லலாம்                                                                          ------------------------------------------
 
6. அன்னத்தின் இறகை இப்படியும் அழைக்கலாம்                                                            ------------------------------------------
 
7. இது கை காலில் மட்டுமல்ல நாக்கிலும் உண்டாம்                                                      -------------------------------------------
 
8. கவிதையில் இரண்டாம் எழுத்துடன் ஒன்றி வருவது                                                -------------------------------------------
 
9. ஒரு துறையின் செயல் முறைகளை விளக்கும் சிறிய நூல்                                      -------------------------------------------
 
10. உச்சியை இவ்வாறும் கூறலாம்                                                                                     -------------------------------------------.
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

.1. இம்சை  2.  சோம்பு .3..சேலம் ..4..அம்பு  5. மேகம்       6.   தும்பு      7. வம்பு         

 

 

 

8.  வீம்பு  9, மேம்பு   10. கூம்பு

  • கருத்துக்கள உறவுகள்

01. இம்சை

02. சோம்பு

03. புதுகை

04. துகில்

05. தூறல்

06. தூலிகை

07. இரேகை

08. எதுகை

09. கையேடு

10. வகிடு

  • கருத்துக்கள உறவுகள்

 

களம் 67.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்துக்களில் அமைந்துள்ளன.
 
ஒவ்வொரு தரவிலும் இரண்டு எழுத்துக்கள் விடுபட ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. இதைத் தொந்தரவு என்றும் சொல்லலாம்                                                                      ------இம்சை -----------------------------------
 
2. பெருஞ்சீரகத்தை இப்பெயர் கொண்டும் அழைக்கலாம்.                                              ---------சோம்பு--------------------------------
 
3. இந்தியாவின் தமிழ் நாட்டு மாவட்டங்களில் இதுவும் ஒன்று                                    ------- புதுகை ----------------------------------
 
4. இச்சொல் என்றதும் மகாபாரதம் தான் நினைவில் வரும்                                          --------துகில் ----------------------------------
 
5. சிறுமழையை இப்படியும் சொல்லலாம்                                                                          ----------தூறல்--------------------------------
 
6. அன்னத்தின் இறகை இப்படியும் அழைக்கலாம்                                                            ------------------------------------------
 
7. இது கை காலில் மட்டுமல்ல நாக்கிலும் உண்டாம்                                                      -------------------------------------------
 
8. கவிதையில் இரண்டாம் எழுத்துடன் ஒன்றி வருவது                                                ---------எதுகை----------------------------------
 
9. ஒரு துறையின் செயல் முறைகளை விளக்கும் சிறிய நூல்                                      --------கையேடு-----------------------------------
 
10. உச்சியை இவ்வாறும் கூறலாம்                                                                                     -------------வகிடு------------------------------.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.