Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைக்க சொன்னேன்.!! மாண்புமிகு "Dr.சுப்ரமணிய சாமி" , தந்தி டிவிக்கு பகீர் பேட்டி..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் படகுகளை நான்தான் பிடித்துவைக்க சொன்னேன்.!!

மாண்புமிகு "Dr.சுப்ரமணிய சாமி" , தந்தி டிவிக்கு பகீர் பேட்டி..!!

 

https://www.facebook.com/video/video.php?v=618585048257812

 

 

10606085_494868490616810_401880955714118

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு சனி வாயில குடியிருக்குது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பின் ஒரு பகுதியை.... வாசித்து விட்டு...
உள்ளே சென்று பார்க்க முதல்.......
யார் சொல்லியிருப்பார்கள் என்று மனதிற்குள் யோசித்த போது... முதலில் சுப்பிரமணிய சாமியின் பெயர் தான் வந்தது.

 

எப்பிடியான ஒரு ஜென்மம் இவனை.
தமிழ்நாட்டுப் பக்கம் கால் வைக்கவே.... விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் படகுகளை சிறைபிடிக்க சொன்னது நானே:

சு.சுவாமி திடுக் பேட்டி! பல இடங்களில் கொடும்பாவி எரிப்பு!!

 

சென்னை: தமிழக மீனவர்களை விட்டுவிடுங்கள், ஆனால் அவர்களது படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கை அரசுக்கு தான் ஆலோசனை வழங்கியதாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி திடுக்கிடும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

 

நான் கடைசியாக இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள், தொழிலாளர்கள் அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்துவிடுங்கள்.

 

01-subramanian-swamy344-600.jpg

 

ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள் பணக்காரர்கள். தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பான தமிழர்களும் கூறுகின்றனர்.

 

எனவே, எல்லைதாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டுவிடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன்.

அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

கொடும்பாவி எரிப்பு

 

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியை இன்று எரித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

அந்த ஆள் எமக்கு ஆதரவாகத்தானே சொல்லியிருக்கு ? எமது மீனவர்கள் நிட்சயம் இதை வரவேற்பார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் அடைக்கலநாதன் இது பற்றி இறுதி ஐந்து நிமிடத்தில் தெளிவாக தெரிவித்துள்ளார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.