Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நட்புக்கு இலக்கணம்


Recommended Posts

நட்புக்கு இலக்கணம்

நான் கண்டு கொண்டேன்...

நங்கை அவளிடம்..

ஆணுக்கும் பெண்ணுக்கும்..

காதலும்.. காமமும்தான்

பாலம் போடுமா..

இல்லை...

நட்புப்பாலத்தில்..

நானும் அவளும்..

அவள் என் வாழ்வுக்கு

ஒளி தந்த

வெண்ணிலவு..

என் தாயைப்போல..

அவள்..என் துயருக்கு

தோள் தந்த

தோழி..

என் மனைவி போல..

அவள் என் சிரிப்புக்கு

சேதி சொன்ன

சினேகிதி

ஆருயிரைப்போல..

அவள் என் துயிலுக்கு

மடி தந்த

நாயகி

நான் மழலை போல...

அவள் என் சோர்வுக்கு

விடை தந்த

தாதி

என் தந்தை போல...

அவள் கண்ணீரால்..

என்னைக்

காயப்படுத்தியிருக்கிறாள்...

என் கண்ணீரால்

நான்

அவளைக்குணப்படுத்தியிருக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்புக்கு இலக்கணம்

எங்கள் நட்பை யாராவது..

காதல் எழுத்துக்களால்

களங்கம் செய்துவிடுவார்கள்..

என்ற கலக்கம்

எனக்குமில்லை..அவளுக்குமில்லை

.

ஏனென்றால்..

அம்மா..அப்பா...

அண்ணா..அக்கா..

மனைவி..கணவன்..

எல்லா உறவுகளையும்

பிரதிபலிக்கும்

எங்கள் நட்பை

வெறும் கணவன்..மனைவியாக்கி..

கூறுபோட

இருவருக்குமே..

ஈடுபாடில்லை...

நாங்களும்

பரிஸித்துக்கொள்கிறோம்..

இது..

மழலைக்கரங்கள்..

பட்டுக்கொண்ட பரிசம்..

அம்மா விரலைப்

பற்றிக்கொண்ட பரிசம்..

ஆயுள்வரை..

தொற்றிக்கொண்ட பரிசம்..

ம்..ம்..நல்லாத்தான் சொல்லியிருக்கிறீங்க கவிஞரே. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

எங்கள் நட்பை யாராவது..

காதல் எழுத்துக்களால்

களங்கம் செய்துவிடுவார்கள்..

என்ற கலக்கம்

எனக்குமில்லை..அவளுக்குமில்லை

.

வாவ் அருமையான வரிகள். இப்படியே ஆண் பெண் நட்புகள் நீடித்து நிலைத்திருக்க வாழ்த்துக்கள். கலங்கமில்லாமல் வாழும் நட்பே சிறந்த நட்பு. வாழ்த்துக்கள். :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நட்பை யாராவது..

காதல் எழுத்துக்களால்

களங்கம் செய்துவிடுவார்கள்..

என்ற கலக்கம்

எனக்குமில்லை..அவளுக்குமில்லை

.

உங்கள் கவிதை அழகு விகடகவி சார்

ஆனால் மேலே குறிப்பிட்ட வரிகள் வாழ்வில் சாத்தியமில்லை

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை அழகு விகடகவி சார்

ஆனால் மேலே குறிப்பிட்ட வரிகள் வாழ்வில் சாத்தியமில்லை

விகடகவிக்கு சொல்ல நிலா பதில் சொல்லுறா என நினைக்காதீங்க. அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன்

ஏன் மேற்குறிப்பிட்ட வரிகள் சாத்தியமில்லை?

ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதில் என்ன தவறு? அப்படி பழகினால் நம் குருட்டு சமுதாயம் தப்பாக நினைக்கும். அதையும் தாண்டி நட்பாக பழகினால் தப்பா? ஒரு ஆணும் பெண்ணும் எப்படித்தான் அன்போடு களங்கமில்லாமல் பழகினால் சமுதாயம் அவர்கள் மீது வீண்பழிச் சொல்லை சுமத்தி அவ்நட்பை கொச்சைப்படுத்துவார்களே தவிர வேறேதும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற இக்காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மாசற்ற நட்போடு வாழ்வது பெரிய விடயமில்லையே. :arrow:

Link to comment
Share on other sites

விகடகவிக்கு சொல்ல நிலா பதில் சொல்லுறா என நினைக்காதீங்க. அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன்

ஏன் மேற்குறிப்பிட்ட வரிகள் சாத்தியமில்லை?

ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதில் என்ன தவறு? அப்படி பழகினால் நம் குருட்டு சமுதாயம் தப்பாக நினைக்கும். அதையும் தாண்டி நட்பாக பழகினால் தப்பா? ஒரு ஆணும் பெண்ணும் எப்படித்தான் அன்போடு களங்கமில்லாமல் பழகினால் சமுதாயம் அவர்கள் மீது வீண்பழிச் சொல்லை சுமத்தி அவ்நட்பை கொச்சைப்படுத்துவார்களே தவிர வேறேதும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற இக்காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மாசற்ற நட்போடு வாழ்வது பெரிய விடயமில்லையே. :arrow:

தப்பில்லாத விடயத்தை

தப்பாக புரிந்து கொண்டால்

தப்பில்லாத தப்பு

தாப்பாக போயிடுதே

யாருக்காவது புரிந்துதா :wink:

Link to comment
Share on other sites

வாவ் அருமையான வரிகள். இப்படியே ஆண் பெண் நட்புகள் நீடித்து நிலைத்திருக்க வாழ்த்துக்கள். கலங்கமில்லாமல் வாழும் நட்பே சிறந்த நட்பு. வாழ்த்துக்கள். :P :P :P

நன்றி வெண்ணிலா

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை அழகு விகடகவி சார்

ஆனால் மேலே குறிப்பிட்ட வரிகள் வாழ்வில் சாத்தியமில்லை

ஏன் சாத்தியமில்லை..

சின்னப்பராயம் முதல்..

ஒன்றாக வளர்ந்தோம்..

எங்கள் நட்பை குறை சொல்லாதீர்கள்... கறுப்பி

:twisted: :twisted: :twisted: :evil:

Link to comment
Share on other sites

விகடகவிக்கு சொல்ல நிலா பதில் சொல்லுறா என நினைக்காதீங்க. அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன்

ஏன் மேற்குறிப்பிட்ட வரிகள் சாத்தியமில்லை?

ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதில் என்ன தவறு? அப்படி பழகினால் நம் குருட்டு சமுதாயம் தப்பாக நினைக்கும். அதையும் தாண்டி நட்பாக பழகினால் தப்பா? ஒரு ஆணும் பெண்ணும் எப்படித்தான் அன்போடு களங்கமில்லாமல் பழகினால் சமுதாயம் அவர்கள் மீது வீண்பழிச் சொல்லை சுமத்தி அவ்நட்பை கொச்சைப்படுத்துவார்களே தவிர வேறேதும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற இக்காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மாசற்ற நட்போடு வாழ்வது பெரிய விடயமில்லையே. :arrow:

அட்றா..அட்றா...அட்றா...

வெண்ணிலா..எப்படி என் மனதைப் படம்பிடித்தீர்கள்

நன்றி

Link to comment
Share on other sites

ஆண்' date=' பெண் நட்புக்கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் விகடகவி[/color']

நன்றி இலக்கியா

Link to comment
Share on other sites

தப்பில்லாத விடயத்தை

தப்பாக புரிந்து கொண்டால்

தப்பில்லாத தப்பு

தாப்பாக போயிடுதே

யாருக்காவது புரிந்துதா :wink:

போச்சுடா...

என்ன இலக்கியரே..

யாராவது மப்பில சொன்னது

காதில விழுந்திட்டுதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்தியமில்லை..

சின்னப்பராயம் முதல்..

ஒன்றாக வளர்ந்தோம்..

எங்கள் நட்பை குறை சொல்லாதீர்கள்... கறுப்பி

:twisted: :twisted: :twisted: :evil:

உங்கள் நட்பை குறை சொல்லவில்லை விகடகவி சார்.

என் வாழ்வின் நிதர்சனத்தை சொன்னன்

Link to comment
Share on other sites

அட்றா..அட்றா...அட்றா...

வெண்ணிலா..எப்படி என் மனதைப் படம்பிடித்தீர்கள்

நன்றி

நான் படம்பிடிக்கவில்லை. அதுசரி மனதை படம்பிடிக்கலாமா? :wink: அப்படி எதுவும் இல்லை விகடகவி நட்பை நேசிப்பவர்கள், காதலையும் நட்பையும் பிரித்தறிபவர்கள், எவராக இருந்தாலும் நான் சொன்னதை தான் சொல்லியிருப்பார்கள். :P நன்றி

Link to comment
Share on other sites

நான் படம்பிடிக்கவில்லை. அதுசரி மனதை படம்பிடிக்கலாமா? :wink: அப்படி எதுவும் இல்லை விகடகவி நட்பை நேசிப்பவர்கள், காதலையும் நட்பையும் பிரித்தறிபவர்கள், எவராக இருந்தாலும் நான் சொன்னதை தான் சொல்லியிருப்பார்கள். :P நன்றி

உண்மைதான்...

புரிந்துணர்விருந்தால் யார் வேணுமானாலும் சொல்லலாம்..

Link to comment
Share on other sites

வாவ் நல்லதொரு கவி நட்புக்கு நல்லதொரு இலக்கணம் உண்மையிலே இப்படியான உண்மையான நட்பை தற்காலிக உலகில் கேட்பதே அரிது வாழ்த்துக்கள் தங்கள் நட்பு தொடர.

Link to comment
Share on other sites

வாவ் நல்லதொரு கவி நட்புக்கு நல்லதொரு இலக்கணம் உண்மையிலே இப்படியான உண்மையான நட்பை தற்காலிக உலகில் கேட்பதே அரிது வாழ்த்துக்கள் தங்கள் நட்பு தொடர.

நன்றி சந்தியா

Link to comment
Share on other sites

உண்மையான நட்பில் சந்தேகபடுவதற்கு எதுவுமில்லை.

வாழ்துக்கள் விகடகவி.

ம்..ஆனால்...

சமுதாயக்கண்ணோட்டமும்..

பேச்சுக்களும் அப்படியில்லையே என்ன செய்வது...

நன்றி வாசகன்..

Link to comment
Share on other sites

ம்..ஆனால்...

சமுதாயக்கண்ணோட்டமும்..

பேச்சுக்களும் அப்படியில்லையே என்ன செய்வது...

நன்றி வாசகன்..

சமுதாயத்தை பார்த்து பயந்தால் எதுவுமே செய்ய முடியாது. சமுதாயத்துக்கு எல்லாமே கெட்டதாக தான் புலப்படும் :twisted: எது நல்லதென மனதில் படுதோ அதன்படி செய்வது உத்தமம் :P :arrow:

Link to comment
Share on other sites

நட்புக்கு இலக்கணம்

நான் கண்டு கொண்டேன்...

நங்கை அவளிடம்..

ஆணுக்கும் பெண்ணுக்கும்..

காதலும்.. காமமும்தான்

பாலம் போடுமா..

இல்லை...

நட்புப்பாலத்தில்..

நானும் அவளும்..

ஆண் பெண் நட்பு குறித்த நல்ல கருத்துக்களை கொண்ட கவி எழுதிய விகடகவிக்குப் பாராட்டுக்க: நண்பனோ நண்பியோ எதுவாக இருந்தாலும் வாழ்க்கையில் நல்ல நட்பு கிடைத்தால் நம்து சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் வாழ்கையை எதிர்கொண்டு வாழவும் மிக மிக உதவியாக இருக்கும். ஆனால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை. உங்களுக்கு கிடைத்து இருக்கு எனும் போது மகிழ்வாக இருக்கிறது. உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம் ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................
    • முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024     15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டது. அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அதே தீங்கற்ற செயல்பாடு சிறிலங்கா அரசால் தடை உத்தரவுகள், கைதுகள் மற்றும் மிரட்டல்களுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. Southend-on-Sea நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்களில் ஒருவரான திருமதி நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது என்றார். நிகழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்திற்கு முன் அவர் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவராலும் நினைவு விளக்குகளும், மலர்களும் கடலில் காணிக்கையாக விடப்பட்டன. ஒளிரும் விளக்குகள் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவு சுமந்து ஆழ்கடல் நோக்கி மிதந்து சென்றன. மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-படுகொ-7/  
    • பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன் 15 ஆண்டுகள் சென்றுவிட்டன. இப் 15 ஆண்டுகளில் தமிழரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. ஐநாவில் சான்றுகளைத் திரட்டும் ஒரு பலவீனமான பொறிமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பாக கனடாவில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இமாலயப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் அங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இவற்றைவிட முக்கியமாக இறுதிக்கட்டப் போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள். அதாவது 15ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும் சித்திரம் என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் உடைந்து கொண்டே போகிறார்கள். நினைவு கூர்தல்தான் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சி புள்ளியில் ஒன்றுகூட்டி வைத்திருக்கிறது. அதே நினைவு கூரும் விடயத்தில், தமிழ்ச் சமூகத்தில் உடைவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் கட்சிகளாய்; அமைப்புகளாய்; குழுக்களாய்; கொள்கைகளாய்; பிரகடனங்களாய்; ஊர்களாய்; சங்கங்களாய்; வடக்காய்; கிழக்காய்; சமயமாய்; சாதியாய் ;இன்ன பிறவாய் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை, நினைவு நாட்கள்தான் ஓரளவுக்காவது உணர்வுபூர்வமாக ஒன்றுகூட்டி வைத்திருக்கின்றன. அதனால்தான் அரசாங்கம் நினைவுகளைக் கண்டு பயப்படுகின்றது. நினைவின் குறியீடாக தமிழ் மக்களால் உருவகப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியை அரசாங்கம் ஒரு குற்றப் பொருளாகப் பார்க்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்த களத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு “தமிழ் சிவில்சமூக அமையம்” உணவையே நினைவுப் பொருளாக உபயோகித்தது. அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. இப்பொழுது அந்த உணவையே அதாவது, நினைவையே ஒரு குற்றமாக அரசாங்கம் பார்க்கின்றது. சில நாட்களுக்கு முன், திருகோணமலையில் உணவு ஒரு குற்றமாகக் காட்டப்பட்டது. இறுதிக்கட்டப் போரில் ஒடுங்கிய கடற்கரைக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் மத்தியில் கஞ்சி இருந்தது; போண்டா இருந்தது; ரொட்டி இருந்தது. இதில் கஞ்சியானது தமிழ்ப் பண்பாட்டில் வெவ்வேறு பண்பாட்டு நிகழ்வுகளோடு சம்பந்தப்படுகின்றது. அது மிக எளிமையான உணவு. ஆனால் தமிழ் வீடுகளில் காய்ச்சும் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒன்று அல்ல.ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய்க்குத் தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே அது ஒரு பால் இல்லாத கஞ்சி. அரிசியை கிடாரத்தில் போட்டு நீர் விட்டு, உப்புப் போட்டு வேக வைப்பார்கள். அரிசி வெந்ததும் அதில் இரண்டு பால்மா பக்கெட்டுகளை உடைத்துக் கரைத்து அதில் சேர்ப்பார்கள். அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. அது தேங்காய்ப் பாலற்றது. பயறு இல்லாதது. ருசியற்றது. அந்த ருசியின்மைக்குள் அதன் அரசியல் செய்தியிருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் ஒரு கொடிய போர்க்களத்தின் நினைவு இருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் இனப்படுகொலையின் பயங்கரம் இருக்கின்றது. அந்த ருசியின்மைக்குள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நீதிக்கான தாகம் இருக்கிறது. அந்த ருசியின்மைதான் இனப்படுகொலையின் ருசி. அந்த ருசியின்மைதான் மரணத்தின் ருசி. கூட்டுக் காயங்களின் ருசி. கூட்டு மனவடுக்களின் ருசி. சுற்றி வளைக்கப்பட்டிருந்த; தனித்து விடப்பட்டிருந்த ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கண்ணீரின் ருசி; ரத்தத்தின் ருசி.தோல்வியின் ருசி; ஒரு யுகமுடிவின் ருசி. அந்த ருசியை தலைமுறைகள் தோறும் கடத்தும் பொழுது ஏன் அது ருசியாயில்லை என்ற கேள்வி வரும். அந்த ருசியின்மைக்குப் பின்னால் மேலும் பல கேள்விகள் அவிழும். ஒடுங்கிய சிறிய கடற்கரையில் ஏன் அந்த மக்கள் தனித்துவிடப்பட்டார்கள்?அருகில் இருந்த தமிழகம் ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? முழு உலகமுமே ஏன் அவர்களை காப்பாற்றவில்லை? உலகப் பெரு மன்றங்களான ஐநா போன்றவை ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அவர்களை நோக்கி அனுப்பப்பட்ட” வணங்கா மண் “என்ற கப்பல் ஏன் வந்து சேரவில்லை? என்ற கேள்விகளை  அந்த ருசியின்மை எழுப்பும். அந்த ருசியின்மையை தலைமுறைகள் தோறும் கடத்தும் போதுதான் நீதிக்கான போராட்டம் மேலும் வலுப்பெறும். மட்டுமல்ல, தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடியும். அந்த ருசியின்மைக்குள் இருக்கும் கேள்விகளை வீடுகள் தோறும் கேட்டு அதற்கு பதில் கொடுக்க வேண்டும். மூத்த தலைமுறை அதைச் செய்ய வேண்டும். தமிழ் வீடுகளில் சாப்பாட்டு மேசைகளில்; பாடசாலைகளில்; பொது இடங்களில்; என்று எல்லா இடங்களிலும் அந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.அது நினைவுகளைக் கடத்தும் ஒரு பொறிமுறை மட்டுமல்ல, அதைவிட ஆழமாக அது ஓர் அறிவூட்டும் செய்முறை.அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தோற்காமல் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுக்கும்.எனவே அந்த நினைவுகளைப் பரிமாற வேண்டும். தலைமுறைகள் தோறும் கடத்த வேண்டும். உலகில் பொதுவாக எல்லா மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் கதை சொல்லும் பாரம்பரியம் உண்டு. உறங்கும் நேரக் கதைகள்;பாட்டி செல்லும் கதைகள் என்று பலவாறாகக் கதை சொல்லும் பாரம்பரியங்கள் உண்டு. இவ்வாறு கூறப்படும் பல கதைகள் நீதிநெறிக் கதைகள். ஈழத் தமிழர்கள் அதைவிட மேலதிகமாக நீதிக்காகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கதைகளை தமது அடுத்த தலைமுறைக்குக் கூறவேண்டும். நீதிக்கான போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் எங்கே தேங்கி நிற்கிறார்கள்? என்பதனைச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டவேண்டும்.எனவே கஞ்சியின்மூலம் கடத்தப்படும் நினைவுகள் அல்லது கேள்விகள் எனப்படுகின்றவை,ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்கு இறந்த காலத்தின் நினைவுகளைப்  பகிர்வது, கடத்துவது என்பது பழைய காயத்தை திரும்பத்திரும்பக் கிண்டி இரத்தம் பெருகச் செய்யும் வேலை என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டுவார்கள். காயங்களைக் கிண்டாதீர்கள். அயர் மூடிய காயங்களின் அயரை உரித்து அதை புதுப்பிக்காதீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டும். காயம் எப்பொழுது ஆறியது? காயங்கள் ஆறவில்லை. அவை எப்பொழுதும் உண்டு. புதிய காயங்களும் உண்டு. மயிலத்தமடுவில் குருந்தூர் மலையில் வெடுக்கு நாறி மலையில் புதிய காயங்கள் உண்டு. ஓர் உணவை அதாவது நினைவை குற்றமாகப் பார்க்கும் அரசியல் காயங்களை ஆற விடாது.ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கூட்டுக் காயங்கள் ஆறாதவை. அவை ஆறாதவை என்பதனால்தான் அவற்றைக் குறித்து உரையாட வேண்டியிருக்கிறது. அவற்றை எப்படி சுகப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீன கவிஞர் ஒருவர் எழுதினார் “குணப்படுத்தவியலாத ஒரு காயமாக” நினைவைப் பேணுவது என்று. அதுதான் உண்மை. ஈழத் தமிழர்களின் கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் குணப்படுத்தப்படாதவை. அதற்கான குணமாக்கல் செய்முறைகளை சிறு தொகை மருத்துவர்கள் மட்டுமே முன்னெடுக்கின்றார்கள். அதற்கும் போதிய அளவு மனநல மருத்துவர்கள் கிடையாது. அது மட்டுமல்ல,அது மருத்துவர்களால் மட்டும் சுமக்கப்படக்கூடிய ஒரு சுமை அல்ல. அது ஒரு கூட்டுச் சுமை. கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மன வடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சை தான் இருக்கலாம். தனிய மருத்துவர்கள் மட்டும் அதைச் சமாளிக்க முடியாது. தவிர்க்க முடியாதபடி அது ஓர் அரசியல் பண்பாட்டுச் செய்முறையாகத்தான் இருக்கலாம். அதற்குப் பொருத்தமான அரசியல் தலைமை வேண்டும். அத்தலைமையின் கீழ் குடிமக்கள்சமூகங்கள்; மதத்தலைவர்கள்; கருத்துருவாக்கிகள்; புத்திஜீவிகள்;படைப்பாளிகள் என்று எல்லாத் தரப்புக்களும் இணைக்கப்பட வேண்டும். கூட்டுச் சிகிச்சையானது மேலிருந்து கீழ் நோக்கியும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்யப்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்க வேண்டும். அது அரசியல் தீர்வாக அமைய வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரான நீதியாக அது அமைய வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி அந்தத் தீர்வை நோக்கி தமிழ்மக்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டம்தான் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்யும். தமிழ்மக்கள் இப்பொழுது சிதறிப் போய் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக; ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக;எல்லாருக்கும் பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக; கட்சிகளாக; வடக்குக் கிழக்காக;சமயமாக; சாதியாக இன்னபிறவாக சிதறிப்போய் இருக்கிறார்கள். அதேசமயம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு புலம்பெயரும் தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள்,உயர் உத்தியோகங்களில் இருந்தவர்கள் என்ற வகையினரும் அடங்குவர். இவ்வாறாக மூளைசாலிகளும் தொழில் அனுபவம் மிக்கவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைத் திரட்டுவது எப்படி? ஒருவர் மற்றவரை நம்பாமல் சமூகத்தைத் திரட்ட முடியாது. ஒருவர் மற்றவரை நம்புவதில் இருந்துதான் சமூகத் திரட்சி தொடங்குகின்றது. எனவே நம்பிக்கை முக்கியம். சமூகத்துக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். புலம்பெயரும் தலைமுறைக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கையைக் கொடுக்க யார் உண்டு? அந்தக் கூட்டு நம்பிக்கைதான் கூட்டுத்தோல்வி மனப்பான்மையிலிருந்தும்,கூட்டுக் காயங்களில் இருந்தும், கூட்டு மனவடுக்களில் இருந்தும் ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலை செய்யும். ஈழத் தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கிறார்கள். எல்லாப் பேரரசுகளுக்கும் அவர்கள் தேவை. தமிழ் மக்களின் இக்கேந்திர முக்கியத்துவத்தை தமிழ் மக்களே உணராதிருக்கிறார்கள். அனுமார் தன் பலத்தை தானே அறியாதிருந்ததுபோல. தமிழ் மக்களுக்கு அவர்களின் பலத்தை உணர்த்தி,அவர்களைப் பலமான திரளாக்கி,அவர்களை கூட்டு அவநம்பிக்கையிலிருந்து விடுவிப்பதுதான் கீழிருந்து மேல் நோக்கிய கூட்டுச் சிகிச்சையாக அமையும்.அதுதான் கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும்.அதுதான் உண்மையான நினைவு கூர்தலாக அமையும்.   https://www.nillanthan.com/6761/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.