Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிவிப்பு

 

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றே மாதங்களில்3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். 

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இவர்கள் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். 

ஐ.எஸ்.ஐ.எஸ். என்றிருந்த தங்களது இயக்கத்தின் பெயரை ஐ.எஸ். என்று சமீபத்தில் சுருக்கிக் கொண்ட இவர்களது படையில் இணைய பலரும் முயன்று வருவதாக தெரிகின்றது.

இந்தப் படையில் அமெரிக்கா, பிரிட்டைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து சிரியா மற்றும் ஈராக் ராணுவத்தினருடன் போரிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவை சேர்ந்த சுமார் 100 இஸ்லாமிய இளைஞர்களும் இந்தப் படையில் சமீபத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டைனை சேர்ந்த சுமார் 600 இஸ்லாமிய இளைஞர்கள்  ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் இணைந்து சிரியா மற்றும் ஈராக்கில் போராடி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சுமார் 10 ஆயிரம் போராளிகள் இருக்கக்கூடும் என்று உலக நாடுகள் கூறி வந்தன. அமெரிக்காவின் மதிப்பீடும் இதுவாகதான் இருந்தது.
கடந்த மே மாதம் சுமார் 10 ஆயிரம் பேர் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதப் படையில் தற்போது சுமார் 31,500 உள்ளனர் என்று அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சி.ஐ.ஏ.வின் செய்தித் தொடர்பாளர், ’கடந்த மே மாதத்துக்கு முன்னர் வரை எங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்களின்படி, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதப் படையில் சுமார் 10 ஆயிரம் போராளிகள் வரை இருக்கக்கூடும் என்று கருதப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையிலான 4 மாத காலத்தில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து விட்டது. அந்தப் படையில் தற்போது 20 ஆயிரம் முதல் 31 ஆயிரத்து 500 போராளிகள் வரை உள்ளதாக தெரியவந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2014/09/12112535/ISIS-fighters-estimate-triples.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்னும் 30 வருடத்திற்கு உங்களுக்கு வருமானத்திற்கு பிரச்சனையில்லை......அமேரிக்கனா கொக்கா?....

அப்ப இன்னும் 30 வருடத்திற்கு உங்களுக்கு வருமானத்திற்கு பிரச்சனையில்லை......அமேரிக்கனா கொக்கா?....

எப்பிடி எண்டு தெரியேல்லை நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்... :icon_mrgreen:

 

ISIS அமைப்பு  இதுவரை அமெரிக்காவையோ இல்லை மேற்க்கு நாடுகளையோ இல்லை  இஸ்ரேலையோ பலவீனப்படுத்த இல்லை...     

 

அது அல்கைதாவையும்,  ஈராக்கிய பொருளாதாரத்தையும் , சிரியாவையும் , இஸ்லாமியர்களின் போராட்டத்துக்கான வலுவான காரணங்களையும் ,  மற்றும் இஸ்லாமியர்களின் போர் மீதான  ஆதரவு நிலைப்பாட்டையும்  வலுவற்ற தாக்கி கொண்டு இருக்கிறது... 

 

அதாவது அமெரிக்காவின் எண்ணத்தை ஈடேற்றுமா போல தான் இருக்கிறது... 

 

யார் அறிவார்  ISIS ன் தலைவர்  " அபுபக்கர் அல் பஹாடி"   2005 ம் ஆண்டு அமெரிக்க சிறைக்கைதியாக இருந்து 2009 ம்  ஆண்டு வெளியில் குற்றம் அற்றவர் எண்டு விடப்பட்ட ஒரு பொறியியலாளராம்...    அவர் அல்கைதாவில் இணைந்து  ஈராக் முழுவதுக்குமான தளபதியாக உயர்ந்து  அல்கைதாவில் இருந்து முழு அமைப்பையும் பிரித்து   சிரியாவுக்குள்  அமெரிக்க மேற்க்கு நாடுகள் நிதி உதவுயுடன் போருக்கு போனவர்களின் தலைவராம்... 

 

இது பலஸ்தீனிய தொலைக்காட்சி  ISIS பற்றி ஒளிபரப்பிய ஒரு  நாடகம்... 

 

https://www.youtube.com/watch?v=K5nigZzgf4Y

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.