Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் வீழ்ச்சி; ஊவா தேர்தல் சொல்லும் அழுத்தமான செய்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மயிரிழையில் தப்பிப்பிழைத்து ஊவா மாகாண சபையைக் கைப்பற்றியிருக்கிறது. ஊவா மாகாண சபையில் மொத்தமுள்ள 34 ஆசனங்களில் 2 போனஸ் ஆசனங்கள் தவிர்ந்து, 32 ஆசனங்களுக்கு உறுப்பினர்களை நேரடியாகத் தேர்தெடுக்கும் தேர்தலில் 17 ஆசனங்களையே ஆளும் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இது, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெற்ற 23 ஆசனங்களைக் காட்டிலும், 6 ஆசனங்கள் குறைவாகும். சுமார் 75000 வாக்குகள் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பெரும் நெருக்கடி கொடுத்து 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 2009ஆம் ஆண்டுத் தேர்தலில் சுமார் 130000 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை மட்டும் பெற்றிருந்த நிலையில், இம்முறை சுமார் 145000 வாக்குளை அதிகமாகப் பெற்றிருக்கிறது. இது, ஒப்பீட்டளவில் பெரு முன்னேற்றமாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை வெற்றிபெற்ற 17 ஆசனங்களுடன், போனஸாக கிடைக்கும் 2 ஆசனங்களையும் சேர்த்து 19 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கின்றது. ஆனால், போனஸ் ஆசனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் கட்சிக்கும் இடையில் மொத்த ஆசனங்களின் வித்தியாசம் 2 மட்டுமே. அதாவது, எதிர்க்கட்சி வரிசையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும் பெற்றிருக்கிறது.

மஹிந்தவின் வீழ்ச்சி வடக்கு மாகாண சபைத் தேர்தலோடு ஆரம்பித்துவிட்டது என்ற கூற்று முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஊவா மாகாண சபைத் தேர்தல் அதைப் இன்னும் அழுத்தமாக பிரதிபலித்திருக்கிறது. குறிப்பாக, ராஜபக்ஷவின் வீட்டுப்பிள்ளை (சஷீந்திர ராஜபக்ஷ- சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன்) முதலமைச்சராக இருந்த மாகாண சபை, இம்முறையும் அவரையே முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டிருந்தது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு. இவ்வாறான நிலையில், இந்த வீழ்ச்சி அரசாங்கத்தை இன்னமும் பதற்றமடைய வைக்கும்.

ஏற்கனவே நடந்து முடிந்த மேல், வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல்களைக் காட்டிலும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முக்கியத்தும் இருக்கின்றது. ஏனெனில், எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தேர்தலை பரீட்சார்த்தக் களமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்தியிருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றியை ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தந்திருக்கவில்லை என்று கொள்ளலாம். ஏனெனில், 750000 வாக்குகளில் இழப்பு என்பதற்குப் பதிலாக, கடந்த தேர்தல்கள் பலவற்றில் வாக்களித்திருக்காதிருந்த குறிப்பிட்டளவான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலர் இம்முறை தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். அதனாலேயே, 145000 வாக்குகள் அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அதிகமாக பெற முடிந்திருக்கிறது. இது, பாரிய மாற்றம்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் பெருவெற்றியைப் பெற முடிவது தொடர்பில் அசண்டையீனமாக மஹிந்த ராஜபக்ஷவால் இருக்க முடியாது. மாறாக, 2010 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த பெருவெற்றிக்குப் பதிலாக பெரும் நெருக்கடியான வெற்றியொன்று குறித்தே அவர் சிந்திக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த பெரும் எழுச்சி அரசாங்கத்தை பெருமளவில் ஆட்டம் காண வைக்கும்.

கடந்த மாகாண சபைத் தேர்தலைக் காட்டிலும், ஊவா மாகாண சபைத் தேர்தலில் இம்முறை அதிகளவான வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. அரசாங்கமும்- எதிர்க்கட்சிகளும் பெருமெடுப்பிலான பிரசார பணிகளை முன்னெடுத்தன. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சி ரணில்- சஜித் இணைவு பெரும் நம்பிக்கையைக் கொடுத்த நிலையில், மக்களைச் சந்திக்க வைத்தது. அது, அதிகளவில் பலனையும் அளித்திருக்கிறது. இந்த நிலை, எதிர்காலத்திலும் தொடரும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கலைக் கொடுக்கலாம்.

அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்த முடியாவிட்டாலும், அடுத்த பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கும் கனவு நோக்கி ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையோடு பயணிக்கலாம். ஏனெனில், சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ஆட்சி மீதான அதிருப்தி ஏற்பட்டு நீண்ட காலமாகிறது. போரை வெற்றி கொண்டவர் என்ற பிம்பம் மெல்ல மறைந்து அதிருப்தி மேலெழுந்து வருகிறது. இதனை, ஐக்கிய தேசியக் கட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் வெற்றிக் கனியை ருசிக்கலாம்.

சர்வதேச ரீதியில் பெரும் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சிங்கள பெரும்பான்மை மக்களும் மெல்ல கைவிட ஆரம்பிக்கிறார்கள். அதனையே, ஊவா மாகாண சபைத் தேர்தலும் உணர்த்தியிருக்கிறது!

http://4tamilmedia.com/special/news-review/25975-2014-09-21-04-39-11

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.